32 விருதுகளை குவித்த டு லெட் படமும் கமர்ஷியல் படம்தான் : செழியன்

32 விருதுகளை குவித்த டு லெட் படமும் கமர்ஷியல் படம்தான் : செழியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

to let movie director chezhiyanகல்லூரி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் என தரமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் இயக்குநர் செழியன்.. தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகியுள்ள முதல் படமான ‘ டு லெட் ’ படம் மூலமாக உலக அரங்கில் நமது தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை தலைநிமிரச் செய்துள்ளார்.

ஆம்.. கடந்த வருடம் நவ-17ஆம் தேதி கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் தான் முதன்முதலாக கலந்துகொண்டது ‘ டு லெட் ’ படம். அந்த ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.. 32 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த படம் வரும் பிப்-21ஆம் தேதி வெளியாகிறது. சர்வதேச திரைப்பட விருதுகள் குவித்தால் மட்டும் போதுமா..? இந்த படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளதா..? எதனால் படம் வெளியாக இவ்வளவு தாமதம் என்பது குறித்தெல்லாம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் செழியன்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மென்பொருள் துறை வளர்ச்சியடைந்ததும் வீடு வாடகைக்குக் கிடைப்பது எவ்வளவு பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது.. நடுத்தர மக்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் அப்படி வாடகைக்கு வீடு தேடி அலையும் ஒரு சாமானியனின் பிரச்சினைதான் ‘ டு லெட் ’ படத்தின் மையக்கரு.

பொதுவாகவே இங்கே ஒரு முழு நீள திரைப்படத்தை ஆரம்பித்து எடுத்து முடிப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆகி விடுகிறது. இந்தப் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதற்கு கூடுதலாக ஒரு வருடம் எடுத்துக்கொண்டது.. அவ்வளவுதான்.. அதனால் இதில் எந்த தாமதமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை இப்போது சரியான நேரம் என்பதால் தியேட்டரில் ரிலீஸ் செய்கிறோம்.

பொதுவாகவே இங்கே குறைந்த பட்ஜெட் படங்கள் என்றால், அதிலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலரிடம் இளக்காரமான பார்வை இருக்கவே செய்கிறது. மலையாள, வங்காள மொழி படங்கள் தேசியவிருது வாங்கினால், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அந்த அரசுகள் 25 லட்சம், 40 லட்சம் அல்லது சொந்த வீடு என கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்கள்.. இன்னும் நம் ஊரில் அந்த நிலை வரவில்லை.. ஒருவேளை ‘ டு லெட் ’ மாதிரி வருடத்திற்கு பத்து படங்கள் வரும்போது நம்மூரிலும் தேசிய விருது படங்கள் கவனிக்கப்பட வாய்ப்பு உருவாகலாம்.

விருதுகளுக்கு அனுப்பியதாலேயே அதை கலைப்படைப்பு தானே என ஒதுக்கிவிட தேவையில்லை. சொல்லப்போனால் இதுதான் சிறந்த கமர்சியல் படம். பட்ஜெட்டில் படம் எடுத்தால், பட்ஜெட்டை தாண்டிய லாபம் கிடைப்பது உறுதி..

ஆம்.. இதில் பலருக்கும் தெரியாத உண்மை என்னவென்றால் இது போன்ற படங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும்போது, ஒரு பக்கம் நம் தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

அதேசமயம் இன்னொரு பக்கம் இப்படி திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியாக நீங்கள் ஒரு படத்திற்கு செலவு செய்த தொகை கிட்டத்தட்ட உங்களிடமே திரும்பி வந்துவிடும் அதுவும் ரிலீசுக்கு முன்னதாகவே..
.
பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், என்னிடம் படமெடுக்க 50 லட்ச ரூபாய் இருந்தால் போதும்.. அதை வைத்து நான் பத்து கோடி சம்பாதித்து விடுவேன் எனக் கூறுவார்.. அது எப்படி என்றால் இப்படித்தான்.. திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது விருது பெறுவது இவை அனைத்துமே படத்திற்கான அங்கீகாரத்தை தாண்டி அவற்றிற்கு பொருளாதார ரீதியாக உதவுகின்றன

சில திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டும் படத்திற்கு விருது கிடைக்காவிட்டால் கூட அது நல்ல படம் என்பதை உணர்ந்து அங்குள்ள சேனல்கள் சில அந்தப்படத்தை ஒருமுறை ஒளிபரப்புவதற்கான உரிமையைக் கேட்டு அதற்காக ஒரு தொகை கொடுக்கின்றன. இப்படி பல நாடுகளில் மொத்தம் ஆயிரக்கணக்கில் சேனல்கள் இருக்கின்றன.. இந்த வணிகம் இங்கே பலருக்கு தெரியவே இல்லை.

இந்த படத்தை தயாரிப்பது குறித்து ஒரு தயாரிப்பாளரிடம் சொன்னபோது பெரிய நடிகர்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் பண்ணலாம் எனக் கூறினார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அடுத்தவர் பணத்தில் அப்படி பரிசோதனை செய்து பார்க்க நான் விரும்பவில்லை.. அதனால் தான் என் மனைவியே இந்த படத்தை தயாரித்தார்.

உலகம் முழுதும் சுற்றி பல விருதுகளை வாங்கிய இந்த படம், இங்கே என் மக்களிடம் பாராட்டைப் பெறும்போதுதான் அதை இன்னும் மிகப்பெரிய விருதாக நான் கருதுகிறேன்.. அதனால் வரும் பிப்-21ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன்” என்கிறார் இயக்குநர் செழியன்.

இந்தப்படத்தில் சந்தோஷ் நம்பிராஜன், ஷீலா ராஜ்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, மாஸ்டர் தருண்பாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

32 Award winner To let movie is also commercial movie says director Chezhiyan

32 Award winner To let movie is also commercial movie says director Chezhiyan

டிஆர் முன்னிலையில் சிம்பு தம்பி குறளரசன் இஸ்லாமியர் ஆனார்

டிஆர் முன்னிலையில் சிம்பு தம்பி குறளரசன் இஸ்லாமியர் ஆனார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus brother Kuralarasan converts to Islam in Presence of TRதமிழ் சினிமாவின் சகலகலா வல்லவரும் அரசியல் கட்சியின் தலைவருமான டி.ராஜேந்தர்-உஷா தம்பதியருக்கு சிம்பு, குறளரசன் என இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

இதில் சிம்பு என்ற எஸ்டிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார்.

அவரின் இளைய மகள் குறளரசன் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சிம்பு, நயன்தாரா இணைந்து நடித்த இது நம்ம ஆளு பட மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இடையில் சில ஆல்பங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இந்நிலையில், டி.ராஜேந்தர் – உஷா முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் குறளரசன்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கெனவே டி ராஜேந்தர் இஸ்லாம் மதம் மீது அதிக பற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களுக்கு முன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் முஸ்லிம் மதத்துக்கு மாறி அந்த மத பெண்ணை மணந்து கொண்டார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Simbus brother Kuralarasan converts to Islam in Presence of TR

Simbus brother Kuralarasan converts to Islam in Presence of TR

ஒரு வழியாக பாய தயாரானது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

ஒரு வழியாக பாய தயாரானது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushs Enai Noki Paayum Thota censored with UA certificateகௌதம் மேனன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’.

வெகு நீண்ட காலமாக இப்படம் தயாரிப்பிலேயே இருந்தது.

அண்மையில் படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்ற நிலையில், படம் சென்சாருக்கு அனுப்பட்டது.

தற்போது யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் உடன் மேகா ஆகாஷ், சசிகுமார் ஆகியோர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார்.

கோடை விடுமுறையில் படம் திரைக்கு வருகிறது.

Dhanushs Enai Noki Paayum Thota censored with UA certificate

வன்முறையை மன்னிக்க முடியாது; முடிவு கட்டும் நேரமிது.. : ரஜினி

வன்முறையை மன்னிக்க முடியாது; முடிவு கட்டும் நேரமிது.. : ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth condemns the barbaric act in Pulwama Terror attackஇந்தியாவில் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் புலவாமா பகுதி உள்ளது.

இங்கு 2,500-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.

இந்திய ராணுவ வாகனத்தின்மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரைக் கொண்டு மோதினர்.

இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், 45 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் இந்தியா மற்றும் உலக நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன.

இந்த தாக்குதலை பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஆதில் அகமது என்ற 23 வயது தீவிரவாதி நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கொடூரத் தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது…

காஷ்மீர் புல்வாமாவில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய வன்முறை தாக்குதல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

பொறுத்தது போதும்…

இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உயிரிழந்த அனைத்து ஜவான்களின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வீரமரணமடைந்த இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.’’ என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் ரஜினி.

Rajinikanth condemns the barbaric act in Pulwama Terror attack

Rajinikanth condemns the barbaric act in Pulwama Terror attack

ஆரி-சாஷ்வி பாலா இணையும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’

ஆரி-சாஷ்வி பாலா இணையும் ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aaris next film titled Ellam Mela Irukuravan Pathupanபுரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் ‘ராவுத்தர் மூவிஸ்’.

இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘நெடுஞ்சாலை’ புகழ் ஆரி நடிப்பில் உருவாகி வரும் “எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்” எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக சாஷ்வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்ய, கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பாளராக பணிபுரிகிறார்.

விரைவில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று இதன் முதல் பார்வை (FirstLook)போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார்.

இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.

Aaris next film titled Ellam Mela Irukuravan Pathupan

ஜிவி. பிரகாஷை இயக்கும் விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டர்

ஜிவி. பிரகாஷை இயக்கும் விஜய்-அஜித்தின் சூப்பர் ஹிட் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakashவிஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், அஜித் நடித்த பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எழில்.

இவர் தற்போது ஜிவி. பிரகாஷ் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

பல மொழிகளில் படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் பட நிறுவனம் ரமேஷ் .பி. பிள்ளை வழங்கும் அபிஷேக் பிலிம்ஸ்.

இந்த நிறுவனம் தற்போது சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்க சசி இயக்கத்தில் ஒரு படத்தை மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் படத்தை இன்று துவங்கி  உள்ளார்கள்.

எளிமையாக ஒரு கோயிலில் இதன் துவக்க விழா நடை பெற்றது. C.சத்யா என்பவர் இசையைமக்கிறார்.

மற்ற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பின்னர் அறிவிக்கப்பட்ட உள்ளது.

எழில் பார்முலா எப்படியோ அப்படியே தான் இதுவும் காமெடி  சப்ஜெக்ட். மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakash

Ajith and Vijays Hit film director Ezhil team up with GV Prakash

More Articles
Follows