மாடர்ன் கேரக்டரும் கொடுங்கப்பா ; வசுந்தராவை கெஞ்ச வைத்த கோலிவுட்

மாடர்ன் கேரக்டரும் கொடுங்கப்பா ; வசுந்தராவை கெஞ்ச வைத்த கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Vasundhara talks about her upcoming moviesபேராண்மை படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக களமிறங்கி, தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தனிக் கதாநாயகியாக கவனம் ஈர்த்தவர் நடிகை வசுந்தரா.

எஸ்.பி.ஜனநாதன், சமுத்திரக்கனி, சீனுராமசாமி என முத்திரை இயக்குநர்களின் கையால் மோதிரக்குட்டு பெற்றவர்.

தற்போது சீனு ராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ படம் மூலம் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்துள்ளார்.

தற்போது தான் நடிக்கும் படங்கள், ஏன் இந்த இடைவெளி என்றெல்லாம் நம்மிடம் பகிர்ந்துகொண்டார் வசுந்தரா.

‘கண்ணே கலைமானே’ படத்தில் முக்கியமான கேரக்டரை சீனுராமசாமி சார் எனக்கு கொடுத்துள்ளார். எப்பவுமே அவருக்கு பிடித்தமாதிரி இனிமையா, கொஞ்சம் நகைச்சுவையா, அதேசமயம் கொஞ்சம் கடினமான அப்பட்டமான கிராமத்துப் பெண் கேரக்டர் ஒன்று இருக்கும் இல்லையா.? அப்படி ஒரு கேரக்டரில் தான் நான் நடிக்கிறேன்.

இதில் கிராமமும் இல்லாத மிகப்பெரிய நகரமும் அல்லாத ஒரு மீடியமான நகரத்துப் பெண்ணாக ஒரு தேங்காய் மண்டி ஒன்றின் ஓனரின் மகளாக நடித்திருக்கிறேன்.

அந்த கேரக்டரை உருவாக்கும்போதே என் உருவம் தான் சீனு சாருக்கு மனதில் தோன்றியதாம். அதனால் எட்டு வருடம் கழித்து என்னை அழைத்துள்ளார். அவர் உருவாக்கிய கேரக்டர் இதுவரை தப்பாகி இருக்கிறதா என்ன..? இதிலும் அப்படி ஒரு அருமையான கேரக்டர்.

உதயநிதி ஸ்டாலின் தோழியாக இதில் நடித்துள்ளேன். பெரிய இடத்துப் பிள்ளை என்கிற எந்த பந்தாவும் இல்லாமல் பழகினார். தமன்னாவுடன் சில காட்சிகள் சேர்ந்து நடித்தாலும் அது புது அனுபவமாக இருந்தது.

சின்ன வயதில் டிவியில் பார்த்த வடிவுக்கரசி அம்மாவுடன் நடிக்கும்போது என்னுடைய பாட்டியைப் பார்ப்பது போலவே இருந்தது.

இத்தனை வருஷங்களில் சீனு ராமசாமியின் வயசு மட்டும் மாறியிருக்கே தவிர, அவர் அப்படியே தான் இருக்கிறார். மாறவே இல்லை. முன்னெல்லாம் சில காட்சிகளை படமாக்கும்போது கொஞ்சம் யோசிச்சு பண்ணுவார்..

ஆனா இப்ப ஸ்பாட்டுக்கு வர்றப்பவே இதுதான் எடுக்கணும்னு தீர்மானிச்சு முன்னைவிட ரொம்பவே தன்னம்பிக்கையா படம் பண்றார். நான் நடித்த படத்தோட டைரக்டர் தேசிய விருது வாங்கிட்டார்னு சொல்லும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்.

இந்தப்படத்துல தேங்காய் மண்டிக்கு சொந்தக்காரி அப்படிங்கிறதால கொப்பரை தேங்காய் உடைச்சு உடைச்சு கையில எல்லாம் சரியான காயம்..

முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுல கொண்டுபோய் விட்டுட்டு மறுநாள் காலையிலேயே எந்த பயிற்சியும் இல்லாம தேங்காய் உடைக்க விட்டுட்டாங்க…

இதுதவிர ‘வாழ்க விவசாயி’ங்கிற படத்துல நடிச்சுட்டு இருக்கேன்.. இதுவும் கிராமத்து கேரக்டர் தான். ராஜபாளையத்தை சேர்ந்த மோகன் என்கிற புது இயக்குநர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ஒரு பக்கம் உணவுப்பொருள் விலை ஏறுது.. ஆனா இன்னொரு பக்கம் விவசாயிகள் தற்கொலை ஏன் அதிகரிக்கிறது என்கிற விஷயத்தை இந்தப்படம் அலசுகிறது. ஷூட்டிங் சமயத்துல கிராமத்து மக்கள் எனக்கு நிறைய விஷயங்கள் சொல்லிக்கொடுத்தாங்க.

விவசாய நிலத்துல காவல் காக்குற பரண்மீது ஒரு பாடல் காட்சி எடுக்கும்போது, அதுல விரிசல் ஏற்பட்டு 12 அடி உயரத்துல இருந்து அப்புக்குட்டி கீழே விழ, அவர் மேல நாங்க எல்லாம் விழுந்தோம்.. ஆனா யாருக்கும் அடியெல்லாம் எதுவும் படலை.

அடுத்ததாக விக்ராந்துடன் ‘பக்ரீத்’ என்கிற படத்தில் தற்போது நடிக்கிறேன்..

ஒட்டகத்தை வைத்து படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் இது. இதுக்காக ஒட்டகத்துடன் பழகி சில நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள்.. இதிலேயும் கிராமத்து பெண்ணாக, விக்ராந்தின் மனைவியாக நடித்துள்ளேன். இதில் அவ்வளவாக மேக்கப் போடாமலே நடித்துள்ளேன்.

விரைவில் வெளிவர இருக்கும் பக்ஷி, சிகை படங்களை இயக்கிய ஜெகதீசன் சுப்பு தான் இந்தப்படத்தை இயக்குகிறார். காக்கா முட்டை படத்தில் பணியாற்றியவர்.. அவரது பக்ஷி படம் பற்றி கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டுத்தான் இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

பெரிய பெரிய இயக்குநர்கள் படத்தில் நடிச்சிருந்தும் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதில் ஏன் இவ்வளவு இடைவெளி என கேட்கிறார்கள்..

என்னைக் கேட்டால் எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரணும். ஆரம்பத்தில் கமர்ஷியல் படம் வேண்டாம்.. நடிப்புக்கு வாய்ப்புள்ள கேரக்டர்களில் நடித்தால் மட்டும் போதும் என நினைத்தேன்.

சீனு சார் கூட என்கிட்டே சொல்லும்போது, உனக்கு திருப்தி தருகிற மாதிரியான, பல வருஷம் கழித்து பார்த்தாலும் நீ நினைத்து பெருமைப்படும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடி என சொல்வார்.

ஆனால் பெரும்பாலும் என்னிடம் கதைசொல்ல வருபவர்கள் எல்லோருமே கிராமத்து பெண் கேரக்டருடன் தான் வருகிறார்கள்… அப்படியே கிராமத்து பெண் கேரக்டரா இருந்தாலும், அடடா சூப்பரான ரோல், எப்படா ஷூட்டிங் கிளம்புவோம்னு ஒரு ஆர்வம் வர்ற மாதிரி எந்த கேரக்டரும் தேடி வரலை.

தமிழ்ப்பெண் என்பதாலோ என்னவோ நீங்க கிராமத்துப்பெண்ணா நல்ல நடிக்கிறீங்களேன்னு ஒரு முத்திரை குத்திடுறாங்க..

அதேசமயம் இப்படி விலகியே போய்க்கிட்டு இருந்தா ரசிகர்கள் நம்மை மறந்துருவாங்க.. ஆரம்பத்துல அப்படி தோணலை. ஆனா இப்ப அது உண்மைன்னு தெரியுது. அதனால இனி தொடர்ந்து என்னோட படங்களை எதிர்பார்க்கலாம். அதுக்கேற்ற மாதிரி கொஞ்சம் மாடர்ன் கேரக்டர்களா வந்தால் நல்லா இருக்கும்.

இப்போ தமிழ் சினிமாவோட கலரே மாறிட்டு வருதே… இங்கிலீஷ் பட இண்டஸ்ட்ரி மாதிரி ஆகிட்டு வருது. விஜய் சேதுபதியின் 96 படம் பார்த்தேன்.. சூப்பர் படம்.. சான்ஸே இல்லை.. தியேட்டர்ல அழுதுக்கிட்டே படம் பார்த்தேன்.. த்ரிஷா என்னுடைய ஆல்டைம் பேவரைட். அப்புறம் அடங்க மறு ரொம்ப பிடித்த பட லிஸ்டில் சேர்ந்துவிட்டது.

மிக மிக அவசரம், டு லெட் எங்கள் கண்ணே கலைமானே போன்ற நல்ல படங்கள் வருவது சினிமாவுக்கு ஆரோக்கியம்தானே,, புதிய இயக்குநர்கள் நல்ல கதைகளோடு வந்தால் பணம் பற்றி கவலைப்படாமல் நடித்துக் கொடுக்க தயாராக உள்ளேன்..

எப்போதும்போல அதே நான்ஸ்டாப் ஸ்பீடில் அவருக்கே உரிய தனித்துவமான வெண்கல குரலில் கலகலப்பாக பேட்டியை முடிக்கிறார் வசுந்தரா.

Actress Vasundhara talks about her upcoming movies

அபி சரவணன் இப்படி செய்தாரா? அதிதி மேனன் போலீசில் புகார்

அபி சரவணன் இப்படி செய்தாரா? அதிதி மேனன் போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Living together issue between Abi Saravanan and Aditi Menonபட்டதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர் அபி சரவணன்.

இவர் சமூக சேவைகளில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். விவசாயிகளின் போராட்டத்தின் போது டெல்லி வரை சென்று அவர்களுக்கு உதவினார்.

இவர் 2016-ம் ஆண்டு பட்டதாரி படத்தில் நடித்த போது அதிதி மேனன் உடன் காதல் கொண்டார்.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அபி சரவணனை நடிகை அதிதி மேனன் ஆட்களை வைத்து கடத்தியதாக அவரது தந்தை ராஜேந்திர பாண்டியன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் காவல்நிலையத்தில் நேரில் ஆஜரான அபி சரவணன் தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறினார்.

தற்போது நடிகை அதிதி மேனன், அபி சரவணன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன்…

“பட்டதாரி படத்தில் என்னுடன் இணைந்து நடித்தார் அபி சரவணன். நான் அவரைத் திருமணம் செய்துகொண்டு அவருடைய பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாகவும், ஏமாற்றிவிட்டதாகவும், என்னைப் பற்றி தவறான செய்திகள் வந்தன.

அடுத்ததாக இன்னொரு நபருடன் ஓடிவிட்டதாகவும், அவருடன் இணைந்து வாழ்ந்ததாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன.

2016-ம் ஆண்டு முதல் அபி சரவணன் மீது அன்பான உறவு இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் சமூகசேவை செய்வதாக பணம் பெற்று பிரச்னைகள் உருவாகின.

இதில் என்னையும் மாட்டிவிடுவார் என்ற சூழ்நிலை வந்தது. இதுபற்றி பேசியபோது எங்களிடையே வாக்குவாதம் உண்டானது.

மேலும் ஒரு கதாநாயகியுடன் அவருக்கு 3 வருடம் உறவு இருந்தது. இதனால் வாக்குவாதம் ஏற்படவே பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் மற்றொரு புறம் அதிதிக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட, அது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Living together issue between Abi Saravanan and Aditi Menon

Breaking வர்மா-விற்கு பதிலாக துருவ் விக்ரம் அறிமுகமாகும் படம் இதுதான்

Breaking வர்மா-விற்கு பதிலாக துருவ் விக்ரம் அறிமுகமாகும் படம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Varmaa movie dropeed Dhruv Vikram next titled Adithya Varmaவிஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான அர்ஜுன் ரெட்டி படம் தெலுங்கில் செம ஹிட்டானது.

எனவே இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஈ4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கி தமிழில் உருவாக்கியது.

ரீமேக் படங்களை இயக்காத பாலா இப்படத்தை நடிகர் விக்ரமுக்காக இயக்க ஒப்புக் கொண்டார்.

இப்படத்தின் மூலம் விக்ரமின் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாகவிருந்தார்.

இதில் நாயகியாக மாடல் அழகி மேகா, ரைசா நடித்திருந்தனர்.

ஆனால் படம் முழுவதும் படமாக்கப்பட்ட பின் படம் திருப்தியில்லை என படத் தயாரிப்பாளர் அறிவித்தார்.

இந்நிலையில் அதே ரீமேக் படத்தை மற்றொரு இயக்குனரின் இயக்கத்தில் தயாரிக்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளனர்.

அதன்படி ஆதித்யா வர்மா என்று பெயரிட்டு பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

கீரிஷ்ய்யா என்பவர் படத்தை இயக்க, நாயகிகளாக பனித்தா மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கின்றனர்.

ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஈ4 எண்டர்டெய்ண்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Varmaa movie dropped Dhruv Vikram next titled Adithya Varma

LKG படத்திற்கு 5AM காட்சி; விஷ்ணு விஷால் & RJ பாலாஜி திடீர் மோதல்

LKG படத்திற்கு 5AM காட்சி; விஷ்ணு விஷால் & RJ பாலாஜி திடீர் மோதல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishnu Vishal and RJ Balaji have nasty fight regarding LKG 5am showரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட டாப் ஹீரோஸ் படங்களுக்கு மட்டுமே அதிகாலை 4 மற்றும் 6 மணி காட்சிகள் திரையிடுவது வழக்கம்.

தற்போது அது நீண்டு தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய்சேதுபதி ஆகியோர் படங்களுக்கும் திரையிடப்பட்டு வருகிறது.

இவையில்லாமல் நடிகைகளில் நயன்தாரா படத்திற்கும் திரையிடப்பட்டது.

தற்போது ஓவியா நடித்துள்ள 90எம்எல் படத்திற்கு மார்ச் 1ஆம் தேதி அதிகாலை காட்சி இருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் வெளியாகவுள்ள எல்கேஜி படத்திற்கு சென்னை ரோகிணி தியேட்டரில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனையறிந்த நடிகர் விஷ்ணு விஷால், “காலை 5 மணி காட்சி அதன் மதிப்பை இழந்து வருகிறது. தந்திரமாக மாறிவிட்டது” என்று மறைமுகமாக சாடியிருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.ஜே.பாலாஜி, “நானும் எல்.கே.ஜி படத்துக்கான காலை 5 மணிக் காட்சி தந்திரம் என்றே நினைத்தேன். பிறகு திரையரங்க உரிமையாளரிடம் நேரடியாகக் கேட்டு உறுதி செய்துகொண்டேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுக்கு யாருடைய சிபாரிசும் இல்லை. மெரிட் அடிப்படையில் சிறப்பு காட்சி கிடைத்துள்ளது.

இந்த சிந்தனைக்கு ஓய்வு கொடுங்கள். மற்றவர்கள் உழைப்புக்கு மதிப்பளியுங்கள், உங்கள் மதிப்பு உங்களுக்குக் கிடைக்கும்” என்று தனது தெரிவித்துள்ளார்.

எனவே ஆர்.ஜே.பாலாஜிக்கு விஷ்ணு விஷால் பதிலளித்துள்ளதாவது…

“உங்களைச் சுற்றியிருப்பவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். சினிமாவுக்கு வருவதற்கு முன் நீங்கள் என்ன செய்தீர்கள். அப்போது நடிகர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.

உங்கள் உழைப்பை மட்டுமில்லாமல் அனைவரின் கடின உழைப்பையும் மதியுங்கள்.

நான் எனக்கான அங்கீகாரத்தைப் பெறுகிறேன். நான் வெற்றிக்காக மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.

இப்படியாக இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டுள்ளனர்.

பின்னர் இருவரும் போனில் பேசி பிரச்சினையை முடித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Vishnu Vishal and RJ Balaji have nasty fight regarding LKG 5am show

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் தேசிய விருது இயக்குனரின் மகள்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியானார் தேசிய விருது இயக்குனரின் மகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kalyani Priyadarshan pair up with Sivakarthikeyan in SK15ஞானவேல் ராஜா தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘Mr.லோக்கல்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

நயன்தாரா நாயகியாக நடிக்க, ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இப்படம் மே 1-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இன்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

சில நாட்களாக இதன் சூட்டிங் நின்ற நிலையில் தற்போது படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து ‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.

இப்படத்தை 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறதாம்.

இதில் முக்கிய வேடத்தில் ஆக்சன் கிங் அர்ஜீன் நடிக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவர் தேசிய விருது பெற்ற பிரபல இயக்குனர் பிரியதர்சனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் அம்மா லிசியும் பிரபல நடிகையாவார்.

இந்த நாயகி கல்யாணி ‘வான்’ என்ற தமிழ்ப்படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Kalyani Priyadarshan pair up with Sivakarthikeyan in SK15

ராமராஜன் படத்தலைப்பை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

ராமராஜன் படத்தலைப்பை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyans production 2nd movie titled Nenjamundu Nermaiunduசினிமாவில் அறிமுகமான சமயத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவ்வளவாக படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மாபெரும் வெற்றிக் பிறகு அவர் இன்று வரை முன்னணி நாயகர்களின் வரிசையில் இணைந்து விட்டார்.

தற்போது வரை 15 படங்களில் கூட அவர் நடிக்கவில்லை. ஆனால் திறமையான கலைஞர்களுக்கு தன் தயாரிப்பில் வாய்ப்புகளை வழங்கி வருகிறார்.

தன் தயாரிப்பு படங்கள் என்றாலும் அவர் அதில் நாயகனாக நடிக்கவில்லை.

கனா படத்தின் மூலம் தன் நண்பன் அருண்ராஜா காமராஜை இயக்குனராக்கி அழகு பார்த்தார்.

படம் மாபெரும் ஹிட்டடிக்க, 2வது படத்தை தயாரித்து வருகிறார்.

இதில் டிவி பிரபலம் ரியோ நாயகனாக நடிக்கிறார்.

அவருடன் ஷிரின், ராதாரவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது படத்தின் சூட்டிங் முடிந்து டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன.

இப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். இவருடன் பிளாக் ஷீப் யூடியூப் குழுவும் படத்தை இயக்கிவருகிறது.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ என படத்தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதே தலைப்பில் ராமராஜன் நடித்த படம் ஒன்று கடந்த 1991ல் வெளியானது.

இதில் ராமராஜன் உடன் ரூபினி, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

Sivakarthikeyans production 2nd movie titled Nenjamundu Nermaiundu

Sivakarthikeyans production 2nd movie titled Nenjamundu Nermaiundu

More Articles
Follows