BREAKING காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.; அவரின் வாழ்க்கை..

BREAKING காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.; அவரின் வாழ்க்கை..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எல்லோராலும் விரும்பப்பட்ட காமெடி நடிகர்களில் ஒருவர் நடிகர் மயில்சாமி.

1980களில் இவர் சினிமாவில் அறிமுகமானார். ரஜினியுடன் பணக்காரன் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 25 வருடமாக இவர் பிரபல காமெடி நடிகராக அறியப்பட்டார். இவர் பங்கேற்ற காமெடி டைம் என்ற டிவி நிகழ்ச்சி தமிழக ரசிகர்களிடையே பேசும் பொருளாக இருந்தது.

மறைந்த நடிகர் விவேக் உடன் இணைந்து நிறைய படங்களில் காமெடி செய்துள்ளார். ‘தூள்’ படத்தில் இவர்கள் செய்த காமெடியை இன்றளவு மறக்க முடியாது.

தனுஷின் பொல்லாதவன் படத்தில் குடிகாரன் வேடத்தில் நடித்திருப்பார். அதில் இவர் செய்த அலப்பறைகள் தாங்க முடியாது.

தாய் மாமன், ஐ டி ஆபிசர், குடிகாரன் போலீஸ் என பல்வேறு கேரக்டர்களில் 100+ மேற்ப்பட்ட படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

கார்த்தி உடன் சிறுத்தை, சிம்புவுடன் ஒஸ்தி என இன்றளவும் இவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிறந்து வளர்ந்த இவர் கடந்த பல ஆண்டுகளாக சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.

சினிமாவை தாண்டியும் இவருக்கு மக்களிடையே பெரும் நன்மதிப்பு இருந்து வந்தது.. இதற்கு முக்கிய காரணம் இவரிடம் உதவி என்று கேட்டால் செய்யாமல் இருக்க மாட்டார்.

இவரிடம் பணம் இல்லை என்றாலும் பிரபல நடிகர்களிடம் கடன் வாங்கியாவது நிறைய ஏழைகளுக்கு உதவி செய்து வந்துள்ளார்.

தான் ஒரு எம்ஜிஆர் தீவிர பக்தர் ஆன்மீகவாதி இரவு நேரங்களில் தான் தினமும் மது அருந்துவேன் என்பதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர் இவர்.

இந்த நிலையில் காமெடி நடிகர் மயில்சாமி காலமானார்.

சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி இறந்தார். அவரின் இறப்பை மருத்துவர்கள் உறுதிசெய்துள்ளனர்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவி செய்தவர் நடிகர் மயில்சாமி.. 1985-ம் ஆண்டு கன்னிராசி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.. மிமிக்ரி திறமை பெற்றவர். பலகுரல் மன்னன் என மக்களிடையே பெயர் பெற்றவர். 2021 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி..

#Mayilsamy #actor

Comedy Actor MayilSamy passed away He was 57

திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்.; திருநள்ளாறில் யோகி பாபு.!

திருச்செந்தூரில் சிவகார்த்திகேயன்.; திருநள்ளாறில் யோகி பாபு.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். அதுபோல காமெடி நடிகர்களில் தற்போதைய ட்ரெண்டிங் நாயகன் யோகி பாபு.

இவர்கள் இருவரும் ரெமோ, மான் கராத்தே, டாக்டர் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவரும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு சென்றுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன்

திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மூலவர் சன்னதி, சண்முகர் சன்னதி, பெருமாள் சன்னதி தட்சிணாமூர்த்தி சூரசம்கார மூர்த்தி ஆகிய சுவாமிகளை தரிசனம் செய்தார்.

அதுபோல காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் யோகி பாபு.

திரை நட்சத்திரத்தை கண்ட ரசிகர்களும் பக்தர்களும் அவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு செஃல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

யோகி பாபு

Sivakarthikeyan at Thiruchendur and Yogibabu at Karaikal Thirunallar

JUST IN மகா சிவராத்திரி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

JUST IN மகா சிவராத்திரி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று பிப்ரவரி 18ஆம் தேதி மகா சிவராத்திரி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இன்று தமிழகம் வந்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

காலையில் மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த அவர் மாலை கோவையில் உள்ள ஈஷா மையத்திற்கு வந்தார்.

அங்கு சத்குருவுடன் இணைந்து மகா சிவராத்திரியை கொண்டாட உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் கொண்டாடப்படும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அவர் அமர்ந்து தியானம் செய்யும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த்

Rajinikanth participates in Maha Shivratri festival

விமலுடன் கைகோர்த்த விஜய்சேதுபதி பட இயக்குனர்.; யார் தெரியுமா.?

விமலுடன் கைகோர்த்த விஜய்சேதுபதி பட இயக்குனர்.; யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பசங்க’ மற்றும் ‘களவாணி’ போன்ற படங்களின் மூலம் புகழ் பெற்ற நடிகர் விமல்.

இவர் கடைசியாக விஜய் சேதுபதியின் ‘டிஎஸ்பி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

விமல் தனது அடுத்த திட்டத்தை தொடங்கியுள்ளார். அதன்படி, விஜய் சேதுபதியை வைத்து ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை இயக்கிய இயக்குனர் விருமாண்டி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இந்தப் படம் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தின் பூஜை படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் விமல், “நம் மண்ணின் கலைஞன் க/பெ ரணசிங்கம் இயக்குனர் அன்பு பங்காளி விருமாண்டி அவர்களோடு பணிபுரிய போவது மட்டற்ற மகிழ்ச்சி” என்று எழுதினார்.

இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விமல்

Vijay Sethupathi movie director joins hands with Vimal.

1000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பாடல்.; ‘மாவீரனுக்கு நடன கலைஞர்கள் நன்றி

1000 பேர் பங்கேற்ற பிரமாண்ட பாடல்.; ‘மாவீரனுக்கு நடன கலைஞர்கள் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ‘மாவீரன்’.

இப்படத்தின் முதல் சிங்கிள், ‘சீன் ஆ சீன் ஆ’ பாடல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் நேற்று பிப்ரவரி 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டது.

இந்த க்ளிம்ப்ஸ் அனைத்து இடங்களிலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

30 விநாடிகளுக்கும் குறைவான இந்த க்ளிம்ப்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனின் எனர்ஜி மற்றும் துடிப்பான நடன அசைவுகள் அனைவரின் ஆர்வத்தையும் கவர்ந்துள்ளது.

இந்தப் பாடலின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சே இதில் இடம்பெற்றுள்ள அதிக எண்ணிக்கையிலான நடனக் கலைஞர்கள்தான்.

சென்னையைச் சேர்ந்த 500+ நடனக் கலைஞர்கள் மற்றும் 150+ குழுவினர் என கிட்டத்தட்ட 1000 பேர் வரை கலந்து கொண்டுள்ள இந்த பிரமாண்ட பாடல் நேற்று (பிப்ரவரி 17, 2023) வெளியானது.

கபிலன் மற்றும் லோகேஷ் பாடல்களை எழுதியுள்ளனர். பரத் சங்கர் இசையமைத்த இந்த பாடலுக்கு ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

நடன கலைஞர்கள் சங்க உறுப்பினர்கள் -. சின்னி பிரகாஷ்,. பாபு மற்றும். மாரி ஆகியோர் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஷ்வின் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா ஆகியோரை பாராட்டினர் மற்றும் சென்னையில் இருந்து முக்கிய நடனக் கலைஞர்கள் மற்றும் குழுவினரைப் பயன்படுத்தியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

எண்ணூரில் பிரம்மாண்டமான நடனக் கலைஞர்கள் மற்றும் கூட்டத்தை உள்ளடக்கிய இந்த மாஸ் நம்பர் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் சுனில் நடிக்கும் ஸ்டண்ட் காட்சியை படக்குழுவினர் எடுத்து வருகின்றனர்.

மாவீரன் படத்தை ‘மண்டேலா’ புகழ் மடோன் அஷ்வின் எழுதி இயக்குகிறார், சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா தயாரிக்கிறார். பரத் சங்கர் இசையமைக்க, பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

*படத்தின் தொழில்நுட்பக்குழு விவரம்:*

கலை இயக்கம்: குமார் கங்கப்பன் & அருண் வெஞ்சரமூடு,
சண்டைப்பயிற்சி: யானிக் பென்,
ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி & அழகியகூத்தன், கூடுதல் திரைக்கதை & வசனம்: சந்துரு ஏ,
ஒலிக்கலவை: சுரேன் ஜி, ஆடை வடிவமைப்பு: தினேஷ் மனோகரன்,
ஒப்பனைக் கலைஞர்:ஷைட் மாலிக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்.

Sivakarthikeyans Maaveeran team gets felicitated by Dancers Union

மது பிரியர்களுக்கு எதிராக களமிறங்கிய ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி

மது பிரியர்களுக்கு எதிராக களமிறங்கிய ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.

தற்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லன் வேடம் குணச்சித்திர வேடம் என பல்வேறு கதாபாத்திரங்களிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார்.

விஜய் சேதுபதி

காமெடி நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இவையில்லாமல் சமூக சேவைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்த நிலையில் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வில் இவர் கையெழுத்திட்டு தன் ஆதரவை தெரிவித்துள்ளார்.

போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து #DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் திரைக்கலைஞர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கையெழுத்திட்டார்.

விஜய் சேதுபதி

Vijay Sethupathi signs for No To Drugs

More Articles
Follows