நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசைப்பட்டா ஆன்லைன் க்ளாஸ்..; முதல்வர் உத்தரவு

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு.. ஆசைப்பட்டா ஆன்லைன் க்ளாஸ்..; முதல்வர் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

school reopen in apகொரோனா ஊரடங்கில் மூடப்பட்ட பள்ளிகள் திறப்பது குறித்து ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தன் உத்தரவில் தெரிவித்துள்ளதாவது…

நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

பள்ளிகள் காலையில் மட்டுமே செயல்படும், ஆனால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும்

இந்த ஷிப்ட் முறை வகுப்புகள் நவம்பர் மாதத்திற்கு மட்டும் செயல்படுத்தப்படும்.

கொரோனா கோவிட் -19 நிலைமையை அடிப்படையாகக் கொண்டு டிசம்பர் மாதத்திற்கான முடிவு எடுக்கப்படும்.

ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்று நாட்களில் பாடம் நடத்தப்பட வேண்டும்.

1,3,5,7 வகுப்புகளுக்கு ஒரு நாளில் பள்ளி பாடங்கள் நடைபெறும், 2, 4, 6, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அடுத்த நாள் வகுப்புகளில் நடைபெறும்.

பள்ளியில் 750 க்கும் அதிகமான மாணவர்கள் இருந்தால், மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளிக்கு நேரில் செல்ல விரும்பாத மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடம் நடத்தப்படும்.

இவ்வாறு ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

AP schools reopen date announced

‘ராதேஷ்யாம்’ படக்குழுவினர் பிரபாஸ் பிறந்தநாளில் தரும் மெகா ட்ரீட்

‘ராதேஷ்யாம்’ படக்குழுவினர் பிரபாஸ் பிறந்தநாளில் தரும் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prabhas RadheShyamஅகில இந்திய நடிகரான பிரபாஸ் வரும் அக்டோபர் 23ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.

அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி அவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டுவரும் நோக்கில் அட்வான்ஸ் பிறந்தநாள் விருந்தாக, ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தில் தயாரிப்பாளர்களான யுவி கிரியேஷன்ஸ் பிரபாஸ் நடிக்கும் கதாபாத்திரத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதன் படி ‘விக்ரமாதித்யா’ என்னும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் தன்மையை பிரதிபலிப்பதாக உள்ளது.

“CAPTION AND LINK” எனப்படும் போஸ்டர் மற்றும் பிரபாஸ் லுக் இரண்டையும் பட தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

தங்கள் ஆஸ்தான நடிகரின் பிறந்தநாளை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இந்த போஸ்டர் நிச்சயமாக பிரபாஸுக்கும் அவரது தீவிர ரசிகர்களுக்கும் தயாரிப்பாளர்கள் கொடுத்த ஒரு மிகப்பெரிய பரிசு.

கடந்த அக். 13 அன்று நடிகை பூஜா ஹெக்டே பிறந்தநாளின் போது, தயாரிப்பாளர்கள் அவரது ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

அதேவேளையில், படக்குழுவினர் தற்போது இத்தாலி நாட்டின் டோரினாவின் அழகிய மலைப்பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

வடக்கு இத்தாலியில் அமைந்துள்ள டோரினா நகரத்தில் அழகிய ஆல்ப்ஸ் மலை அமைந்துள்ளது. இந்த நகரம் சில பிரபலமான அடையாளங்களால அறியப்படுகிறது.

இந்த இடங்கள் ராதே ஷ்யாம் படத்தை கண்கவர் திரைப்படமாக்குவது மட்டுமின்றி கதையின் தரத்தை உயர்த்துகிறது. பிரம்மாண்ட படைப்பான ‘ராதேஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம்.

இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

UV கிரியேஷன்ஸ் சார்பில் பிரமோத் வம்சி தயாரிப்பில் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ரொமாண்டிக் பீரியட் ட்ராமாவாக உருவாகும் இந்த பன்மொழி திரைப்படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Prabhas character name revealed in RadheShyam

மும்மொழிகளில் பொங்கலுக்கு மிரட்ட போகும் ‘காடன்’..; பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு மெகா கூட்டணி

மும்மொழிகளில் பொங்கலுக்கு மிரட்ட போகும் ‘காடன்’..; பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு மெகா கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஈராஸ் – பிரபு சாலமன் – ராணா – விஷ்ணு விஷால் இணைந்துள்ள ‘காடன்’

உலகமெங்கும் மும்மொழிகளில் பொங்கலுக்கு பிரம்மாண்ட வெளியீடு
‘கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘காடன்’.

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார்.

இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா.

ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் 40 நாட்கள் நடைபெற்றது.

பின்பு உன்னி என்ற யானையை வைத்து கேரளாவில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பின்பு, புனேவில் உள்ள சதாரா, மும்பை பிலிம் சிட்டி, காரகர் என தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

பெரும் காடுகள், மலைகள் என கஷ்டப்பட்டு பல காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அவை அனைத்துமே திரையரங்கில் பார்த்தால் மட்டுமே, அதன் பிரம்மாண்டம் தெரியும். திரையரங்கில் மட்டுமே வெளியாகும்.

இந்தப் படத்துக்காக காடுகளின் இயற்கை ஒலி படத்துக்கு முதுகெலும்பாக இருப்பதால் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி ‘காடன்’ படத்துக்கு ஒலியை வடிவமைத்துள்ளார்.

‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராணா 2 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ளார். விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யானை பாகனாக நடித்துள்ளார். நாயகியாக ஜோயா நடித்துள்ளார்.

இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பை 2021-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்குக் கொண்டுவர ஈராஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு – ஈராஸ் நிறுவனம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபு சாலமன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
எடிட்டிங் – புவன்
சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு – ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சிவா
கலை இயக்குநர் – மயூர்
இசை – சாந்தனு மொய்த்ரா (3 இடியட்ஸ் படத்தின் இசையமைப்பாளர்)
பி.ஆர்.ஓ – நிகில் முருகன்

Kaadan release date officially announced

Kaadan

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி இணைந்து தயாரிக்கும் சைக்கோ திரில்லர் திரைப்படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

LK Sudheeshரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் புரடக்ஷன் நம்பர் ஒன்.

இப்படத்தின் துவக்க விழா இன்று காலை 9 மணி அளவில் சென்னை கைகான் குப்பத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் எல் கே சுதீஷ், இயக்குனர்கள் பாக்கியராஜ், விஜய் மில்டன், சரவணன், பார்த்திபன், தயாரிப்பாளர் கே ஆர் பிலிம்ஸ் சரவணன், ஜாகுவார் தங்கம், PRO டைமண்ட் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ். ஒளிப்பதிவு சிவ சாரதி, இசைஅமைப்பாளராக விக்கி மற்றும் ஹரி, படத்தொகுப்பு ராம்நாத், கலை பழனி குமார், சண்டைப்பயிற்சி ரக்கர் ராம்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரகாஷ் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மியா யுக்தா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கலை இயக்குனர் கிரண், போஸ் வெங்கட், KPY பாலா, அமுதவாணன், வில்லனாக அஜய் கண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி சென்னை, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற உள்ளது.

தனது மக்கள் தொடர்பாளர் எம்.பி. ஆனந்த் தயாரிக்கும் படத்தை தயாரிப்பாளர் எல்.கே சதீஷ் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி, கிளாப் அடித்து துவக்கி வைத்தனர்.

Raw creations and Friday film factory joins for Psyco thriller movie

மக்கள் அழைக்கட்டும்..; தேவைப்படும் போது அரசியல் கட்சி.. விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

மக்கள் அழைக்கட்டும்..; தேவைப்படும் போது அரசியல் கட்சி.. விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay SACதான் பாஜகவில் சேரவுள்ளதாக வெளிவந்த தகவல் உண்மையில்லை என எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கமளித்தார் என்ற தகவலை பார்த்தோம்.

இது தொடர்பாக அவரின் அண்மை பேட்டியில்…. “விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும்.

மக்கள் விஜய்யை அரசியலுக்கு அழைக்கும் போது அவர் வருவார்.

நாங்களாக வருவதைவிட மக்கள் அழைக்கும்போது அரசியலுக்கு வருவது சக்திவாய்ந்ததாக இருக்கும்.

விஜய் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்தவே தற்போது முழுகவனம் செலுத்தி வருகிறேன்.

பாஜவுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை”

இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

Director SAC talks about Vijay’s Political entry

நீட் தேர்வில் நீதி உண்டா?.. கவர்னர் கண் திறப்பாரா..? கமல்ஹாசன் கேள்வி

நீட் தேர்வில் நீதி உண்டா?.. கவர்னர் கண் திறப்பாரா..? கமல்ஹாசன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal haasanமாணவர்களின் மருத்துவ கனவை நினைவாக்கும் விதமாக, இளங்கலை மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் உள்ளது.

இதனிடையே இன்று பிற்பகல் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் நேரில் ஆளுநரை சந்தித்து விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், 7.5% உள்ஒதுக்கீடு தர ஆளுநர் விரைந்து ஒப்புதல் தருவதாக ஆளுநர் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையில் நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக, அத்தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை மீது அரியலூர், சென்னை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் புகார் அளித்தனர்.

மேலும் விடைத் தாளில் விடைகள் மாறியுள்ளதாக, விடைகள் மாற்றப்பட்டு பூஜ்ஜியம் என மதிப்பெண்கள் வந்திருப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

விடைத்தாள் அதாவது ஓஎம்ஆர் நகல்கள் பதிவேற்றம் செய்த பின் விடைக்குறிப்பை வைத்து சரிபார்த்ததில் நிறைய மதிப்பெண்கள் கிடைத்ததாகவும், தற்போது அந்த விடைத்தாள் நகல் மாற்றப்பட்டு பதிவெண், கையெழுத்து ஆகியவை ஒரே மாதிரியாக உள்ளதாகவும் மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில்…

தேர்விலேயே ஆள் மாறாட்டம்,
முடிவுகளில் முழுக் குழப்பம்.

இட ஒதுக்கீட்டுக்கு மறுப்பு,
உள் ஒதுக்கீடும் துறப்பு.

கோணலான நீட் தேர்வில் நீதிக்கு இடம் உண்டா?

கவர்னர் மாளிகையாவது கண் திறக்குமா? காத்திருக்கிறார்கள் கண்மணிகள்.

Kamal Haasan wants justice over NEET exam

More Articles
Follows