தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஆகஸ்ட் 26 நேற்று இந்தியா முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டது.
ரக்ஷா பந்தன் என்பது சகோதர சகோதரிகளுக்குள் உள்ள அன்பை பாசத்தை வெளிப்படுத்த ராக்கி கயிறு கட்டி கொண்டாடுவார்கள்.
வட இந்தியாவில் பிரபலமான இந்த நிகழ்வு தற்போது தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது.
இந்நிலையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் வித்தியாசமாக ரக்ஷா பந்தனைக் கொண்டாடியிருக்கிறார்.
அதாவது தனது அம்மா சரிகாவுக்கு ராக்கி கயிறை கட்டி கொண்டாடியுள்ளார்.
மேலும் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படத்தையும் தன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது…
“என் அம்மாவும் நானும் ராக்கிகளை ஒருவருக்கொருவர் கட்டிக்கொண்டோம். விரும்புகிற ஒருவரைக் காப்பதே ரக்ஷா பந்தன்.
எனக்கு சகோதரர் இல்லை, ஆனால் அம்மா இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவை பார்த்த பலரும் அவரை பாராட்டி வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
Shrutihaasan-tied Rakhi to her mother on Raksha Bandhan day