தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
செப்டம்பர் 19ஆம் தேதி அதிகாலை 3 மணி அளவில் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா என்பவர் தற்கொலை செய்து கொண்டு கொண்டார்.
இவர் 12 வகுப்பு படித்து வருகிறார். தற்கொலைக்கான காரணம் என்ன என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட அந்த அறையில் மீரா எழுதியதாக ஒரு கடிதம் சிக்கியது.
அதில் ஐ லவ் யூ ஆல் ஐ மிஸ் யூ ஆல் உள்ளிட்ட சில ஆங்கில வார்த்தைகளை அவர் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த கடிதம் தொடர்பாக விசாரணையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 21ஆம் தேதி இரவு விஜய் ஆண்டனி உருக்கமாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்…
என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவள் இப்போது, இந்த உலகைவிட சிறந்த ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்க்குதான் சென்று இருக்கிறாள்.
என்னிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன்.
நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன். அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தையும், அவளே தொடங்கி வைப்பாள். உங்கள்
விஜய் ஆண்டணி,.
என்று அந்த அறிக்கையில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Vijayantony emotional statement about her daughter death