சக்ரவியூகம் குறும்படத்தை வெள்ளித்திரையில் இயக்கவுள்ளராம் .சந்தோஷ்குமார்

சக்ரவியூகம் குறும்படத்தை வெள்ளித்திரையில் இயக்கவுள்ளராம் .சந்தோஷ்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

chakra viyugamசந்தோஷ்குமார் ‘க்ளீன் போல்ட்’ குறும்படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர்
சந்தோஷ்குமார். அதில் மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால்
கவனிக்கப்படத்தக்கவராக மாறியதால் தனது அடுத்தடுத்த குறும்படங்களால்
சினிமாக்காரர்களிடம் நெருக்கமாகியுள்ளார். இந்நிலையில் இவர் விஜய்
ஆதிராஜை வைத்து எடுத்த ‘சக்ரவியூகம்’ குறும்படத்துக்கு சமூக
வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து விருதுகள் வாங்கியிருப்பதுடன் பிரபல
சினிமா நிறுவனத்திடமிருந்து படம் இயக்குவதற்கான வாய்ப்பும் வந்துள்ளது.
இந்தத் தகவல் ஆச்சரியமாக இல்லை? ஆனால் அதுதான் உண்மை. சந்தோஷ்குமார்
வெகுவிரைவில் ‘சக்ரவியூகம்’ குறும்படத்தை வெள்ளித்திரைக்காக
இயக்கவுள்ளராம் .

இதுகுறித்து இயக்குநர் சந்தோஷ்குமார் கூறியது, ‘‘எனக்கு சொந்த ஊர்
கோயமுத்தூர். சினிமா பின்னணி எதுவும் கிடையாது. படிச்சது கம்ப்யூட்டர்
சயின்ஸ். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. சினிமா ஒரு ரசிகராகத்தான்
அறிமுகம். எம்.பி.ஏ. படிக்கும்போது சக நண்பர் ஒருவர் டிஜிட்டல் கேமரா
வைத்திருந்தார். அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொள்ள
விளையாட்டாக நண்பர்களை வைத்து ஒரு வீடியோ எடுத்தேன். அந்த வீடியோவுக்கு
நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. சிலர் ‘குறும்படம் ட்ரை பண்ணலாமே’
என்றார்கள். அப்போது நான் ஸ்டூடண்ட் என்பதால் கையில் பணம் இல்லாததால்
அந்த முயற்சியை அப்படியே ஓரங்கட்டி வைத்துவிட்டேன்.

பிறகு வேலைக்குப் போனதும் மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்கள்
எடுக்கும் முயற்சியில் இறங்கினேன். முதல் முயற்சியாக ‘க்ளீன் போல்ட்’
எடுத்தேன். அதற்கு ஒரு மில்லியன் வியூஸ் கிடைத்தது. தொடர்ந்து
‘நெமிசிஸ்’(nemesis), ‘அத்தியாயம்’ என்று பல ஜானர்ல ஷார்ட் ஃபிலிம்
எடுத்தேன்.தற்போது வெளிவந்துள்ள ‘சக்ரவியூகம்’ சைபர் இன்வெஸ்டிகேஷன்
பற்றிய கதை. நகரில் சில கொலைகள் நடக்கிறது. அதுவும் செலக்டிவ்வாக
நடக்கிறது. கொலையாளி யார்? கொலைகாரன் யார்? என்பதை ஒரு முழு
சினிமாவுக்கான விறுவிறுப்புடன் சொல்லியுள்ளேன்.

துப்பறியும் அதிகாரியாக விஜய் ஆதிராஜ் நடித்துள்ளார். அவர் எங்கள்
குறும்படத்தில் நடித்தது மறக்க முடியாதது. விஜய் ஆதிராஜ் சார் எனக்கு
முகநூலில் அறிமுகமானார். நாங்கள் வேலைக்குப் போகிறவர்கள் என்று
தெரிந்ததும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அவருக்காக ஸ்பெஷல்
உணவு ஆர்டர் செய்தாலும் ‘நீங்கள் என்ன சாப்பிடுவீர்களோ அதுவே போதும்’
என்றார். அதே மாதிரி தங்கும் விஷயத்திலும் சாதாரண ஓட்டல் போதும் என்று
சொல்லிவிட்டார். சில சமயம் பொதுவெளியில் படமாக்கும்போது கூடுதலாக நேரம்
செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வரும். அந்த சமயத்தில் பல மணி நேரம் காரில்
காத்திருந்து ஒத்துழைப்புக் கொடுத்தார்.

என்னுடன் வேலை செய்யும் ப்ரீத்தியும் இன்னொரு லீட் கேரக்டரில் நடித்துக்
கொடுத்தார். கேரக்டர் ரோல்களில் நடித்துள்ளவர்கள் என்னுடைய நண்பர்கள்.
நான் கேட்டதும் உடனே ‘சரி’ சொல்லி படப்பிடிப்புக்கு வந்தார்கள்.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவாளர் ஜிக்கு ஜாக்கோப் பீட்டர், இசையமைப்பாளர்
ஸ்டேன்லி சேவியர், எடிட்டர் பிரேம் சாய் ஆகியோர் பிரமாதமான ஒத்துழைப்பைக்
கொடுத்தார்கள். குறும்படமாக இருந்தாலும் காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுத்தோம்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்தான் படப்பிடிப்பு நடக்கும். நண்பர்கள் மற்றும்
என்னுடைய குடும்பத்தினர் சப்போர்ட் இல்லாமல் என்னால் இவ்வளவு
குறும்படங்கள் பண்ணியிருக்க முடியாது. அவர்களுடைய தொடர் ஆதரவால்தான்
என்னுடைய சினிமா பயணம் சாத்தியமானது.
இயக்குநர் அருண்காந்த் தன்னுடைய ‘அருண்காந்த் ஓ.டி.டி.தளத்தில் ரிலீஸ்
செய்து கொடுத்தார்.

குறும்படங்கள் மூலம் முழு சினிமாவை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை
வந்துள்ளது. தற்போது அதற்கான முயற்சியில் உள்ளேன். பிரபல தயாரிப்பு
நிறுவனங்களுக்கு கதை சொல்லியுள்ளேன். க்ரீன் சிக்னலுக்காகக்
காத்திருக்கிறேன்’’ என்று சொல்லும் சந்தோஷ்குமார், நயன்தாரா, டாப்ஸி
போன்ற முன்னணி நடிகைகளுக்கான வுமன் சென்ட்ரிக் கதைகளும் வைத்துள்ளாராம்.
தவிர ‘சக்ரவியூகம்’ குறும்படத்தை மல்டிஹீரோ படமாக எடுக்கும் ஐடியாவிலும்
உள்ளாராம்.

chakra viyugam santhosh plans to direct a film

இன்னும் 10 மாசமானாலும் கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்லையாம்; ஓ.. அவிங்களே சொல்லிட்டாங்களா..?

இன்னும் 10 மாசமானாலும் கொரோனா தடுப்பூசிக்கு வாய்ப்பே இல்லையாம்; ஓ.. அவிங்களே சொல்லிட்டாங்களா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

covid 19 vaccineஉலகையே அச்சுறுத்தி லட்சக்கணக்கான மனித உயிர்களை கொன்று குவித்து வருகிறது கொரோனா.

2020 தொடக்கம் முதல் மக்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையை தொலைத்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்தியாவில் கடந்த 6 மாதங்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏழை, நடுத்தர மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சின்ன குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.

இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக மருத்துவ வல்லுனர்களே தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து அடுத்தாண்டு (ஜீன் 2021) பாதி வரை கிடைக்க வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இதுவரை உலகில் ஓரிரு நாடுகளில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகளில், எதுவும் 50 விழுக்காடு கூட எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை எனவும் அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யா நாடு கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், நெடுநாள் பாதிப்புகளை அந்த மருந்து குணப்படுத்துமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Covid Vaccination Not Expected Until Middle Of Next Year says WHO

பப்ஜிக்கு தடை…; FAUG வீடியோ கேம் ஆரம்பித்து அக்‌ஷய்குமார் நிதியுதவி

பப்ஜிக்கு தடை…; FAUG வீடியோ கேம் ஆரம்பித்து அக்‌ஷய்குமார் நிதியுதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

faug video game akshay kumarஇளைஞர் சமுதாயத்தை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் பப்ஜி, கட் கட் உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த செய்தியை நம் தளத்தில் ஓரிரு தினங்களுக்கு முன் ப்ரேக்கிங் செய்தியாக பார்த்தோம்.

இந்த நிலையில் பப்ஜிக்கு இணையாக FAU-G என்ற அதிரடி கேமை தொடங்குவதாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்மநிர்பர் இயக்கத்தின் கீழ் அச்சமற்ற மற்றும் யுனைடெட்-கார்ட்ஸ் எனும் FAU-G அதிரடி கேமை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

“பொழுதுபோக்கு தவிர, இந்த கேம் விளையாடுபவர்கள் நமது ராணுவ வீரர்களின் தியாகங்களைப் பற்றியும் அறிந்து கொள்வார்கள்.

இந்த கேமின் நிகர வருவாயில் 20% பாரத் கே வீர் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்படும்” என அக்சய்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Bollywood super star Akshay Kumar announces the launch of action game FAU-G

தியேட்டர்கள் திறப்பு..: தென்னிந்தியாவை புறக்கணிக்கும் மத்திய அரசு.?

தியேட்டர்கள் திறப்பு..: தென்னிந்தியாவை புறக்கணிக்கும் மத்திய அரசு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

theatre opening in indiaகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.

தற்போது 6 மாதங்களை கடந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 முதல் சினிமா சூட்டிங்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எனவே தியேட்டர்கள் திறக்க அனுமதி கேட்டு வருகின்றனர் திரையுலகினர்.

இதனையடுத்து வரும் செப்டம்பர் 8ம் தேதியன்று புதுடில்லியில் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான அழைப்பை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு வங்காளம், புதுடில்லி, உத்தரப்பிரதேசம், குஜராஜ்த், மகாராஷ்டிரா ஆகிய ஆகிய மாநிலங்களில் உள்ள சில சங்கங்களுக்கும், பிவிஆர் சினிமாஸ் நிறுவனத்திற்கும் மட்டுமே அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு ஆண்டிற்கு தமிழ், தெலுங்கு மலையாள, கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்கின்றனர்.

ஆனால் தென்னிந்திய சினிமாவுக்கு இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தென்னிந்தியத் திரையுலகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தென்னிந்திய திரையுலக பிரபலங்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

இதனையடுத்து இந்த தகவல் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தின் (NFDC) அகில இந்திய இயக்குனர் ராஜேஷ் கண்ணாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் அமைப்பை சார்ந்தவர்கள் அதே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வழிவகை செய்யப்படும் என தெரிவித்திருக்கிறாராம்.

Kollywood condemns on theatre opening meeting by central government

‘பாட்டு’ போட்டு பஹத் பாசிலுடன் இணையும் அல்போன்ஸ் புத்திரன்

‘பாட்டு’ போட்டு பஹத் பாசிலுடன் இணையும் அல்போன்ஸ் புத்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

alphonse puthren fahadh faasilநேரம் மற்றும் பிரேமம் படங்களை இயக்கியவர் அல்போன்ஸ் புத்திரன்.

இந்த படங்களில் மலையாள நடிகர்களே நாயகன் நாயகியாக நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதைக்களத்தை அமைத்திருந்தார்.

இவரின் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்தாலும் தமிழில் யாரும் ரீமேக் செய்ய முன்வரவில்லை.

காரணம் ஒரிஜினல் படத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கான காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் அல்போன்ஸ் புத்திரன் தன் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அடுத்த படத்தை இவரே இசையமைத்து இயக்கவிருக்கிறாராம். எனவே இந்த படத்திற்கு பாட்டு என தலைப்பு வைத்துள்ளார்.

இதில் பஹத் பாசில் நாயகனாக நடிக்க UGM எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இது மலையாள சினிமாக உருவாகுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

Fahadh Faasil to act in Alphonse Puthren’s Paattu

ஒரு அறிவிப்பு தரப்போகிறோம் என்பதையே ஒரு அறிவிப்பாக்கும் சினிமாக்கள்

ஒரு அறிவிப்பு தரப்போகிறோம் என்பதையே ஒரு அறிவிப்பாக்கும் சினிமாக்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

movie update in kollywoodஒரு படம் ரிலீசுக்கு தயாரானால் டிரைலர் வெளியீடு, இசை வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு உள்ளிட்ட 2 3 நிகழ்ச்சிகளே இருக்கும்.

ஆனால் தற்போதெல்லாம் மார்க்கெட்டிங் யுக்தி என்ற பெயரில் ஒவ்வொரு சிங்கிள் டிராக்காக வெளியிட்டு அதை மில்லியன் கணக்கில் ஹிட்டாக்கி தங்கள் படத்தை பேசும் பொருளாக்குவது தயாரிப்பாளர்கள் கை வண்ணம்.

நிச்சயம் அதில் எந்த தவறும் இல்லைதான். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் எதையாவது செய்து நம் பொருளை விளம்பரப்படுத்த வேண்டும்.

கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்ட தன் படத்தை சம்பந்தப்பட்டவர்கள் விளம்பரப்படுத்துவது நியாயமான ஒன்றுதான்.

ஆனால் ஒரு பாடல்/ஒரு அப்டேட் வெளியாவதை அறிவிக்கும்போது… அந்த பாடல் எப்போது? எந்த நேரம் வெளியீடு என்பதை முன்பே அறிவிக்காமல் இன்று மாலை அல்லது நாளை காலை ஒரு அறிவிப்பு வரும் காத்திருங்கள் என்பார்கள்.

அதனையடுத்து வரும் மற்றொரு அறிவிப்பில் அடுத்த வாரம் இந்த நாளில் நாங்கள் ஒரு பாடலை வெளியிட உள்ளோம் என்பதை அறிவிப்பார்கள்.

காலையில் முதல் அறிவிப்பு வெளியாகும் போதே குறிப்பிட்ட பாடல் இந்த நாளில் இந்த நேரத்தில் வெளியாகும் என்பதை முறையாக அறிவிக்கலாமே? என்பதே பலரின் கேள்வியாகவுள்ளது.

ஒருவேளை இதுவும் மார்கெட்டிங்கின் அடுத்த கட்ட யுக்தியோ..?

movie promotions atrocities in kollywood

More Articles
Follows