தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய திரையுலகின் முக்கியமான எடிட்டர் சேகர். இவருக்கு வயது 81. இன்று (மார்ச் 22) திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலை 6 மணியளவில் காலமானார்.
இவரது மனைவியின் பெயர் சுந்தரி சேகர். இவருக்கு தீபலட்சுமி, திலகவதி, நித்யா என்று 3 பெண் குழந்தைகள்.
இவர்கள் மூவருக்குமே திருமணமாகிவிட்டது. இவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
பாசில், சித்திக் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு ஆஸ்தான எடிட்டராக சேகர் பணிபுரிந்திருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் படம் (தச்சோலி அம்பு), முதல் 70 எம்.எம் (படையோட்டம்) மற்றும் இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ ஆகிய படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.
தான் எந்த ஒரு சாதனை செய்தாலும், அதை தன் வேலை தான் பேச வேண்டும், தான் பேசக்கூடாது என்ற குறிக்கோளுடனே வாழ்ந்திருக்கிறார்.
‘வருஷம் 16’ படத்துக்காக தமிழக அரசு விருது மற்றும் ‘1 முதல் 0 வரை’ மலையாள படத்துக்காக கேரள அரசின் விருது வென்றிருக்கிறார்.
தமிழில் ‘சாது மிரண்டால்’ இவர் பணிபுரிந்த கடைசிப் படம். அதற்குப் பிறகு தனது உதவியாளர்களை வைத்து படங்களுக்கு எடிட் செய்து, அவர்களுடைய பெயரையே தலைப்பில் போடவைத்து அழகு பார்த்தவர் எடிட்டர் சேகர்.
The Legendary Editor Sekar passed away