சாக்‌ஷி தோனி எழுத்தில் தோனி தயாரிக்கும் முதல் சினிமா இதுதான்

சாக்‌ஷி தோனி எழுத்தில் தோனி தயாரிக்கும் முதல் சினிமா இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்..

சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு, குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகும் அந்த படைப்பு விரைவில் தொடங்குகிறது.

இந்நிறுவனம் அனைத்து மொழிகளிலும் பொழுதுபோக்கு அம்சம் உள்ள திரைப்படங்களை தயாரிப்பதற்காக களம் இறங்கி இருக்கிறது.

இதற்கான பல கட்ட தயாரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு பிரபலமான ‘ரோர் ஆஃப் தி லயன்’ எனும் ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பு துறையில் தனக்கென தனித்துவமான நற்பெயரையும் பெற்றுள்ளது. ‘ வுமன்’ஸ் டே அவுட் ‘ என்ற பெயரில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்திருக்கிறது.

இந்திய அளவில் பிரபலமான நட்சத்திர கிரிக்கெட் வீரராக தோனி திகழ்ந்தாலும், அவருக்கும் தமிழக மக்களுக்கும் இடையேயான பந்தம் பிரத்யேகமானது. சிறப்பானது.

இந்த நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தோனி என்டர்டெய்ன்மெண்ட், தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறது. இந்த படம், தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் நிர்வாக இயக்குநரான சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும்.

இந்த திரைப்படத்தை ‘அதர்வா- தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

இந்த நாவல் ஒரு புதிய யுக கிராஃபிக் நாவல். மேலும் இப்படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழில் மட்டுமின்றி அறிவியல் புனைவு கதை, குற்றவியல் நாடகம், நகைச்சுவை, சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் பல வகையான அற்புதமான மற்றும் அர்த்தமுள்ள உள்ளடக்கத்தை கொண்ட திரைப்படங்களை உருவாக்கவும் மற்றும் தயாரிப்பதற்காகவும், பல திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

தமிழில் தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கும் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில்…

”சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. புத்தம் புதிதாய் இருந்த இந்த கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன்.

இந்தக் கருவைத் திரைக்கதையாக்கி திரைப்படமாக்கும் வாய்ப்பை அவர் எனக்கு வழங்கியதைப் பெருமையாகக் கருதுகிறேன்.” என்று ரமேஷ் தமிழ்மணி கூறியுள்ளார்.

மேலும் “இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் முழு ஆர்வத்தில் இணைந்துள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் துளிர்க்கும் ஆர்வம் அது. என்று ரமேஷ் தமிழ்மணி கூறுகிறார்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் வணிகப்பிரிவு தலைவரான விகாஸ் ஹசிஜா பேசுகையில்…

‘ கொரோனா தொற்றுப் பாதிப்பிற்குப் பிறகு இந்தியாவில் வெளியாகும் முக்கிய திரைப்படங்களின் வணிகம் என்பது விரிவாக்கம் அடைந்திருக்கிறது..எல்லைகளற்ற அதாவது பிராந்திய சினிமாவிற்கும், இந்தி சினிமாவிற்கும் இடையேயான விவாதம் இல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்கள், வட மாநிலங்களிலும் சமமாக கொண்டாடப்படுவதால், தோனி என்டர்டெய்ன்மெண்ட், தன்னை மொழி சார்ந்த தயாரிப்பு நிறுவனமாக அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. நமது நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள இந்திய பார்வையாளர்களை, அர்த்தமுள்ள கதைகளின் மூலம் சென்றடைவதே எங்களின் முன்னுரிமை. எங்களின் முதல் படம் தமிழில் தான் உருவாகும் என்றாலும், பல மொழிகளில் வெளியாகும்” என்றார்.

தோனி என்டர்டெய்ன்மெண்ட்டின் படைப்புத்திறன் பிரிவுத் தலைவர் பிரியன்ஷு சோப்ரா பேசுகையில்.

, ” கதை தான் நாயகன் என நாங்கள் நம்புகிறோம். தோனி என்டர்டெய்ன்மெண்டில் வித்தியாசமான மற்றும் அழுத்தமான உள்ளடக்கத்தை கொண்ட கதைகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறோம். நமது பாரம்பரிய கலாச்சாரத்தையும், அதற்கேற்றக் கதாபாத்திரங்களும், உண்மையான சித்தரிப்புகளும், சூழலுக்கு ஏற்ற வகையில் இருக்கும் படைப்புகள், திரைப்படங்களாக உருவாகும் போது பார்வையாளர்களின் இதயத்தை வெல்லும். இதைப் போன்ற யதார்த்தமான படங்களை உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உருவாக்குவதே எங்களது நோக்கம்” என்றார்.

மகேந்திரா சிங் தோனி

Dhoni Entertainment forays into mainstream film production with a Tamil film

~ Conceptualized by Sakshi Singh Dhoni, the family entertainer will start rolling soon ~

Chennai, 24th October 2022: Legendary cricketer Mahindra Singh Dhoni and his wife Sakshi Singh Dhoni’s production house Dhoni Entertainment has commenced the various stages of producing entertainment content, across all mainstream languages. Dhoni Entertainment has already carved a name for itself by producing and releasing the popular documentary, the ‘Roar of the Lion’, based on the IPL matches played by the Chennai Super Kings. “Women’s Day Out”, a short film about Cancer awareness was also produced by them.

The exceptional bond that Dhoni shares with the people of Tamil Nadu is eminent. Reinforcing this extra special relationship further, Dhoni Entertainment will be producing its first film in Tamil, a family entertainer conceptualized by Sakshi Singh Dhoni, the Managing Director of Dhoni Entertainment and will be directed by Ramesh Thamilmani, who has also authored Atharva – The Origin, a new age graphic novel. The cast and crew of the film will be announced shortly.

Besides Tamil, Dhoni Entertainment is in talks with multiple filmmakers and script writers to create and produce exciting and meaningful content across genres including science fiction, crime drama, comedy, suspense thriller, and more.

“From the moment I read the concept written by Sakshi, I knew it was special. The concept was fresh and had all the potential to be a fun family entertainer. I am honored and very grateful for this opportunity to develop this really fresh concept into a feature film story and to be directing the film as well.” Says Ramesh Thamilmani, the Director. He adds, “All of us are excited to kick start this journey and bring this special film to life for the audience to watch and enjoy.”

Vikas Hasija, Business Head, Dhoni Entertainment says, “Post Pandemic, the business of the mainstream films in India has become a singular entity, the boundaries are blurred and there is no Regional cinema vs Hindi cinema debate anymore. As more Tamil, Telugu, Malayalam, and Kannada films are equally celebrated in the North, Dhoni Entertainment does not want to limit itself as a single-language production house. Our priority is to reach our Indian audiences in every nook and corner of our country, through meaningful stories. Though our first film will be originally made in Tamil, it will be released in multiple languages.”

Adding to this, Priyanshu Chopra, the Creative Head of Dhoni Entertainment says, “We believe that ‘Content is King’. We at Dhoni Entertainment are concentrating on content that explores our roots and stays true to the milieu with earthy characters and authentic depictions of our culture. Films with rooted stories always win hearts and our aim is to make such realistic films with universal appeal.”

ஜெயதீர்த்தா உருவாக்கிய அற்புத படைப்பு.; பரவசத்தில் ‘பனாரஸ்’ ஜையீத் கான்

ஜெயதீர்த்தா உருவாக்கிய அற்புத படைப்பு.; பரவசத்தில் ‘பனாரஸ்’ ஜையீத் கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

”இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். ‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” என ‘பனாரஸ்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார்.

கன்னட திரை உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘பனாரஸ்’.

ஜெயதீர்த்தா

பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கன்னட திரை உலகத்தின் ‘சேலஞ்சிங் ஸ்டார்’ தர்ஷன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன் ‘பனாரஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டன.

பனாரஸ்

நடிகர் தர்ஷன் பேசுகையில்…

” பனாரஸ் படத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். படத்தின் நாயகனும், நண்பருமான ஜையீத் எனக்கு திரையிட்டு காண்பித்தார். தொடக்கத்தில் ஜையீத் பணக்கார தந்தையின் மகன் என்றும், திறமை இல்லாதவர் என்றும் நினைத்தேன்.

ஆனால் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் கதை மற்றும் இயக்கம் சிறப்பாக உள்ளது. அதனால் இந்த படம் நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும்” என்றார்.

தர்ஷன்

படத்தின் நாயகனான ஜையீத் கான் பேசுகையில்…

” இன்று என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். எனது வாழ்க்கையில் முக்கியமான இரண்டு சக்திகள் இங்கே என்னுடன் உள்ளனர்.

எனது மூத்த சகோதரர் மற்றும் எனது தந்தையைப் போன்ற தர்ஷன் இங்கே இருக்கிறார். தர்ஷன் தொடக்கம் முதலே எனக்கு உறுதுணையாக இருக்கிறார்.

ஜையீத் கான்

இந்த தருணத்தில் என்னுடைய தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். அவரை இழிவுபடுத்தும் செயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன்.

மேலும் எனது தந்தையினால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். ‘பனாரஸ்’ படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். நவம்பர் மாதம் நான்காம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்த படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

ஜையீத் கான்

என் கே ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் 4ம் தேதி அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது.

‘பனாரஸ்’ படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சுஜய் சாஸ்திரி, தேவராஜ், அச்யுத் குமார், பர்க்கத் அலி, சப்னா ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜையீத் கான்

அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி அஜனீஷ் லோக்நாத் இசை அமைத்திருக்கிறார்.

காசியை கதைக்கள பின்னணியாக கொண்டு அமானுஷ்ய விசயங்களுடன் கூடிய காதல் கதை என்பதால், ‘பனாரஸ்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பனாரஸ்

Banaras Pre release Event in Hubli

MLA Zameer Ahmed Khan’s son Zaid Khan’s much awaited film is Banaras. The pre-release event of the movie, which is written and directed by Jayatheertha of Bell Bottom fame, was held in a grand manner on Saturday evening at the Railway Sports Ground premises in Hubballi.

Challenging Star Darshan, Vinod Prabhakar, Nenapirali Prem, V. Nagendra Prasad, director Jayathirtha, along with many others participated in this grand Pre-release event of Banaras which is already popular because its beautiful songs and trailer.

பனாரஸ்

With enthusiasm all the various mesmerizing dance-songs performed in the program, which lasted for three hours.

Actor Darshan who spoke at the event said, “I have already seen the film. Zaid had shown me the movie earlier, and initially I thought, he is rich father’s son, who is not talented, but after watching the film I was surprised. He has acted so brilliantly. He has done a great job. Also the story and direction is outstanding.”

“The film will definitely be a huge success,” he added.

Speaking to the media, Zaid Khan said, “Today is a very big day in my life, two of my life’s biggest forces are present with me right here. Darshan who is like my elder brother and my father are here. I promise dad on this platform that I will never do something that will demean him. I am standing here today because of my father. Also, Darshan has been supporting me since the beginning.”

பனாரஸ்

Talking about Banaras movie he added, “The film has many special features. I worked very hard for this film. Jayathirtha has made a wonderful film for me. The film is releasing across the country on November 4, there is hope that the film will win the hearts of the people.” Zaid requested each and everyone to watch it and bless him. to watch the film.

Banaras is a Pan India Kannada film that has been made into Telugu, Tamil, Hindi and Malayalam simultaneously. Tilak Raj Ballal has produced the film. Sonal Monteiro is the leading lady opposite Zaid Khan. Sujay Shastri, Devraj, Achyuth Kumar, Sapna Raj, Bharkat Ali have played major roles in the film. Ajaneesh Loknath has scored the music.

பனாரஸ்

Banaras is ready to be released on November 4th.

குடும்ப அமைப்பு : உள்ளே வெளியே வாழும் இருவர்.; வெற்றிமாறன் – ஜெயம்ரவி ஆதரவு

குடும்ப அமைப்பு : உள்ளே வெளியே வாழும் இருவர்.; வெற்றிமாறன் – ஜெயம்ரவி ஆதரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Komala Hari Pictures மற்றும் One Drop Ocean Pictures நிறுவனங்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல் ஜோஸ், லாஸ்லியா, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் ஒரு அழகான திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “அன்ன பூரணி”.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிட்டனர்.

கதாப்பாத்திரங்களின் இயல்பையும், மாறுபட்ட கதைக்களத்தையும் வெளிப்படுத்தும்படியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில், திரை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

குடும்ப அமைப்பிற்குள் வாழும் ‘பூரணி’ , குடும்ப அமைப்பிற்கு வெளியே வாழும் ‘அனா’ ஆகிய இருவரின் பயணமே இந்தப்படம்.

பெண்கள் குடும்ப அமைப்பிற்குள் அனுபவிக்கும் சிரமங்களை, கருத்து சொல்லும்படியாக இல்லாமல் ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம், ஒரு மாறுபட்ட திரில்லர் டிரமாவாக சொல்லியுள்ளது இப்படம்.

பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்தின் பாடல்களை எழுதியதுடன் படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார்.

மராத்தி ஒளிப்பதிவாளர் ஹெக்டர் ஒளிப்பதிவு செய்ய, 96 புகழ் கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தினை அமரன் செய்துள்ளார்.

லாஸ்லியா, லிஜோமோல் ஜோஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, மெட்ராஸ் ஹரிகிருஷ்ணன், தோழர் ராஜீவ் காந்தி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில், இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படத்தின் இசை உரிமையினை TIPS MUSIC பெற்றுள்ளது. படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Annapoorni first look launched by Vetrimaran and Jayam Ravi

நடிகர் யோகி பாபுவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

நடிகர் யோகி பாபுவுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு.

இவர் மஞ்சு பார்கவியை பிப்ரவரி 2020 இல் திருமணம் செய்து கொண்டார்.

தம்பதியருக்கு மூத்த மகன் பிஎம் வேஷகன் கடந்த ஆண்டு பிறந்தார்.

இந்நிலையில், தீபாவளி ஆன நேற்று இரண்டாவது முறையாக தந்தையாகியுள்ளார் யோகி பாபு.

யோகி பாபு மற்றும் மஞ்சு பார்கவி தம்பதிக்கு இப்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

actor Yogi Babu’s second child was born

நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்.; பிரபாஸ் தீபிகா அமிதாப் இணைந்த பட போஸ்டர் வெளியானது

நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்.; பிரபாஸ் தீபிகா அமிதாப் இணைந்த பட போஸ்டர் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது.

திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு 50வது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ‘ புரொஜெக்ட் கே’.

இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் அமிதாப்பச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இருப்பினும் ரசிகர்களின் வேண்டுக்கோளுக்கிணங்க படத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது.

அந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸின் கை காற்றில் தன் சக்தியைக் காட்டுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனுடன் ‘நாயகர்கள் பிறப்பதில்லை. அவர்கள் உதிக்கிறார்கள்’ என்ற வாசகத்தை இடம்பெற வைத்து பிரபாஸின் நாயக பிம்பத்தை செறிந்த வீரத்துடன் விவரித்திருக்கிறார்கள்.

ரெபெல் ஸ்டார் பிரபாஸின் பிறந்தநாளுக்கு அவர் நடித்து வரும் ‘ புராஜெக்ட் கே’ படக்குழு வெளியிட்டிருக்கும் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

 புரொஜெக்ட் கே

Team Project K Wishes Rebel Star Prabhas On His Birthday

‘சர்தார்’ பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்..; சாந்தனு பாராட்டு

‘சர்தார்’ பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்..; சாந்தனு பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடித்த திரைப்படம் ‘சர்தார்’.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ஆம் தேதி உலகெங்கும் வெளியானது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இதில் கார்த்தி உடன் ராஷி கண்ணா ரஜிஷா விஜயன் லைலா முனீஸ்காந்த் சங்கி பாண்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தண்ணீர் வியாபாரத்தில் பேசப்பட்ட அரசியலை இந்த படம் தோலுரித்துக் காட்டியிருந்தது.

தற்போது இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த படத்தை நடிகர் சாந்தனு பாராட்டி இருக்கிறார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில்..

‘சர்தார் பிரில்லியண்ட்.. கார்த்தி நீங்கள் ஒரு பவர் ஹவுஸ்” என பாராட்டி இருக்கிறார்.

பிஎஸ் மித்ரன் உங்களின் ஆராய்ச்சியும் உங்களது மேக்கிங்கும் பாராட்டுக்குரிய வகையில் உள்ளது. ஜிவி பிரகாஷ் வாழ்த்துக்கள்..” என பாராட்டி பதிவிட்டு இருக்கிறார்.

#Sardar Brilliant??
@Psmithran Bang On research and filmmaking????
@Karthi_Offl What a powerhouse you are brother??
@AntonyLRuben Your a master when it comes to cuts ????
Semma visuals @george_dop
Loved the film
Best wishes team @gvprakash @Prince_Pictures @dhilipaction

More Articles
Follows