கன்னி விழாவுக்கு கன்னியாக கூல் சுரேஷ்.; தனுஷ் & ஜிவி பிரகாஷ் விவகாரத்துகள்.. ரஜினி வேதனை குறித்து கே.ராஜன் பேச்சு!

கன்னி விழாவுக்கு கன்னியாக கூல் சுரேஷ்.; தனுஷ் & ஜிவி பிரகாஷ் விவகாரத்துகள்.. ரஜினி வேதனை குறித்து கே.ராஜன் பேச்சு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னி விழாவுக்கு கன்னியாக கூல் சுரேஷ்.; தனுஷ் & ஜிவி பிரகாஷ் விவகாரத்துகள்.. ரஜினி வேதனை குறித்து கே.ராஜன் பேச்சு!

‘கன்னி’ பட விழாவில் கூல் சுரேஷைக் கலாய்த்த இயக்குநர் பேரரசு!

முன்பு தனுஷ் -ஐஸ்வர்யா, இப்போது ஜிவி .பிரகாஷ் – சைந்தவி : விவாகரத்து விவகாரம் பற்றி ‘கன்னி’ பட விழாவில்
கே. ராஜன் வேதனைப் பேச்சு!

சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’. இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு ராஜ்குமார் ,இசை செபாஸ்டியன் சதீஷ்.

மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின், வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் கே. ராஜன்,இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் கே. ராஜன் கலந்து கொண்டு பேசும்போது..

“கன்னி என்கிற அற்புதமான தலைப்பு இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
கன்னி என்பது பரிசுத்தம் தூய்மை என்ற பொருள்படும். கன்னிப்பெண் கன்னி கழியாதவர்கள் என்றெல்லாம் சான்றோர்கள் அழைப்பார்கள். அப்படிப்பட்ட அற்புதமான தலைப்பு வைத்திருக்கிறார், தம்பி மாயோன் சிவா தொரப்பாடி .அவரிடம் திறமை நிறைந்திருக்கிறது ,பேச்சு குறைந்திருக்கிறது.

அவர் வைத்திருக்கிற கதைக் கரு தமிழ்ப் பாரம்பரியம், தமிழ்க் கலாச்சாரம் தமிழ்ப் பண்பாடு ,சித்த வைத்தியம் அனைத்தையும் உள்ளடக்கியது. அப்படிப்பட்ட அற்புதமான கருவைவைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஒரு காலத்தில் சித்த மருத்துவம் சிறந்து விளங்கியது. பிறகு யாரும் ஏறெடுத்து பார்க்காமல் அலோபதிக்குச் சென்றார்கள்.தலைவலி என்றால் காலுக்கு எக்ஸ்ரே எடுப்பான்.

ஏனென்றால் அவனது எக்ஸ்ரே மிஷின் சும்மா இருக்கக் கூடாது.பல டாக்டர்கள் படித்துவிட்டு கோடீஸ்வரர் ஆகி விட்டார்கள். சித்த மருத்துவத்தின் சிறப்பு கொரோனா காலத்தில்தான் தெரிந்தது.

அப்போதுதான் படித்தவன், படிக்காதவன் அத்தனை பேரும் அலோபதியை விட்டு விட்டுச் சித்த மருத்துவத்திற்குப் போனார்கள்.சித்த மருத்துவம் தான் பக்கவிளைவுகள் இல்லாதது .ஒரு மரத்தின் இலை, பூ, காய் ,கனி அனைத்தும் மருந்தாகும். அது சத்து தானே தவிர பக்க விளைவுகள் இல்லாதது.இப்பொழுதுதான் சற்று விழிப்புணர்வு வந்துள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் சித்த மருத்துவம் இன்னும் சிறந்து விளங்கும்.அந்த விஷயத்தை இந்தப் படத்தில் அற்புதமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் சிவா.
சிறு முதலீட்டுப் படங்களை நான் பாக்யராஜ், பேரரசு அனைவரும் சென்று வாழ்த்துவோம்.

நான் சாதாரணமாக நினைத்து தான் இங்கே வந்தேன். இந்த மேடை அற்புதமான மேடையாக இருக்கிறது. அனைவரும் படத்திற்காக ஆத்மார்த்தமாகப் பேசினார்கள். அர்பணிப்போடு உழைத்து இருக்கிறார்கள்.

தயாரிப்பாளரைப் பணம் கொடுக்கும் கருவூலம் போல நினைக்கிறார்கள். இயக்குநர் இல்லாமல் படம் இல்லை. அதே போல் தயாரிப்பாளர் இல்லாமல் படம் இல்லை.தயாரிப்பாளர் காசு போட்டு தேங்காய், பூ, பழம் வாங்கிப் பூஜை போட்டால் தான் எல்லாருக்கும் வேலை. அதே போல படத்தை முடித்து பூசணிக்காய் உடைக்க வேண்டும்.அதேபோல இது போன்ற விழாக்கள் நடத்த வேண்டும்.

ஒரு இசையமைப்பாளர் ஒரு அறைக்குள் இருந்து மெட்டு போட்டுவிட்டால் அது உலகத்தில் பரவி விடாது.ஒரு தயாரிப்பாளர் அவருக்கான தண்ணீர் முதல் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து ட்யூன் வாங்கி கவிஞரை அழைத்து அதற்கான பாடல் வரிகளை எழுத வைத்து, நல்ல பாடகரை வைத்துப் பாடல் உருவாக்கி இது மாதிரி இசை வெளியீட்டு விழா வைத்து,அதற்குச் சில லட்சம் செலவு செய்து உலகுக்கு அறிமுகப்படுத்தினால் அனைத்துக்கும் தயாரிப்பாளர் செலவு தான்.அவர் செய்கிற வேலைக்குப் பணம் கொடுத்து விடுகிறார்.

ஆகவே இந்தப் பாட்டு முழுவதும் தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம். எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்து விடுகிறோம். அனைத்தையும் வாங்கிக் கொண்டு எனக்கு சொந்தம் சொந்தம் என்று சொன்னால் அது பேராசை.ஆனால் ஒப்பந்தத்தில் அப்படிக் கொடுப்பதாக எழுதியிருந்தால் கொடுத்து விட வேண்டும்.
முதல் போடும் முதலாளிக்குத் துரோகம் செய்துவிட்டு ,தான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்து விட்டதால் இன்று எத்தனையோ படத்தயாரிப்பாளர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.
எனவே அனைவரும் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்குத் துணை நின்று படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும்.

இது தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் பற்றிப் பேசி இருப்பதால் தமிழ்நாட்டில் சமீப காலமாக நடக்கும் அவலத்தைப் பற்றி நான் சொல்ல வேண்டி இருக்கிறது.தமிழ்ப் பண்பாடு என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான்.

அதேபோல தமிழ்த் திரை உலகில் பல பேர் காதலித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணம் எங்கள் பாக்யராஜ், இன்பமான வாழ்க்கையை ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டு ரசிகர்கள் நடிகர்களைப் பின்பற்றுகிறார்கள் .நடிகர் கிழிந்த பேண்ட் போட்டால் இவர்கள் கிழித்துக் கொள்கிறார்கள். தலை கலைந்திருந்தால் இவர்கள் தலையை கலைத்து விட்டுக் கொள்கிறார்கள். ரசிகர்களே இப்படி நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்.

போன மாதம் தனுஷும் ஐஸ்வர்யாவும் நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள்

தமிழ் மக்களிடம் அது பெரிய பரபரப்பு உண்டாக்கியது. இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இப்படிப் பிரிந்து போகிறோம் என்றால் அந்தக் குழந்தையின் கதி என்ன?அந்தப் பெண்ணைப் பெற்ற, உலகம் அறிந்த மாபெரும் தலைவன் ரஜினி அவரது மனது எப்படி வேதனைப்படும்?

இப்போது பார்த்தால் ஜிவி பிரகாஷ் -சைந்தவி பிரச்சினை.சைந்தவி நல்ல பெண் எனது ‘உணர்ச்சிகள்’ படத்திற்கு முதல் பாடலைப் பாடினார்.நல்ல ஒழுக்கமான அருமையான பெண்.காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள். காதலிக்கும் போது மனதை முழுமையாக புரிந்து கொண்டுதான் காதலிக்கிறார்கள். கல்யாணத்திற்குப் பிறகு ஏன் கசப்பாகப் போகிறது?இருக்கலாம், விட்டுக் கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

இப்போது சாப்ட்வேர் கம்பெனிகளில் 15 நாளில் காதல் ,ஒரு மாதம் வாழ்க்கை, மூன்றாவது மாதம் விவாகரத்துக்கு நீதிமன்றம் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழ் பண்பாடு சித்த மருத்துவம் பற்றிச் சொல்லியிருக்கும் இந்த ‘கன்னி’ படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” இவ்வாறு கே .ராஜன் பேசினார் .

இப்படத்தை விளம்பரப் படுத்தும் நோக்கத்தில் நடிகர் கூல் சுரேஷ் கன்னிப்பெண் வேடத்தில் விழாவுக்கு வந்து பரபரப்பூட்டினார். அவரைப் பார்த்து இயக்குநர் பேரரசு, “நல்லவேளை ‘கன்னி’ என்று படத்தின் பெயர் இருந்ததால் ஒரு கன்னி வேடத்தில் வந்திருக்கிறார் . நிர்வாணம் என்று படத்தின் பெயர் இருந்திருந்தால் நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்று கூறி கூல் சுரேஷைக் கலாய்த்தார்.

இவ்விழாவில்
96 படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார், ‘கன்னி’ படத்தின் தயாரிப்பாளர் எம். செல்வராஜ், இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி,படத்தில் நடித்த
அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா க்ரிஷ், ராம் பரதன் ,ஒளிப்பதிவாளர் ராஜ்குமார், இசையமைப்பாளர் செபாஸ்டியன் சதீஷ்,படத்தொகுப்பாளர் சாம், கலை இயக்குநர் சக்திவேல் மோகன்,கலரிஸ்ட் சி. சுருளி ராஜன்,மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்,தயாரிப்பு நிர்வாகி ஹென்றி குமார் ஆகியோர் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

K Rajan speech regarding Dhanush and GV Prakash divorces at Kanni event

HIT LIST EVENT விக்ரமன் மகனை வாழ்த்திய திரையுலகம்.: சுவாரஸ்ய பேச்சு துளிகள்

HIT LIST EVENT விக்ரமன் மகனை வாழ்த்திய திரையுலகம்.: சுவாரஸ்ய பேச்சு துளிகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HIT LIST EVENT விக்ரமன் மகனை வாழ்த்திய திரையுலகம்.: சுவாரஸ்ய பேச்சு துளிகள்

இயக்குனர் K.S.ரவிக்குமார் அவர்களின் அடுத்த தயாரிப்பான ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா*

‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது.

படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன. அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக் சுப்புராஜ், ‘சிறுத்தை’ சிவா, பேரரசு, கதிர், சரண், எழில், இராஜகுமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், R.V.உதயகுமார், P.வாசு, இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி, R.பார்த்திபன் K. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா, நடிகர்கள் சரத்குமார், ஜீவா, ‘ஜெயம்’ரவி, நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜெயபிரகாஷ், தயாரிப்பாளர்கள் ‘கலைப்புலி’ S.தாணு, T.சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் நிகழ்ச்சியின் முதலில் படத்தின் தயாரிப்பாளர் K.S.ரவிக்குமாரின் அழைப்பிற்கிணங்க படத்தின் இரண்டு இயக்குனர்களில் ஒருவரான சூர்யகதிர் அவர்களை இயக்குனர் K.பாக்யராஜ் அறிமுகம் செய்து வைத்தார்.

இன்னொரு இயக்குனர் கார்த்திகேயன் அவர்களை இயக்குனர் P.வாசு அறிமுகம் செய்து வைத்தார். படத்தின் கதாநாயகனான விஜய் கனிஷ்கா அவர்களை நடிகர் ‘ஜெயம்’ரவி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் படக்குழுவினர் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

*இயக்குனர் K.S.ரவிக்குமார்:*

K.S.ரவிக்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசும் பொழுது….

“இந்த திரைப்படம் உருவாவதற்கு காரணமான ரமேஷ் கிராண்ட் கிரியேஷன்ஸ் கார்த்திக், கமலக்கண்ணன், சீனிவாசன், விஜயகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து மரியாதை செய்கிறேன். எதார்த்தமாக வீட்டில் பேசும்போது ‘விஜய் கனிஷ்கா கதாநாயகனாக நடிக்க விரும்புகிறார், நீங்களே உங்கள் தயாரிப்பில் அறிமுகம் செய்து வையுங்கள்’ என்று விக்ரமன் அவர்கள் கூறியது இன்று உண்மையாகியுள்ளது.

முதலாவதாக சரத்குமார் அவர்களுக்கு, என் மீதும் இயக்குனர் விக்ரமன் அவர்கள் மீதும் அன்பு பாராட்டி, இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கதைக்காகவும் கதாபாத்திரத்துகாகவும் ஒத்துக் கொண்டு கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் நடித்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒத்துக் கொண்ட சித்தாரா அவர்களுக்கும் மிக்க நன்றி.துணைக் கதாப்பத்திரங்களில் நடித்த அனைவருக்கும் மிக்க நன்றி. என்னதான் என்னுடைய உதவி இயக்குனர்களையே இந்த திரைப்படத்தின் இயக்குனர்களாக பணிபுரிய வைத்தாலும் அவர்கள் திரைக்கதையை சிறப்பாக உருவாக்கினார்கள்.

அதேபோல் அவர்கள் எப்படி பணிபுரிகிறார்கள் என்று சரத்குமார் மற்றும் கௌதம் இருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டேன். இங்கு வந்து வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

*இயக்குனர் தேசிங்கு பெரியசாமி:*

அடுத்ததாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பேசும்போது,”பல வித தடைகளுக்கு நடுவே உருவாகி இருக்கும் இப்படத்தின் தரம் டிரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

விஜய் கனிஷ்கா நாயகனாக நடித்திருப்பதை விட, கதாபாத்திரத்திரமாக சரத்குமார், கௌதம் மேனன் போன்றோர் நடுவே சிறப்பாக நடித்திருக்கிறார். கண்டிப்பாக இத்திரைப்படம் வெற்றியடையும் என்று வாழ்த்துக்கிறேன்,” என்றார்.

*இயக்குனர் பேரரசு:*

அடுத்ததாக பேசிய பேரரசு,”இவ்விழாவை ஒரு குடும்ப விழாவாகவே பார்க்கிறேன். முன்னணி திரைப்பட நிறுவனங்களைப் போலவே சூப்பர்குட் ஃபிலிம்ஸ் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் தலைசிறந்த இயக்குனர் விக்ரமன். அவருக்கு தனது குருபக்தியை காமிக்கும் விதமாக அவரது மகனை வைத்து படம் தயாரித்துள்ளார் K.S.ரவிக்குமார் அவர்கள். விக்ரமன் மற்றும் K.S.ரவிக்குமார் ஆகியோரின் அன்பிற்கு பாத்திரமாக இந்த படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார் சரத்குமார்.

ஒரு வெற்றிகரமான கதாநாயகனாக வருவார் விஜய் கனிஷ்கா; மேலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடையும்”, என்று வாழ்த்தினார்.

*தயாரிப்பாளர் ‘கலைப்புலி’S.தாணு:*

தயாரிப்பாளர் ‘கலைப்புலி’S.தாணு அவர்கள் பேசும்பொழுது,” இயக்குனர் விக்ரமன் அவர்கள் இயக்கிய திரைப்படங்களும் K.S.ரவிக்குமார் இயக்கிய படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வருவாய் ஈட்டி தந்ததுள்ளன. நீங்கள் இருவரும் செய்த சாதனைகள் விஜய் கனிஷ்காவுக்கும் வந்து சேரும் என்று நான் வாழ்த்துகிறேன்”, என்றார்.

*நடிகர் ‘ஜெயம்’ரவி:*

நடிகர் ‘ஜெயம்’ரவி பேசும் பொழுது…

இயக்குனர் K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் அவர்களின் அன்பிற்காகத்தான், இங்கே இவ்வளவு இயக்குனர்கள் வந்துள்ளார்கள்.

இருவருமே இந்திய சினிமாவின் சிறந்த ஆளுமைகள். அவர்களின் பெயரை காப்பாற்றி இந்திய சினிமாவில் ஒருவராக விஜய்கனிஷ்கா வருவார் என்று நான் நம்புகிறேன்.

நான் அறிமுகம் ஆகும்போது எப்படி ஒரு ஆதரவு எனக்கு கிடைத்ததோ, அதேபோல உங்களுக்கும் கிடைத்துள்ளது.அதேபோல உங்களை நான் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது மிகவும் பெருமையாக உள்ளது. இரட்டை இயக்குனர்களாக இருப்பதற்கு அவர்களையும் வாழ்த்துகிறேன். வெற்றிப்படம் என்பது இப்போதே தெரிகிறது;இந்த படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.

*நடிகர் ஜீவா:*

நடிகர் ஜீவா அவர்கள் பேசும் பொழுது,” .K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இயக்கத்திலும் நான் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளேன். இது ஒரு குடும்ப விழா. நான் அறிமுகமாகும் போதும் என்னை வாழ்த்த இதேபோல அனைவரும் வந்திருந்தனர்.

என்னாலும் சிறந்த படங்களை தர முடிந்தது.இவர்களின் வாழ்த்து உங்களுக்கு மிகப்பெரிய வாழ்த்தாக அமையும்.நீங்களும் மேன்மேலும் வளருவீர்கள் என்று வாழ்த்துகிறேன். இயக்குனருக்கும், RK Celluloids-க்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

*இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்:*

கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் பேசும் பொழுது,”விஜய் கனிஷ்கா, இசையமைப்பாளர் C.சத்யா மற்றும் இயக்குனர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல என்னுடைய இரண்டாவது திரைப்படம் ஜிகர்தண்டா வெளியாவதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் விக்ரமன் அவர்கள் மற்றும் R.K.செல்வமணி அவர்கள் இந்த நேரத்தில் அதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

*இயக்குனர் K.பாக்யராஜ்:*

அடுத்ததாக K.பாக்யராஜ் அவர்கள் பேசும் போது,” இது ஒரு இசை வெளியீட்டு விழாவாக அல்லாமல் நன்றி தெரிவிக்கும் விழா போல் உள்ளது.

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் R.B.சௌத்ரி அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். இந்த மாதிரியான இயக்குனர்களை அறிமுகப்படுத்தி தமிழ் சினிமாவுக்கு சேவை செய்துள்ளார். திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது. விஜய் கனிஷ்காவிற்கும் திரைப்படம் வெற்றியடையவும் வாழ்த்துகிறேன்”, என்றார்.

*இயக்குனர் மிஷ்கின்:*

இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பேசும்பொழுது…

” தலைசிறந்த ஒரு அரசனின் பெயரை தன் மகனுக்கு சூட்டியுள்ளார். விக்ரமன் அவர்களின் படத்தலைப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய் கனிஷ்காவிற்கு இந்த அளவுக்கு ஆதரவு இருப்பது வரவேற்கத்தக்கது. விஜய் கனிஷ்காவிற்கும் இயக்குனர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.ரசிகர்கள் அனைவரும் திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டுகிறேன்”, என்றார்.

*’சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார்:*

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் பேசும்பொழுது…

“இயக்குனர் K.S.ரவிக்குமார் மற்றும் விக்ரமன் இருவரும் என் வாழ்வில் முக்கியமான நபர்கள் அவர்கள் எனக்கு மறக்க முடியாத தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள்.

இவர்கள் இருவரும் தலைசிறந்தவர்கள், அவர்கள் என்றும் வாழ்நாளில் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். எவ்வளவோ பிரச்சினைகள் எனக்கும் K.S.ரவிக்குமார் அவர்களுக்கும் வந்தாலும் அவர் ஒரு தங்கமான மனிதர். இது ஒரு குடும்ப விழா.

விஜய் கனிஷ்கா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் C.சத்யா அவர்களும் சிறப்பான இசையை கொடுத்துள்ளார். ‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.

*இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி:*

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்பொழுது…

” இந்த மேடையே ஒரு பாசிட்டிவான மேடையாக இருந்தது. K.பாக்யராஜ் அவர்கள், பார்த்திபன், விக்ரமன், K.S.ரவிக்குமார் அவர்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது.

விக்ரமன், K.S.ரவிக்குமார் இருவருமே தயாரிப்பாளர்களின் இயக்குனர்கள் ஆவர். இந்த திரைப்படத்தில் அவர்கள் இணைந்திருப்பது நட்பு ரீதியானது. விஜய் கனிஷ்கா அவர்களின் நடிப்பு சிறப்பாக உள்ளது. அவருக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. இந்த படம் வெற்றியடைய பத்திரிக்கை நண்பர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறேன்”,என்றார்.

*இயக்குனர் R.V.உதயகுமார்:*

இயக்குனர் R.V.உதயகுமார் அவர்கள் பேசும் பொழுது,” நான், இயக்குனர் K.S.ரவிக்குமார் மற்றும் இயக்குனர் விக்ரமன் ஆகியோர் சமகாலத்தில் பயணித்து ஒன்றாக பழகியவர்கள்.

இயக்குனர்கள் சங்கம் சிறப்பாக செயல்பட விக்ரமன் அவர்களும் ஒரு காரணம். பலவித குடும்ப சூழலுக்கு நடுவே தன் மகனை சினிமாத்துறையில் சரியாக தடம் பதிக்க வைத்துள்ளார். ‘ஹிட் லிஸ்ட்’ என்ற இத்திரைப்படத்தை வெற்றியடையச் செய்ய வேண்டியது ரசிகர்களாகிய, உங்கள் கையில் உள்ளது” என்றார்.

*இயக்குனர் விக்ரமன்:*

இயக்குனர் விக்ரமன் அவர்கள் பேசும் பொழுது..

“நான் பேச வேண்டியதை K.S.ரவிக்குமார் அவர்களே பேசிவிட்டார். இந்த திரைப்படத்தை தயாரித்ததற்கு அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அப்பாவாக அல்லாமல், ஒரு இயக்குனராக சொல்கிறேன்; விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும். அவர் மேன்மேலும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்”, என்றார்.

Sarathkumar Vijay Kanishka starring Hit List Audio launch

——-

ரஜித் இயக்கத்தில் கற்பனைக்கு அப்பாற்பட்டதை பேச வரும் ‘குற்றம் புதிது’

ரஜித் இயக்கத்தில் கற்பனைக்கு அப்பாற்பட்டதை பேச வரும் ‘குற்றம் புதிது’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜித் இயக்கத்தில் கற்பனைக்கு அப்பாற்பட்டதை பேச வரும் ‘குற்றம் புதிது’

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ” குற்றம் புதிது ”

அறிமுக நாயகன் தருண் – அறிமுக நாயகி செஷ்வித்தா நடிக்கும் ” குற்றம் புதிது ”

GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் DR.S.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டாமாக தயாரிக்கும் படம் “குற்றம் புதிது ”

அறிமுக இயக்குனர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்த படத்தில் காதநாயகனாக தருண் நடிக்கிறார்.

செஷ்வித்தா நாயகியாக நடிக்கிறார்.
மற்றும் மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன்,பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரஜித், கிரிஷ் பாடல் வரி எழுத,
ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, கரண் B கிருபா இசையமைக்கிறார். கமலக்கண்ணன் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

STORYBOARD சந்திரன், நடன இயக்குனர் வரதா,COSTUME DESIGNER கெசியா, COSTUMER சம்பத், MAKEUP ARTIST “AIRPORT” RAJA, பாடகர்கள் அனந்து, ரஜித், STILL PHOTOGRAPHY S. SAKTHIPRIYAN, PUBLICITY DESIGNER DINESH KUMAR, இப்படத்திற்கு மக்கள் தொடர்பாளராக நித்தீஸ் ஸ்ரீராம், மணவை புவன், தயாரிப்பு மேலாளராய் ஆனந்த் பணியாற்றுகிறார்.

மேலும் இப்படத்தின் VISUAL EFFECTS பணிகளை WIREFRAME MEDIA நிறுவனம் ஏற்றுள்ளது.

இவர்களின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த படம் “கற்பனைக்கு அப்பாற்பட்டதை எதார்த்தமான பாணியில் பேச காத்திருக்கிறது.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேபில் சிறப்பாக நடைபெற்றது.

இமாதம் 23-ம் தேதி தொடங்கும் இப்படப்பிடிப்பு ஒரேகட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Rajith in Kuttram Pudidhu movie pooja happend

ரஜினி ரசிகர்களுக்கு ‘கட்டீஸ் கேங்’ தந்த ஷாக்.; சந்தோஷத்தில் சௌந்தரராஜா

ரஜினி ரசிகர்களுக்கு ‘கட்டீஸ் கேங்’ தந்த ஷாக்.; சந்தோஷத்தில் சௌந்தரராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி ரசிகர்களுக்கு ‘கட்டீஸ் கேங்’ தந்த ஷாக்.; சந்தோஷத்தில் சௌந்தரராஜா

*ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவித்த கட்டீஸ் கேங் படக்குழுவினர்*

தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மலையாள படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது.

அந்த வகையில் தற்போது கட்டீஸ் கேங் என்ற மலையாள படம் தற்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

ஓசியானிக் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் அனில் தேவ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கட்டீஸ் கேங். இதில் உன்னிலாலு, சவுந்தரராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களும், எழுத்தாளருமான ராஜ் கார்த்திக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் தீவிர ரசிகர்.

ரஜினிகாந்த் படங்களை பார்த்து வளர்ந்தவர். இவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் இயக்க ஆசை. ஆனால், அது நிறைவேறாமல் இருக்கிறது. இருப்பினும், ரஜினிகாந்தை முன்னோடியாக வைத்து கட்டீஸ் கேங் என்ற படத்திற்கு கதை எழுதி இருக்கிறார்.

இதில் வரும் கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்து இருக்கிறார். இந்த படம் கேரளா மட்டுமில்லாமல் தமிழ் நாட்டிலும் வெளியாக இருக்கிறது.

இதை கொண்டாடும் விதமாக சென்னை ரோகிணி தியேட்டரில் கட்டீஸ் கேங் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

மேலும் ரஜினிகாந்த் ரசிகர்களை கவுரவம் செய்யும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரஜினி காந்த் ரசிகர் மன்ற தலைவர் சினோரா அசோகன் மற்றும் ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த்தும் தலைமை தாங்கினார்கள். கட்டீஸ் கேங் திரைப்படம் மே மாதம் 16 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சவுந்தரராஜா, கட்டீஸ் கேங் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Malayalam movie Kattis Gang honoured Rajini fans

இலவச சினிமா பார்க்க OTT PLUS.; இணைந்தார் ‘ஆக்சன் ரியாக்ஷன்’ ஜெனிஸ்

இலவச சினிமா பார்க்க OTT PLUS.; இணைந்தார் ‘ஆக்சன் ரியாக்ஷன்’ ஜெனிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இலவச சினிமா வழங்கும் OTT PLUS.; இணைந்தார் ஆக்சன் ரியாக்ஷன் ஜெனிஸ்

திரைப்படப் பிரியர்களே! உங்களுக்கு பிடித்த இந்தியமொழி படங்களை புதிய “ஓடிடி பிளஸ் ஆப்” ஐ ( #OTTPLUS ) ஆப் ஸ்டோர் (App Store ) / கூகுள் ப்ளே ஸ்டோரில் (Google play store ), டவுன்லோட் செய்து இந்த மாதம் முழுவதும் “இலவசமாக” கண்டுகளிக்கலாம்.

புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் “ஓடிடி ப்ளஸ்” ஓடிடி தளத்துடன் எமது “ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்” நிறுவனம் “அதிகாரப்பூர்வ அக்ரிகேட்டராக” ஒப்பந்தம் செய்திருப்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறோம்.

எங்கள் “ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்” வழியாக
திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவது வெளிநாட்டு உரிமை, சாட்டிலைட் ரைட்ஸ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னட டப்பிங் உரிமைகளை விற்றுத் தருவதுடன் சமீபகாலமாக அமேசான், ஆஹா போன்ற தளங்களில் இடம் பெறச்செய்யும் பணிகளை செய்தோம்

நாங்கள், இனி “ஓடிடி பிளஸ்” தளம் வழியாகவும் கூடுதல் வருவாய் பெற்றுத்தர உறுதுணை செய்யவிருக்கின்றோம்.

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உங்களது
வெளியிடப்பட்ட / வெளியாகவிருக்கும் அல்லது தயாரிப்பு நிறைவடையும் நிலையிலிருக்கும் திரைப்படம், குறும்படம் , சிங்கிள் பாடல் வீடியோக்களின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் லிங்க்கை 9791125244 என்ற வாட்சப் எண்ணில் அனுப்புங்கள்.

எங்கள் குழுவினர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்கள்.

வாழ்த்துகள் ..,✨💐

Action Reaction signed as an official aggregator for OTT PLUS

Dear Movie buffs!

Download the brand new “OTTPLUS” ott app from App Store / Google play store & enjoy your favourite movies & video content for FREE @ MAY month

Glad to share that our “Action Reaction” signed as an “official aggregator” for the newly launched ott platform “OTTPLUS”
Happy for the association with the promising multilingual ott platform .

We are releasing movies in theaters @ Tamilnadu , Kerala, Karnataka , Telugu states , north India & allover the World , Assisting producer to sell overseas rights, satellite rights, Hindi, Telugu, Malayalam, Kannada dubbing rights and recently doing placements on platforms like Amazon, Aha through our ACTION REACTION ,
Now guiding the producers to generate additional revenue through “OTT plus” ott platform.

Hope to deliver more good contents post theatrical and direct ott launch in the future.

Dear Producers / filmmakers , feel free to share the posters , trailer link of your movie , independent video content , short film etc., to 9791125244

Our team will revert back to you soon.

Best wishes Team !!! 💐

https://www.facebook.com/Reaction4Action?mibextid=LQQJ4d

https://www.facebook.com/jeni.sh.319?mibextid=PlNXYD

#OTT #OttPlus #ActionReaction

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’.: அமீரை பாராட்டிய ‘லைக்கா’ சுபாஷ்கரன்

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’.: அமீரை பாராட்டிய ‘லைக்கா’ சுபாஷ்கரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘உயிர் தமிழுக்கு’ பாராட்டு.: ஆவேசமாக பேசினாலும் அமீரை பாராட்டிய சுபாஷ்கரன்

*லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு*

*அமீர் தன்னை விமர்சித்த நிலையிலும் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்து பாராட்டிய லைக்கா சுபாஸ்கரன்*

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’.

ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் இமான் அண்ணாச்சி, சரவண சக்தி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

அரசியல் பின்னணியில் உருவாகி உள்ள இந்த படத்தில் அமீர் நாயகனாக நடித்திருக்கிறார் என்பதால் படம் குறித்து ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது

இந்த நிலையில் தற்போது லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க விரும்புவதாக படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆதம்பாவாவிடம் மின்னஞ்சல் மூலமாக செய்தி அனுப்பினார்

இதனைத் தொடர்ந்து லண்டனில் அவருக்காக சிறப்பு காட்சி ஒன்று திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது. படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் லைக்கா சுபாஸ்கரன்.

சுபாஸ்கரன் தானாகவே முன்வந்து ‘உயிர் தமிழுக்கு’ படத்தை பார்க்க விரும்பியதும் படம் பார்த்துவிட்டு பாராட்டியதும் மிகவும் ஆரோக்கியமான விஷயம் என்று கூறினார் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஆதம் பாவா.

கூடுதல் தகவல்..

அண்மையில் நடந்த ‘உயிர் தமிழுக்கு’ பிரஸ் மீட்டில்… உங்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது? என ஜாபர் சாதிகிடம் கேள்வி கேட்டீர்களா என அமீரிடம் கேள்வி முன் வைக்கப்பட்டது.

“என்னிடம் நீங்கள் கேள்வி கேட்பது போல லைக்கா சுபாஷ்கரிடம் கேள்வி கேட்பீர்களா? என பத்திரிகையாளர்களிடம் ஆவேசமாக பேசியிருந்தார் அமீர்” என்பது குறிப்பிடத்தக்கது.

Lyca Subaskaran apprecited Uyir Thamizhuku movie

——-

More Articles
Follows