திருச்சி ,திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து..? சத்தியபிரத சாகு விளக்கம்

திருச்சி ,திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் ஆகிய 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து..? சத்தியபிரத சாகு விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sathyaprabha sahoo (1)நாளை ஏப்ரல் 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி & கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இது கொரோனா வைரஸ் தொற்று காலம் என்பதால் வாக்காளர்களுக்கான புதிய அறிவுரைகளை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

சானிடைசர் போட்டு கை கழுவி மாஸ்க் போட்டு வலது கைக்கு மட்டும் க்ளவுஸ் போட்டு வாக்களிக்க தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

நாளை காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்குகிறது. இரவு 7:00 மணிக்கு முடிவடைகிறது.

எனவே இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையில் தேர்தல் செலவின பொறுப்பாளர்கள் சோதனையின் போது பணம் மற்றும் இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மேற்கு, திருவண்ணாமலை, கரூர், கொளத்தூர் உள்ளிட்ட 7 தொகுதிகளில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் பரவியது.

இந்த நிலையில் அந்த தகவலில் உண்மையில்லை எனவும் திட்டமிட்டபடி நாளை 234 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடத்துவற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

பதற்றமான மிகவும் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் காலை 7 மணியிலிருந்து 6 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் (ஒரு மணி நேரம்) வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து வாக்குசாவடிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையர் சத்தியபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.

TN Election Commission head clarifies on canceling election in 7 consituencies

புதுச்சேரி ஏனாம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் மாயம்.; 3 நாட்களுக்கு பிறகு பலத்த காயங்களுடன் மீட்பு..!

புதுச்சேரி ஏனாம் தொகுதி சுயேச்சை வேட்பாளர் மாயம்.; 3 நாட்களுக்கு பிறகு பலத்த காயங்களுடன் மீட்பு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Yanam MLA (1)புதுச்சேரி மாநில ஏனாம் தொகுதியில் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் துர்க்கா பிரசாத் பெம்மாடி.

ஆந்திர மாநிலம் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தின் நடுவே உள்ள ஏனாம் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பகுதியாகும்

ஏப்ரல் 1ஆம் நாளில் இருந்து இந்த வேட்பாளரை (பிரசாத் பெம்மாடி) காணவில்லை எனக் கூறி அவர் மனைவி சாந்தி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையினர் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று கோதாவரி ஆற்றங்கரையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.

அரசு மருத்துவமனையில் அவருக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் கடத்தப்பட்டாரா? அவரை யாரேனும் அடித்துத் துன்புறுத்தினார்களா? என காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Missing independent MLA candidate found in Yanam

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்..; இதான் உண்மையான காரணமா.?

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்..; இதான் உண்மையான காரணமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sasikala (2)மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன், போயஸ் தோட்டம் வேதா இல்லத்தில் வாழ்ந்தவர் சசிகலா.

இவர் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று சமீபத்தில்தான் விடுதலையானார்.

இவரின் வருகைக்கு பின்னர் அதிமுக-வில் பெரிய பிரச்சினை ஏற்படும்.. கட்சி உடையும் என தமிழகமே எதிர்ப்பார்த்த நிலையில் “தான் அரசியலை விட்டே விலகுவதாக அறிவித்தார்” சசிகலா.

ஜெயலலிதாவுடன் அவரது வீட்டிலேயே தங்கியதால் சசிகலாவின் பெயர் ஆயிரம் விளக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்தது.

ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

எனவே அந்த முகவரியில் இருந்த அனைவரது பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

தற்போது சென்னை தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் வசிக்கிறார் சசிகலா.

அந்த முகவரியில் இருந்து வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ள சசிகலா விண்ணப்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுதான் உண்மையான காரணமா? இதில் வேறு ஏதேனும் அரசியல் உள்ளதா? என பல்வேறு தரப்பினர் விவாதித்து வருகின்றனர்.

Reason behind Sasikala’s name missing in voters list?

எம்.ஜி.ஆர். போல அந்த பட்டத்துடன் நடிக்க ஆசைப்பட்டாலும் சினிமாவை விட்டு விலக கமல் முடிவு..!

எம்.ஜி.ஆர். போல அந்த பட்டத்துடன் நடிக்க ஆசைப்பட்டாலும் சினிமாவை விட்டு விலக கமல் முடிவு..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்ததால் ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டதாக நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் பேசியிருந்தார்.

இந்த நிலையின் இவரது மற்றொரு பேட்டியில்..

“நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன்

ஒருவேளை என்னுடைய அரசியல் பணிக்கு சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டு விலகி விடுவேன்.

MLA என்ற பட்டத்துடன் எம்.ஜி.ஆர். நிறைய படங்களில் நடித்தார். அதே போல நானும் நடிப்பேன்.

ஏற்கனவே நான் ஒப்புக்கொண்ட படங்களை முடித்துவிட்டு புதிய படங்களில் நடிக்கலாமா? என பிறகே முடிவு எடுப்பேன்.

அரசியலுக்கு வந்த பின்னர், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு கூட எனக்கு மிரட்டல் வந்தது.
இனி எனது மீதமுள்ள வாழ்க்கை மக்களுக்காக தான்..”

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

Actor Kamal Haasan to quit cinema industry ?

குக்கூ.. குக்கூ.. ‘என்ஜாய் என்சாமி’.. 10 கோடிக்கும் மேல் சாதனை படைக்கும் பாடல்

குக்கூ.. குக்கூ.. ‘என்ஜாய் என்சாமி’.. 10 கோடிக்கும் மேல் சாதனை படைக்கும் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

enjoy enjaami (2)கபாலி, காலா, இறைவி, ஜகமே தந்திரம், கர்ணன் உள்ளிட்ட பட படங்களுக்கு இசையமைத்திருப்பவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இவரது இசையில் சமீபத்தில் உருவாகி பட்டித் தொட்டியெல்லாம் பிரபலமாகி வரும் பாடல் ‘என்ஜாய் என்சாமி’.

சந்தோஷ் நாராயணன் மகள் *தீ மற்றும் அறிவு பாடியுள்ள இந்த பாடல் கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி யூடிப்பில் வெளியிடப்பட்டது.

இப்பாடலை 10 கோடிக்கும் அதிகமான முறை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.

இப்பாடலை 10 கோடியே 61 லட்சம் முறை இதுவரை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.

தற்போதும் இந்த சாதனை தொடர்கிறது.

பல அரசியல் கட்சியினர் இந்த பாடல் வரிகளை மாற்றி தங்கள் கட்சிக்கேற்ப வரிகளை போட்டு் தேர்தல் பாடலாக மாற்றி பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enjoy Enjaami creates massive records

புதுச்சேரியில் மோடி வந்தா 144.. தேர்தல் வந்தா 144.. ஓட்டு போடனுமா? வேண்டாமா?மக்கள் குழப்பம்..; கோர்ட் கேள்விக்கு கலெக்டர் விளக்கம்.!

புதுச்சேரியில் மோடி வந்தா 144.. தேர்தல் வந்தா 144.. ஓட்டு போடனுமா? வேண்டாமா?மக்கள் குழப்பம்..; கோர்ட் கேள்விக்கு கலெக்டர் விளக்கம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Madras High Court (2)புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த வழக்கு மீதான விசாரணை மெட்ராஸ் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பேசிய நீதிபதிகள்,…” 144 தடை பிறப்பித்தற்கான காரணம் குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் தரவேண்டும் என்றும் அவ்வாறு இல்லை என்றால் நீதிமன்றமே 144 தடையை நீக்கும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் தற்போது தேர்தல் அதிகாரி அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அவரின் விளக்கத்தில் “புதுச்சேரியில் 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது. குடும்பமாகவோ, நண்பர்களுடன் சேர்ந்து சென்று வாக்களிக்கவோ தடை இல்லை. சட்டவிரோதமாக கூட்டம் கூடுவதை தடுக்கவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் முன்னதாக, புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு 144 தடை உத்தரவு ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணி முதல் 7ஆம் தேதி காலை 7 மணி வரை அமல்படுத்தப்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் மார்ச் 22ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவு தேர்தல் ஆணைய அனுமதியுடன் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

அதனை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்தனர்

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.என்.சுமதி…

“எந்த காரணங்களையும் குறிப்பிடாமல் 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பூர்வாகார்க் பிறப்பித்துள்ளார்.

மத்தியில் ஆளும்கட்சியாக இருக்கக்கூடிய பாஜக ட்விட்டர் பதிவுகளை, மாவட்ட ஆட்சியர் பலமுறை ரீட்வீட் செய்துள்ளார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்படக்கூடியவராக இருப்பதால் இந்த உத்தரவு அரசியல் உள்நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.” என தெரிவித்தார்.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாலா,… ”தேர்தலை முன்னிட்டு 144 தடை பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உண்டு.” என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நாங்கள் அனைத்து வழக்குகளிலும் மரண தண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறோமா? என கேள்வி எழுப்பினர்.

விஷயத்தின் தன்மையை ஆராய்ந்து உரிய முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிப்பது வழக்கம் என்றார்.

ஆனால் புதுச்சேரி அரசின் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அனுமதித்த தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், நீங்கள் தேர்தல் ஆணையம் தானே தவிர, அரசியல் கட்சி கிடையாது என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிவுறுத்தினர்.

144 தடை உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்று உரிய தெளிவுபடுத்துதலை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிடாவிட்டால், நீதிமன்றமே அதை ரத்து செய்யும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் 144 தடை உத்தரவு எதற்காக அமல்படுத்தப்பட்டது என்ற விளக்கத்தை வெளியிடுவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்த போதும் 144 உத்தரவு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Madras High Court directs ECI to provide clarification over imposition of Section 144 in Pondicherry

More Articles
Follows