2020 மருத்துவம் & இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020 மருத்துவம் & இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nobel prize 2020 physics and medicineஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் முதலாவதாக மருத்துவத்துக்கான நோபல் பரிசை, ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் குழுவின் பொதுச் செயலாளர் தாமஸ் பெர்ல்மான் அறிவித்தார்.

இதன்படி, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஹூட்டன் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு அளிக்கப்படவுள்ளது.

கல்லீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் சார்ந்த நோயை ஏற்படுத்தும் காரணிகளை எதிர்த்துப் போராட மிகச்சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரோசிஸ் மற்றும் கல்லீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் வகையில் ரத்தத்தில் உருவாகும் ஹெபடிடிஸ் வைரஸிலிருந்து குணப்படுத்துவதற்கான பங்களிப்பை அளித்ததற்காக மூன்று பேரும் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில், அடையாளம் தெரியாத வைரஸால் நீடித்த ஹெபடிடிஸ் பிரச்சினை ஏற்படுவது குறித்து ஹார்வி ஜே.ஆல்டர் ஆய்வுசெய்துள்ளார். ஹெபடிடிஸ் சி வைரஸை தனிமைப்படுத்துவதற்கான உத்திகளை மைக்கேல் ஹூட்டன் கண்டறிந்திருக்கிறாராம்.

ஹெபடிடிஸ் சி வைரஸ் மட்டுமே, ஹெபடிடிஸ் நோய் ஏற்படுவதற்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை சார்லஸ் எம்.ரைஸ் வெளியிட்டார்.

இந்த ஆய்வுகள் மூலம், ஹெபடிடிஸ் சி வைரஸ் பாதிப்பை குணப்படுத்த முடியும் என்றும், நீடித்த ஹெபடிடிஸ் நோயை ரத்த பரிசோதனை மூலம் கண்டறிந்து, கோடிக்கணக்கானோரை காப்பாற்ற முடியும் என்றும் நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு. அதில்.. ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

கருந்துளை உருவாக்கம் குறித்த பொதுவான சார்பியல் கோட்பாட்டின் வலுவன கணிப்பை கண்டுபிடித்ததற்காக ரோஜர் பென்ரோசுக்கும், விண்மீன் திரளின் மையப்பகுதியில் உள்ள ஒரு அதிசய சிறு பொருளை கண்டுபிடித்ததற்காக ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பரிசுத்தொகையில், ரோஜர் பென்ரோசுக்கு 50 சதவீதமும், ரின்ஹெர்ட் கென்செல், ஆன்ட்ரியா கெஸ் ஆகியோருக்கு தலா 25 சதவீதமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 nobel prize winners list tamil

அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறப்பு.; அரசின் வழிகாட்டுமுறைகள் இதோ..

அக்டோபர் 15 முதல் பள்ளிகள் திறப்பு.; அரசின் வழிகாட்டுமுறைகள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

school reopen indiaகொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது.

தற்போது சில வணிகங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் தியேட்டர்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மட்டும் கிட்டத்தட்ட 7 மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்டோபர் 15ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை பார்த்தோம்.

இதனை தொடர்ந்து பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

அதில்…

முதலாவதாக… பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகைப்பதிவேட்டில் நெகிழ்வுத்தன்மை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், நேடிரயாக பள்ளி வர முடியாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது-

மாணவர்களுக்கு மதிய உணவு உரிய முன்னெச்சரிக்கையுடன் தயாரிக்கப்பட வேண்டும். எழுத்துப்பூர்வ தேர்வுகளை தவிர்க்க வேண்டும்.

பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு அடுத்த 3 வாரங்களுக்கு தேர்வுகளை தவிர்க்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் என்றும், வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Centre issues guidelines for reopening of schools from Oct 15th

ஸ்ரீகாந்த்-வித்யா-திஷா இணையும் ‘எக்கோ’ சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது

ஸ்ரீகாந்த்-வித்யா-திஷா இணையும் ‘எக்கோ’ சூட்டிங் பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீகாந்த் & வித்யா பிரதீப், திஷா பாண்டே ஆகியோரது நடிப்பில் உருவாகும் படம் ‘எக்கோ’.

நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஸ்ரீகாந்த் மற்றும் வித்யா பிரதீப் நடிக்கும் காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன.

காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

ஜான் பீட்டர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலையை நிர்மாணிக்கிறார். ராதிகா நடனம் அமைக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

tamil film echo

Srikanth – Vidya starring Echo movie shoot started

தொழிலதிபரை மணக்கும் காஜல் அகர்வால்.; திருமண தேதியை அறிவித்தார்

தொழிலதிபரை மணக்கும் காஜல் அகர்வால்.; திருமண தேதியை அறிவித்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kajal aggarwal marriageதமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் காஜல் அகர்வால்.

தமிழில் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், காஜல் அகர்வதால் தனது திருமணத்தின் அறிவிப்பை இன்று அறிவித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கெளதம் கிச்சலு என்பவரை மணக்கிறார்.

இது தொடர்பான செய்திகளை நம் தளத்தில் பார்த்தோம்.

இவர்களின் திருமணம் அக்டோபர் 30 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

கொரோனா பிரச்சினை நீடித்து வருவதால் இவர்களின் திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.

கௌதம் கிச்சலு யார்? அவரின் தொழில் என்ன.?

வீடுகளில் டிசைனிங் அறைகளை தயார் செய்து கொடுப்பது, விதவிதமான மின் விளக்குகளை டிசைன்களை வடிவமைப்பாராம் கௌதம்.

கெளதம் கிச்சலு டிசைன்களுக்கு உலக அளவில் வரவேற்பு இருப்பதால், மும்பையின் பிரபலமான நபர்களின் வீடுகளை சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்து வருகிறாராம்.

Actress Kajal Aggarwal to tie knot with entrepreneur Gautam Kitchlu on october 30

நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் மர்மமான முறையில் மரணம்

நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் மர்மமான முறையில் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

’சித்தி’, ‘வாணி ராணி’, ‘மெட்டி ஒலி’, ‘கோலங்கள்’ உள்ளிட்ட பிரபல சீரியல்களில் நடித்தவர் சாந்தி வில்லியம்ஸ்.

இவர் தமிழ், மலையாளம் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மலையாள ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸை திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போதும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் சித்ராவின் அம்மாவாக நடித்து வருகிறார் சாந்தி வில்லியம்ஸ்,.

இந்த நிலையில், சாந்தி வில்லியம்ஸின் ஒரே மகன் சந்தோஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.

திருமணமான சந்தோஷுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னை விருகம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

மேலும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

நேற்று தனது அறையில் படுத்து தூங்கிய சந்தோஷ், இன்று காலை வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர், அறைக்கு சென்று பார்த்த போது அவர் படுக்கையில் சடலமாக இருந்துள்ளார்.

இதனையறிந்த போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

சந்தோஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

shanthi williams son

Son of popular actress Satnhi Williams dies at Virugambakkam

சிபிராஜ் பிறந்தநாளில் ‘கபடதாரி’ படக்குழு கொடுத்த சர்பிரைஸ்

சிபிராஜ் பிறந்தநாளில் ‘கபடதாரி’ படக்குழு கொடுத்த சர்பிரைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ், இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு
திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவினர் சர்பிரைஸ்
பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கி அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பால் பெரிதும் பாதிப்படைந்த சினிமாத்துறை தற்போது மெல்ல தலை தூக்க தொடங்கியுள்ளது. திரைப்பட
படப்பிடிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பாதியில் நின்று போன படப்பிடிப்புகள் மீண்டும்
தொடங்கியுள்ளது. அந்த வகையில், ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த உடன் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’ படத்தின் ஹீரோ சிபிராஜுக்கு சர்பிரைஸ் பரிசு வழங்க நினைத்த
‘கபடதாரி’ படக்குழுவினர் படத்தின் பஸ்ட் லுக்கை இன்று வெளியிடுவதாக அறிவித்ததோடு, சிபிராஜிக்கு பிடித்த ஹீரோக்களில்
ஒருவரான சூர்யாவே, பஸ்ட் லுக்கை வெளியிடும்படியும் செய்துள்ளார்கள்.

இது பற்றி சிபிராஜுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், நேற்று இரவு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டதும், சிபிராஜ்
சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்.

அவரைப் போல அவரது ரசிகர்களும் ‘கபடதாரி’ பஸ்ட் லுக் ரிலீஸை கொண்டாடி வருகிறார்கள்.

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சிமோன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

kabadadaari first look

Actor Sibiraj’s Kabadadaari first look unveiled

More Articles
Follows