நடிகர் ப்ளாக் பாண்டியை இசையமைப்பாளராக்கிய கொரோனா

நடிகர் ப்ளாக் பாண்டியை இசையமைப்பாளராக்கிய கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Black Pandi became Music composer for Corona songநடிகர் பிளாக் பாண்டி தமிழக காவல் துறையினருகாக கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி இசையமைத்துள்ளார்.

இதனைப் பற்றி நடிகர் பிளாக்பாண்டி கூறுகையில்….

இந்த கொரோனா வைரசால் வீட்டில் இருக்கும் போது இதனை பயனுள்ளதாக மாற்ற எண்ணிய போது நமது காவல்துறையும், துப்புரவு தொழிலாளர்களும், மருத்துவர்களும், மின்சார ஊழியர்களும் நமக்காக உழைப்பதை எண்ணி நான் மிகவும் பெருமைப் பட்டேன்.

அவர்களைப் பாராட்டும் விதமாகவும் மேலும் நாம் அனைவரும் வீட்டில் இருந்தால் தான் இந்த வைரஸை விரட்ட முடியும் என்பதாலும் “விழித்திரு நண்பா, விலகி இரு நண்பா” என்ற வரிகளை மையமாக வைத்து ஒரு பாடலை நானும் எனது நண்பன் திரு.ராஜாமுகமதுவும் சேர்ந்து எழுதியுள்ளோம். நான் இசை அமைத்து இயக்கி இருக்கிறேன்.

இதற்கு உதவிய திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் துணை ஆணையாளர் அவர்களுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த சென்னை மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மற்றும் தமிழ்நாடு காவல்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் திரு. பிரகாஷம் தலைமை காவலர் முதல்முறையாக இப்பாடலை பாடியுள்ளார். எனவே மக்கள் அனைவரும் இந்த பாடலை கேட்டு ரசித்து வீட்டிலேயே பாதுகாப்பாகவும் இருந்து இந்த வைரஸை விரட்ட ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இத்தருணத்தில் நாம் விலகி கூடுவோம்
நம்மையும் பாதுகாத்து
நம்மை தனிமைப்படுத்தி
நாட்டையும் பாதுகாக்க வேண்டுகிறேன்.

ஒருவருக்கொருவர் தங்களால் முடிந்த உதவிகளை தன் சூழலில் இருக்கும் நண்பர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் செய்து அவர்களை பசிப்பிணியில் இருந்து காக்க வேண்டும்” என்றார்.

Actor Black Pandi became Music composer for Corona song

65 வருசம் சம்பாதித்த பால்கனி பையன் கமல்.. இப்ப வந்துட்டாரு… – ராஜா

65 வருசம் சம்பாதித்த பால்கனி பையன் கமல்.. இப்ப வந்துட்டாரு… – ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Balcony Boy Kamal earned for 65 years says BJP H Rajaகொரோனா ஊரடங்கு விஷயத்தில் பிரதமர் மோடி எடுத்த பல நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தார் கமல்ஹாசன்.

மேலும் மோடிக்கு தன் கண்டனங்களை நீண்ண்ண்ண்ட கடிதம் எழுதியிருந்தார்.

மோடியின் அரசு பால்கனி அரசு. அடித்தட்டு மக்களை கண்டுக்கொள்வதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

கமல்ஹாசனின் கருத்துக்களுக்கு சில தினங்கள் கழித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பதிலடியை கொடுத்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:

பால்கனி அரசு? இந்த அரசு 2/3 பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் ஒரு பால்கனி பையன், தனது 65 ஆண்டு வரை பிஸியாக பணம் சம்பாதித்துவிட்டு தற்போது திடீரென ஏழை மக்களுக்காக ரூ.1.7 லட்சம் கோடி வழங்கிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சாட்டுகிறார். வெட்கம்’ என்று கூறியுள்ளார்.

Balcony Boy Kamal earned for 65 years says BJP H Raja

https://twitter.com/HRajaBJP/status/1251359891848978434

பஞ்சாயத்து பண்ணல ஆனா…; விஜய்-அஜித் ரசிகர்களை சமாதானம் செய்யும் சாந்தனு

பஞ்சாயத்து பண்ணல ஆனா…; விஜய்-அஜித் ரசிகர்களை சமாதானம் செய்யும் சாந்தனு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shanthanu advice to Thala and Thalapathy fans to stop fightவிஜய் தீவிர ரசிகர் நடிகர் சாந்தனு என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

விரைவில் வெளியாகவுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்தில் சாந்தனு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களின் ட்விட்டர் மோதல் குறித்து தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்…

‘இங்க நான் ஒண்ணும் பஞ்சாயத்து பண்ண வரல்ல. அது என் வேலையும் இல்லை.

ஆனால் இருதரப்புக்கும் என்னால் முடிந்த ஒரு அறிவுரை. யாரும் யாரையும் விட்டு கொடுக்க வேண்டாம். தளபதி ரசிகர்கள் ட்ரோல்லை ஆரம்பித்து இருந்தால், தல ரசிகர்களுக்கு எனது வேண்டுகோளாக அதை கண்டுகொள்ளாமல் மறந்துவிடும்படி கேட்டு கொள்கிறேன்.

அதேபோல் ஒருவேளை தல ரசிகர்கள் ஆரம்பித்து இருந்தால், தளபதி ரசிகர்கள் அதனை கண்டுகொள்ளாமல் மறந்துவிடவும். பதிலுக்கு பதில் கூறினால் பிரச்சனை வளர்ந்து கொண்டேதான் போகும்’ என்று கூறியுள்ளார்.

Shanthanu advice to Thala and Thalapathy fans to stop fight

https://twitter.com/imKBRshanthnu/status/1251433554531270656

கொரோனா சேவை… சூர்யா கார்த்தி ரசிகர்களுக்கு SR பிரபு அட்வைஸ்

கொரோனா சேவை… சூர்யா கார்த்தி ரசிகர்களுக்கு SR பிரபு அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SR Prabu advice to Suriya and Karthi fans during Social Serviceகொரோனா ஊரடங்கு உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்னர்.

இதனால் வேலையிழந்து ஏழை மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஒரு மாதமாக வீட்டில் இருப்பதால் தங்களின் அன்றாட வாழ்க்கையே இவர்களுக்கு கேள்விக்குறியாகியுள்ளது.

இதனால் பிரபல நடிகர்களின் ரசிகர்கள் தங்களால் இயன்றளவில் ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர்.

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களும் நிவாரண பொருட்களை வழங்யும் உணவளித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா கார்த்தியின் உறவினரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு இது குறித்து கூறியுள்ளதாவது…

சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் ஓய்வின்றி ஏழை மக்களுக்கு உணவு மற்றும் மாஸ்குகள் கொடுத்து வருகின்றனர். அவர்களின் சேவைக்கு பாராட்டுக்கள்.

ஆனால் அதே நேரத்தில் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மக்களுக்கு உதவி செய்யும் போது மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள், சமூக விலகலையும் கடைபிடியுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

SR Prabu advice to Suriya and Karthi fans during Social Service

https://twitter.com/prabhu_sr/status/1251399678983192578

ஊரே பத்தி எரியுது.. திருந்துங்க; தல தளபதி ரசிகர்களை கண்டித்த கஸ்தூரி

ஊரே பத்தி எரியுது.. திருந்துங்க; தல தளபதி ரசிகர்களை கண்டித்த கஸ்தூரி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ignore negativity Kasthuri advice to Vijay Ajith fansநடிகை கஸ்தூரி ட்விட்டரில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருப்பவர்.

நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகளுக்கு இவரின் கருத்துக்கள் அவ்வப்போது வந்து ட்விட்டரில் விழும்.

அண்மையில் விஜய் இறந்த தேதி என அஜித் ரசிகர்கள் மற்றும் அஜித்துக்கு பாடைக்கட்டு என விஜய் ரசிகர்களும் ட்ரெண்ட் செய்தனர்.

கொரோனாவில் கொடிய காலத்திலும் இவர்கள் திருந்தவில்லை என நடுநிலையான நெட்டிசன்களே கண்டித்தனர்.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இந்த மோதல் தொடர்பாக ஒரு கருத்தை பதிவிட்டுள்ளா. அதில்…

அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை;

ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். Ignore negativity. வாழு வாழ விடு என்று பதிவு செய்துள்ளார்.

என கடுமையாக பதிவிட்டுள்ளார்.

Actress Kasthuri slams Vijay and Ajith fans

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய வசந்த் ரவி

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிய வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vasanth Ravi donates Mask and Gloves to Chennai Corporation ‘தரமணி’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடித்து தமிழக ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் வசந்த் ரவி.

தற்போது ‘ராக்கி’ என்ற படத்தில் நடித்துள்ளார் வசந்த் ரவி. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இவர் கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி பேசியதாவது :

இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. இது நல்லதா கெட்டதா என்பது தெரியாது புரியாது. ஆனால் இந்த நேரத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். முக்கியமான பாதுகாப்பாக இருப்போம்.

நமது அரசாங்கம், என்.ஜி.ஓ.க்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள் வெற்றி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முடிந்த பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

இதைப் பார்க்கும்போது இந்த நெருக்கடியிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை வருகிறது.

ஆனால், சென்ற வாரம் நான் மளிகை கடைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அந்த பாதையில் தூய்மை பணியாளர்கள், முகமூடி மற்றும் கையுறைகள் இல்லாமல் இருந்தார்கள். அதைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்தினேன்.

இதுபோன்று நெருக்கடியான நேரத்தில் நமக்காக நமது தெருவை சுத்தமாக வைத்திருக்கும் இந்தத் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு கவசமும் இன்றி பணியாருக்கிறார்கள்.

ஆகையால், அவர்களுக்கு உரிய சுகாதார கருவிகளை சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் வழங்கினேன்.

இதுபோல், உங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த கருவிகளை வழங்குங்கள் என்றார்.

நடிகர் வசந்த் ரவி, சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ்-ஐ சந்தித்து கொரோனா நெருக்கடியின் போது தங்கள் உயிரைப் பணயம் வைத்து சென்னை மக்களின் நலனுக்காக உழைக்கும் அனைத்து சுகாதாரத் தொழிலாளர்களுக்கும் 1000 சுகாதார கருவிகளை (கையுறைகள், முகமூடிகள் மற்றும் துப்புரவாளர்கள்) வழங்கினார்.

மேலும், கோவை மாவட்டம் தரமணி வசந்த் ரவி ரசிகர் மன்றத்தின் சார்பாக மே மாதம் 3 ஆம் தேதி வரை இடிகரை பகுதி அனைத்து வீடுகளுக்கும் மதிய சாப்பாடு தர ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கு உறுதுணையாக திரு.வசந்த் ரவி அண்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று கோவை மாவட்ட தரமணி வசந்த ரவி ரசிகர் மன்றத்தினர் தெரிவித்தார்கள்.

Actor Vasanth Ravi donates Mask and Gloves to Chennai Corporation

More Articles
Follows