‘தேன்’ படம் பார்க்க ஏஜிஎஸ் தியேட்டர்கள் வழங்கும் சூப்பர் தள்ளுபடி

‘தேன்’ படம் பார்க்க ஏஜிஎஸ் தியேட்டர்கள் வழங்கும் சூப்பர் தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்களின் இரசனை அறிந்து அவர்களை மகிழ்ச்சியில் மெய் மறக்கச் செய்திடும் மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களை தயாரிப்பதிலும், அதனை வெளியிடுவதிலும், மலிவான விலையில் சிறப்பான மற்றும் தரமான திரை அனுபவத்தை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன், அதி நவீன பாதுகாப்பு அம்சங்களோடு பார்வையாளர்களுக்கு என்றென்றும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது AGS சினிமாஸ்.

பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு குடும்பதத்தினரோடு வந்து திரைப்படங்களை காண்பதில் உள்ள சிரமங்களை கண்டுணர்ந்து, டிக்கெட் விலையில் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம்.

மேலும் தின்பண்டங்களின் விலையில் 50% தள்ளுபடியையும் வழங்கி அவர்களின் சினிமா அனுபவத்தினை சிறப்பானதாகவும், சிக்கனமானதாகவும் அமையச் செய்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது AGS சினிமாஸ்…

ஒரு நல்ல திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும், அதனை சரியான தருணத்தில் மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்பட்சத்தில்.

அந்த வகையில் கணேஷ் விநாயகன் இயக்கத்தில், பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருந்துகளை வென்று, வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும், AP Productions தயாரித்த ‘தேன்’ எனும் திரைப்படத்தினை ரூ.100/-சலுகை விலையில் பார்வையாளர்களுக்கு வழங்கி, இத்திரைப்படத்தினை பெருவாரியான மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் பங்கு கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறது AGS சினிமாஸ்..

எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை, அழகியலோடு திரையில் கண்டு மகிழ்ந்திட … வாருங்கள் சினிமாவை கொண்டாடுவோம்…

AGS Cinemas makes great quality cinema experience affordable

சூர்யா 40 பட பற்றி சூப்பர் அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

சூர்யா 40 பட பற்றி சூப்பர் அப்டேட் வெளியிட்ட சன் பிக்சர்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் பட படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படம் தற்காலிகமாக ‘சூர்யா 40’ என அழைக்கப்பட்டு வருகிறது.

பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்க சத்யராஜ் முக்கியக் கேரக்டரில் நடிக்கிறார்.

கிராமப்புற கதையை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்குகின்றனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் இதில் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய ‘ஆதவன்’ படத்தில் சூர்யாவுடன் நடித்திருந்தார் வடிவேலு.

தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இணையும் படம் இதுவாக அமைய வாய்ப்புள்ளது. ஆனால் வடிவேலு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் தற்போது சூட்டிங் தொடங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Suriya 40 kick starts today

விஜய் சூர்யா பற்றி அந்த மாதிரி பேச திருநங்கை தான் காரணம்..; மன்னிப்பு கேட்கும் மீரா மிதுன்

விஜய் சூர்யா பற்றி அந்த மாதிரி பேச திருநங்கை தான் காரணம்..; மன்னிப்பு கேட்கும் மீரா மிதுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் & அவரது மனைவி சங்கீதா.. சூர்யா & அவரது மனைவி நடிகை ஜோதிகா பற்றி மிக கேவலமாக பேசி வீடியோக்களை வெளியிட்டவர் நடிகை மீரா மிதுன்

இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் மீராவை கடுமையாக சாடினர்.

மீராவுக்கு பாரதிராஜாவும் கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன் நான் தற்கொலை செய்ய போகிறேன் என கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டார்.

மேலும் தன்னை கொலை செய்ய 8 பேர் துரத்துவதாக கூறியிருந்தார்.

இப்போது புதிய வீடியோவில் ”விஜய், சூர்யாவைப் பற்றி பேசியது தவறு.

அதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

மேலும் அப்படி பேச அதிமுக பிரமுகர் அப்சரா ரெட்டி என்ற ஒரு திருநங்கைதான் காரணம்” என அதில் தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

My Apologies to Vijay and Suriya says Meera Mithun

தனுஷின் ‘கர்ணன்’ பட ரிலீசுக்கு தடை கேட்டு புல்லட் ரவி புகார் மனு

தனுஷின் ‘கர்ணன்’ பட ரிலீசுக்கு தடை கேட்டு புல்லட் ரவி புகார் மனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன்.

தனுஷுடன் ரஜிஷா, லட்சுமி பிரியா, யோகிபாபு, லால் என பலர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படம் ஏப்ரல் 9ல் திரைக்கு வருகிறது.

இப்படத்தில் இடம்பெற்ற இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளது.

அதில் ஒரு பாடலான ‘கண்டா வரச்சொல்லுங்க…’ என்ற பாடலை ஒரு நாட்டுப்புறப்பாடலை தழுவியதாக ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்தன.

தற்போது ‘பண்டாரத்தி புராணம்…’ என்ற பாடலில் ஒரு குறிப்பிட்ட தமிழ் சமூகத்தினரை இழிவுபடுத்துவது போன்ற வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வரிகளை நீக்கும் வரை ‘கர்ணன்’ படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என கோரி மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த புல்லட் ரவி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தயாரிப்பாளர் எஸ்.தாணு, டைரக்டர் மாரி செல்வராஜ், திங்க் மியூசிக் இந்தியா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

எனவே ‘கர்ணன்’ பட ரிலீசில் சிக்கல் உருவாகியுள்ளது.

Plea in HC seeks ban on Dhanush’s Karnan

‘குக் வித் கோமாளி’ அஸ்வினுடன் ஜோடி போட ஆசைப்படும் ஷிவாங்கி

‘குக் வித் கோமாளி’ அஸ்வினுடன் ஜோடி போட ஆசைப்படும் ஷிவாங்கி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குக் வித் கோமாளி என்ற டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி.

இதன் காரணமாக தற்போது சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்து வரும் டான் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இவரின் சமீபத்திய பேட்டியில்…

‘குக் வித் கோமாளி’-யில் எனக்கும் அஸ்வினுக்குமிடையே செம கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்டாகியுள்ளது.

ஒருவேளை அஸ்வின் சினிமாவில் நடித்தால் அவருடன் ஜோடி போட ஆசை.

மேலும் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் ஆகியோரின் படங்களிலும் நடிக்க ரொம்ப ஆசையாம்.

இவ்வாறு ஷிவாங்கி கூறியிருக்கிறார்.

I wish to act with CWC Ashwin says Sivaangi

குஷ்பு பிரேமலதா முருகன் சிநேகன் அண்ணாமலை ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

குஷ்பு பிரேமலதா முருகன் சிநேகன் அண்ணாமலை ஆகியோர் வேட்பு மனு தாக்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சட்டசபைத் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

எனவே அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ளது.

எனவே இதை விஐபி.க்கள் ஏரியா என்பர்.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக.வின் கோட்டை என்றே அழைக்கப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு திமுகவில் இருந்தவர் (தற்போதைய பாஜகவை சேர்ந்தவர்) கு.க.செல்வம் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தான் வெற்றி அடைந்தார்.

இங்கு பாஜக. சார்பில் போட்டியிட பாஜக வேட்பாளர் குஷ்பு இன்று மார்ச் 18ல் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன், அமமுகவை சேர்ந்த வைத்தியநாதன், நாம் தமிழர் ஷெரீன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

பாஜக வேட்பாளர் அண்ணாமலை அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் சிநேகன் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் நீதி மய்ய உறுப்பினர்களுடன் சென்று இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார். இன்று காலை 11.15 மணிக்கு மனுதாக்கல் செய்தார்.

டெபாசிட் தொகையாக 5 ஆயிரம் ரூபாயை 5 மற்றும் பத்து ரூபாய் என தொண்டர்களிடமிருந்து நன்கொடையாக பெற்ற பணத்தை முருகன் வழங்கினார்.

2006இல் விருத்தாச்சலம் தொகுதியில் தனித்து நின்று வென்றார் விஜயகாந்த்.

அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இந்த முறை அங்கு போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். இன்று பிரேமலதாவின் 52வது பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமமுக மற்றும் தேமுதிக இந்த முறை கூட்டணி அமைத்துள்ளனர். முதல்வர் வேட்பாளராக டிடிவி தினகரன் நிற்கிறார்.

60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. ஆனால் தேர்தலுக்கு குறைவான காலமே இருப்பதால் மற்ற தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்யவிருக்கிறாராம் பிரேமலதா.

MNM and BJP cadidates files nomination for their constituencies

More Articles
Follows