‘குக் வித் கோமாளி’ புகழ் பிரபலத்துக்கு விபத்து.; பன்ச் வித் செம அப்டேட்..

‘குக் வித் கோமாளி’ புகழ் பிரபலத்துக்கு விபத்து.; பன்ச் வித் செம அப்டேட்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தன் டிவி நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதில் விஜய் டிவிக்கு நிகர் எதுவுமில்லை.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை அடுத்து ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இப்போ ஹாட் டாப்பிக்.

இதன் மூலம் ஒரேடியாக பாப்புலர் ஆன புகழ் & சிவாங்கி தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த சீசன் 2 நிகழ்ச்சியில் விஜே மணிமேகலையும் பங்கெடுத்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.

இரண்டு வாரங்கள் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு பன்ச் டயலாக்கையும் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த பதிவு…

ஆடி காரில் போவது வசதியான வாழ்க்கையில்லை.. ஆஸ்பத்திரிக்கு போகாமல் வாழ்வதே வசதியான வாழ்க்கை

Cooku With Comali contestant met with an accident

சூட்டிங்கில் விபத்து…; நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் எப்படி இருக்கிறார்.?

சூட்டிங்கில் விபத்து…; நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் எப்படி இருக்கிறார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேலைக்காரன் & சூப்பர் டீலக்ஸ் ஆகிய தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் பஹத் பாசில்.

இவர் நடிகை நஸ்ரியாவின் கணவர் ஆவார்.

பஹத் பாசிலின் தந்தை பாசில் தயாரித்து வரும் ‘மலையன் குஞ்சு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் பஹத்.

இப்படப்பிடிப்பின்போது, உயரமான இடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

அப்போது பஹத்துன் மூக்கில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டது.

கடந்த சில தினங்களாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் பஹத் பாசில்.

பின்னர் வீடு திரும்பி தற்போது வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அவரின் புகைப்படத்தை சோஷியல் மீடியா பகிர்ந்துள்ள அவரது மனைவி நஸ்ரியா, ‘ஆல் இஸ் வெல்” என தெரிவித்துள்ளார்.

Update on fahadh faasil’s health

மீண்டும் சாத்தான்குளம் சர்ச்சை.? அதிமுக ஆட்சியில் கண்ணியத்தை இழக்கும் காவல்துறை..; கமல் கண்டனம்

மீண்டும் சாத்தான்குளம் சர்ச்சை.? அதிமுக ஆட்சியில் கண்ணியத்தை இழக்கும் காவல்துறை..; கமல் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்போன் கடை வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

ஊரடங்கு சமயத்தில் இரவில் கடை திறந்து வைத்து இருந்ததாக கூறப்பட்டது.

காவல் நிலையத்தில் இருவரும் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி இரட்டைக் கொலை வழக்கு பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி. போலீசார், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுபோன்ற சம்பவம் ஒன்றை தற்போது கமல் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

ஓமலூருக்கருகே இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருந்த டீக்கடையை அடித்து நொறுக்குகிறார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்.

இதே காரணம் சொல்லித்தான் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்தே கொன்றார்கள்.

அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது…

MNM leader Kamal Haasan slams TN Govt

கன்னியாகுமரி தொகுதியில் கமல் கட்சி சார்பாக விஜய் படத்தயாரிப்பாளர் போட்டி

கன்னியாகுமரி தொகுதியில் கமல் கட்சி சார்பாக விஜய் படத்தயாரிப்பாளர் போட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் திமுக, அதிமுக, கமல், சீமான் மற்றும் தினகரன் ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன.

(தேமுதிக தேர்தல் நிலைபாடு விரைவில் தெரிய வரும்..)

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் & சமத்துவ மக்கள் கட்சி & இந்திய ஜனநாயக கட்சி (ஐஜேகே) ஆகிய 3 கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஏற்பட்டு தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு விட்டது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் சரத்குமார் (சமக) மற்றும் ஐஜேகே ஆகிய இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் கன்யாகுமாரி சட்டமன்ற தொகுதியில் கலப்பை மக்கள் இயக்க தலைவர், திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிடுகிறார்.

விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay film producer to contest in Kanyakumari

unnamed

விக்ரம் & துருவ் இணையும் படத்தில் சிம்ரன் & வாணி போஜன்

விக்ரம் & துருவ் இணையும் படத்தில் சிம்ரன் & வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் & அவரது மகன் துருவ் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘சீயான் 60’ என அழைக்கின்றனர்.

இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

லலித் குமார் தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று மார்ச் 10 முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் சிம்ரன், வாணி போஜன் ஆகியோர் நாயகிகளாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணி புரியவுள்ளார்.

Chiyaan 60 movie starts with pooja today

விக்ரம் பிரபு & தமிழ் & எஸ்ஆர் பிரபு இணையும் ‘டாணாக்காரன்’

விக்ரம் பிரபு & தமிழ் & எஸ்ஆர் பிரபு இணையும் ‘டாணாக்காரன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘டாணாக்காரன்’.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரில் விக்ரம் பிரபு சுதந்திரத்திற்கு முந்தைய 1947 இந்தியாவைச் சேர்ந்த போலீஸ் யுனிபார்மில் காணப்படுகிறார் விக்ரம் பிரபு.

இந்த படம் குறித்து விக்ரம் பிரபு தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது…

“இந்த கதையில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி. இந்தக் கதைக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடின உழைப்பு தேவைப்படுகிறது.

ஆனால் எங்களிடம் சிறப்பான குழு இருக்கிறது. எனது முழு அணிக்கும் வாழ்த்துக்கள் மற்றும் எப்போதும் போல, உங்கள் அன்பும் ஆதரவும் தேவை” என தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை எஸ்ஆர் பிரபு சகோதரர்கள் தயாரிக்கின்றனர்.

Vikram Prabhu’s next film title is announced

More Articles
Follows