தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2009ஆம் ஆண்டில் சென்னையில் நடிகர் சங்க கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய நடிகர், நடிகைகள் 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ரொசாரியோ என்பவர் நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு பல முறை விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த நடிகர், நடிகைள் ஆஜராவதில்லை.
இன்று (மே 23, 2017) இந்த வழக்கை விசாரித்த நீலகிரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராஜவேல் நீதிமன்றத்திலிருந்து பல முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜரகாததால் நடிகர்கள் சூர்யா சரத்குமார் உள்ளிட்ட 8 பேர் மீது பிடிவாரன்ட் உத்தரவை பிறப்பித்தார்.
Arrest warrant for 8 actors including Suriya Vivek Sarthkumar Sathyaraj