தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நம் சுதந்திர இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இதனை முன்னிட்டு, சென்னையில் மிகப்பிரம்மாண்டமான இசை திருவிழா நடைபெற உள்ளது.
இசைத் திருவிழா ஆகஸ்ட் 14-ம் தேதி ஞாயிறன்று நடைபெற உள்ளது.
இதில் பிரபல பாடகர்கள் 75 பேர் பங்கேற்க உள்ளனர்.
ஜெ.ஆர்.7 ப்ராடக்ட்ஸ் எல்எல்பி நிறுவனப் பொதுமேலாளர் கே.ஆர்.ஜெ.கதிர், சாதகப் பாறைகள் இசைக்குழு உரிமையாளர் சங்கர்ராம், பாடகர்கள், ஸ்ரீநிவாஸ், சுஜாதா மோகன் ஆகியோர் தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் நேற்று இந்த நிகழ்ச்சி குறித்து கூறியதாவது..:
`ஜன கண மன-க்காக கைகோர்ப்போம்’ என்ற தலைப்பில், 75 பிரபலப் பாடகர்கள் பங்கேற்கும் விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில் முன்னணி பாடகர்கள், மூத்த பின்னணிப் பாடகர்கள் பல்வேறு இசையமைப்பாளர்களின் இயக்குனர்களின் பாடல்களைப் பாட உள்ளனர்.
காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், 2-வது அமர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் நடைபெறும். தொடர்ந்து, இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இந்த நிகழ்வில் கிடைக்கும் நிதி, யுனைடெட் பாடகர்கள் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.
இந்த அறக்கட்டளையில் 7 பாடகர்கள் அறங்காவலர்களாக இருக்கிறோம். (இந்த அறக்கட்டளையானது கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது என்றும் இதன் மூலம் பல இசை கலைஞர்களுக்கு உதவி செய்துள்ளோம் என்றும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.)
இவ்விழாவில் பங்கேற்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அழைக்கத் திட்டமிட்டுள்ளோம்.” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த இசை விழா குறித்து கூடுதல் தகவல்களை அறிந்துக் கொள்ள.. jr7events.com என்ற இணையதளத்தை பார்க்கவும்..
A music festival in Chennai featuring 75 singers