நடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’!

நடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ashok in manithamமுருகா, பிடிச்சிருக்கு மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து,  ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 மூன்று படங்களிலும் நடித்து வருகிறார்.

பிட்நெஸ் என்று சொல்லப்படும் உடற்தகுதி / ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களுள் அசோக்கும் ஒருவர். மிகவும் ஈடுபாட்டுடன் ஒவ்வொருவரும் உடற்பயிற்சிகளை தினமும் செய்யவேண்டும் என்பதற்காக பிரீக்கத்தான் Freak- a-thon எனும் பெயரில் இசை மற்றும் ஆடலுடன் கூடிய உடற்பயிற்சி முறையினை அறிமுகப்படுத்தி இந்தியா மற்றும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் இதனைப் பிரபலப்படுத்தியவர்.

நடிப்புடன் தனது படைப்பாற்றலையும் மெருகேற்றும் விதமாக ,தனது ஃபிரிக்கத்தான் பிலிம்ஸ் மூலம் அவ்வப்பொழுது விழிப்புணர்வு குறும்படங்களையும் இயக்கி நடித்து வருகிறார்.

குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கெதிரான ‘வியோல்’ என்கிற குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொரானா லாக்டவுனில் சினிமாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த இயக்கமும் தடைபட்டிருக்கும் நிலையில், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு பசியோடு இருப்பவர்களின் பசியினை பல்வேறு தன்னார்வலர்கள் போக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி வருவதற்கு மனிதம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற அடிப்படையிலும் ‘மனிதம்’ என்கிற குறும்படத்தை நடித்து இயக்கியிருக்கிறார் அசோக்.

Shortfilm Youtube Link: https://youtu.be/Q-dZQvcJwWo

சமூக இடைவெளி உள்ளிட்ட கொரானா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து மோனோ ஆக்டிங் என்று சொல்லப்படும் ஒரே நடிகர் அதாவது அசோக் மட்டுமே  நடித்து வெளிவந்திருக்கும் மனிதம் குறும்படத்தை அவரது மனைவி மொபைல் போனிலேயே படம் பிடித்து தனது கணவரின் படைப்பாற்றலுக்கு துணை நின்றிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது, நடிகர் அசோக்கின் மனிதம்.

 

ரஜினி சொன்னது தான் நடக்கும்; டாஸ்மாக் திறப்புக்கு ஜீவா நெத்தியடி பதில்

ரஜினி சொன்னது தான் நடக்கும்; டாஸ்மாக் திறப்புக்கு ஜீவா நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth jeevaகொரோனா பொது முடக்கம் முடியும் முன்பே டாஸ்மாக்கை திறந்தது தமிழக அரசு.

இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வழக்கு தொடரப்படவே டாஸ்மாக்கை மூட சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

அதில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அரசு தெரிவித்தது.

மேலும் ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை வாங்கியது.

இதனிடையில் நடிகர் ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் தமிழக அரசின் மேல் முறையீட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும்.

தயவுகூர்ந்து
#கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து ரஜினியின் ரசிகரும் நடிகருமான ஜீவா கூறியுள்ளதாவது…

“தலைவர் ரஜினிகாந்த் யார் மீதும் எந்த விருப்பு வெறுப்புமின்றி, மக்களின் குரலாக நம்மை ஆளுபவர்களுக்கு மிகவும் கண்ணியமான முறையில் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் ஆளும்கட்சி அலட்சியம் செய்துள்ளது. எனவே தலைவர் ரஜினி சொன்னது போல், இனி ஆட்சிக்கு வருவோம் என்பதை அதிமுகவினர் மட்டுமல்லாமல் திமுகவினரும் மறந்து விட வேண்டும்.

மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர் ரஜினிகாந்த் ஆட்சி விரைவில் மலரும்,” என்று கூறினார்.

மாணவர்களுக்கு மன உளைச்சல்.; பொதுத் தேர்வை தள்ளி வைக்க விவேக் வேண்டுகோள்

மாணவர்களுக்கு மன உளைச்சல்.; பொதுத் தேர்வை தள்ளி வைக்க விவேக் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vivek with studentsகொரோனா வைரஸ் பாதிப்பால் தமிழகத்தில் பள்ளி பொது தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது.

ஓரிரு தினங்களுக்கு முன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்த தமிழ்நாடு அரசு, அதற்கான அட்டவணையையும் வெளியிட்டது.

மாணவர்களின் நலனை கருதி பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால் பொதுத்தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் என உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விவேக் இது குறித்து கூறியதாவது…

பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம்.

ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப் பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்கவும்.

என கூறியுள்ளார்..

தியேட்டர் ஓப்பனிங்.. சூட்டிங் ஸ்டார்ட் எப்போது..? அமைச்சருடன் ஆலோசனை

தியேட்டர் ஓப்பனிங்.. சூட்டிங் ஸ்டார்ட் எப்போது..? அமைச்சருடன் ஆலோசனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

darbar celebraionகொரோனா வைரஸை தடுக்க விடப்பட்டுள்ள பொது முடக்கத்தால் 2 மாதங்களாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தற்போது சில தளர்வுகளுடன் கடைகள் & வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஊரடங்கு உத்தரவு ஒரு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிப்பது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆலோசனை.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திரையரங்க உரிமையாளர் பன்னீர்செல்வம், இயக்குனர் ஆர் வி உதயகுமார் ஆர் கே செல்வமணி ஆகியோரும் உடனிருந்தனர்.

மேலும் திரைப்படம் படப்பிடிப்பு தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கோரி கோரிக்கை விடுத்தனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியளித்த வேலம்மாள் நெக்ஸஸ்

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண உதவியளித்த வேலம்மாள் நெக்ஸஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nasscom in Association with Velammal undertakes Corona relief measuresநாட்டில் நிலவும் ஊரடங்கு கருத்தில் கொண்டு வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வாழும் ஏழை எளியோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறது.

ஊரடங்கு தொடங்கியதிலிருந்து இதுவரை பல ஆயிரக்கணக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த நிவாரணப் பொருட்களில் அரிசி, கோதுமை மாவு, துவரம் பருப்பு, உப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கும்.

இந்த முயற்சியால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். மேலும் அத்தியாவசிப் பொருள்கள் பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு, 8056063519 என்னும் அலைபேசியைத் தொடர்பு கொள்ளவும்

Velammal undertakes Corona relief measures

மே 19 முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பு; மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

மே 19 முதல் புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பு; மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Liquor shops will reopen in Puducherry state tomorrow onwards says CM Narayanasamyபுதுச்சேரிகாரரா..? காரைக்கால்காரரா.? அப்படின்னா அதிர்ஷ்டசாலிப்பா… அங்க சரக்கு கம்மி ரேட்டுல கிடைக்கும். அவிங்க ஜாலியா இருப்பாங்க என்பதே பலரின் நினைப்பா இருக்கும்.

ஆனால் அங்கும் பலர் குடிக்காமல் இருக்கிறார்கள் என்பது வேறுக்கதை.

சரி நாம விஷயத்துக்கு வருவோம்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக மதுபானக்கடைகள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன.

சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் புதுச்சேரியில் இன்றுவரை 55 நாட்களாக மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.

புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மார்ச் 23-ம் தேதி மூடப்பட்டன.

தற்போது இரு மாதங்களை நெருங்கும் வேளையில் நாளை மே 19 முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் மத்திய அரசு அறிவித்த பொதுமுடக்கம் புதுச்சேரியில் மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் நாளை முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும்.

புதுச்சேரிக்குள் தனிமனித இடைவெளியுடன் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்படும்.

அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், ஆலைகள், காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்துக் கொள்ளலாம். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே கலந்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கும் காரைக்காலிலிருந்து புதுச்சேரிக்கும் பேருந்துக்கள் இயக்க தமிழக அரசுடன் பேசி முடிவு வழியில் எங்கேயும் நிறுத்தாமல் நேரடியாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலுக்கு இடையில் கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக பகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Liquor shops will reopen in Puducherry state tomorrow onwards says CM Narayanasamy

More Articles
Follows