தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 50 வருடங்களாக திரையுலகில் பயணிக்கும் சாதனையாளர் அடூர் கோபாலகிருஷ்ணன்.
இவரை மலையாள சினிமாவின் பிதாமகன் என அழைப்போரும் உண்டு.
சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல. அவற்றால் சமூகத்தில் பல மாற்றங்களை செய்ய முடியும் என தன் படங்களால் நிரூபித்தவர் இவர்.
இந்நிலையில் இவர் இன்று தனது 75 வது பிறந்த நாள் கொண்டாடி வருகிறார்.
இந்த 50 வருடங்களில் மொத்தம் 12 படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
இவரது முதல் படமான ‘சுயம்வரம்’ 1972ஆம் ஆண்டு வெளியானது.
மலையாள சினிமாவையே புரட்டி போட்ட படம் இது என்றால் அது மிகையல்ல.
முதல் படமே ஐந்து தேசிய விருதுகளை பெற்றது.
இதனை தொடர்ந்து கொடியேட்டம், எலிப்பத்தாயம் உள்ளிட்ட 10 படங்களை இயக்கியுள்ளார்.
தாதாசாகேப் பால்கே, பத்மஸ்ரீ, 7 தேசிய விருது என 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இவரின் 12வது படமான பின்னேயும் விரைவில் வெளியாகவுள்ளது. இதில் திலீப், காவ்யா மாதவன் இணைந்து நடித்துள்ளனர்.