‘சட்னி – சாம்பாருக்காக கூட்டணி போட்ட யோகிபாபு & வாணி போஜன்

‘சட்னி – சாம்பாருக்காக கூட்டணி போட்ட யோகிபாபு & வாணி போஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சட்னி – சாம்பருக்காக கூட்டணி போட்ட யோகிபாபு & வாணி போஜன்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘சட்னி – சாம்பார்’ சீரிஸின், அசத்தலான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபுவின் முதல் வெப் சீரிஸாக உருவாகியுள்ள இந்த சீரிஸ், வரும் ஜூலை 26 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது.

‘சட்னி – சாம்பார்’ டிரெய்லர், இயக்குநர் ராதாமோகனின் வழக்கமான முத்திரைகளுடன், அசத்தலான காமெடி, செண்டிமெண்ட் என ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

‘சட்னி – சாம்பார்’ முழுக்க முழுக்க குடும்பங்கள் சிரித்து ரசிக்கும், யூத்ஃபுல் எண்டர்டெய்னர் சீரிஸாக இருக்கும்.

இந்தத் சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குனர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார்.

கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

Yogibabu debut in Chutney Sambar web series

லட்டு ஹீரோயின்.. தமனுக்கு தாராள முத்தங்கள்.; ‘பார்க்’ விழாவில் பேரரசு & உதயகுமார் பேச்சு

லட்டு ஹீரோயின்.. தமனுக்கு தாராள முத்தங்கள்.; ‘பார்க்’ விழாவில் பேரரசு & உதயகுமார் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லட்டு ஹீரோயின்.. தமனுக்கு தாராள கிஸ் சீன்.; ‘பார்க்’ விழாவில் பேரரசு & உதயகுமார் பேச்சு

இயக்குநருக்கு கதைப்பற்றும் கதாநாயகிக்கு சதைப் பற்றும் தேவை : ‘பார்க்’ திரைப்பட விழாவில் பேரரசு கலகல பேச்சு!

படம் எடுக்க கோடிகள் முக்கியமல்ல நல்ல கதை தான் முக்கியம் : இயக்குநர் ஆர் .வி .உதயகுமார் பேச்சு!

அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது..

“இந்த இயக்குநர் முருகன் 10 ஆண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார். சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை.

அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை.ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து வந்தார். ஒரு நாள் சுருக்கமாகக் கதை சொன்னார். அப்படி அவர் சொன்ன போது உடனே நான் செய்யலாம் என்றேன்.
படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும். இரண்டாவது பாதியில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார்.

அது எனக்குப் பிடித்தது படம் எடுக்க ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள்” என்றார்

இணைத் தயாரிப்பாளர் ந. ராசா பேசும்போது,

“பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட எனக்கு பாடல் ஆசிரியராகும் ஆசை இருந்தது. இந்த முருகன் அறிமுகத்தில் இதற்கு முன்பு இரண்டு படங்களில் பாடல் எழுதி விட்டேன்.இது மூன்றாவது படம். இதில் நம் இந்தக் காலத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , வாட்ஸப் காலத்து இளைஞர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளைப் போட்டுப் பாடல் எழுதி இருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஈ.கே.முருகன் பேசும் போது,

” இந்த பார்க் படத்தின் மூலம் தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்தது வாய்ப்பு அல்ல வாழ்க்கை . பொதுவாக இது மாதிரி ஹாரர் படங்களில் பேய்களை விரட்ட மதத்து சாமியார்களைக் கொண்டுதான் விரட்ட வைப்பார்கள்.நான் அதிலிருந்து விலகி ஒரு சாதாரண ஒரு நபர் மூலம், சாலையில் செல்லும் நபர் மூலம் ஓட்ட வைத்துள்ளேன்.அந்த உத்தி தான் தயாரிப்பாளரைக் கவர்ந்தது.
முதலில் தயாரிப்பாளர் வைத்து நான் இரண்டு குறும்படங்கள் எடுத்தேன் அதை லட்சக்கணக்கான பேர் பார்த்து அவருக்கு ஒரு வருமானம் வந்தது.

அந்த நம்பிக்கையில் தான் திரைப்படத்தில் இறங்கினார்.அதன் பிறகு இந்தப் படம் எடுத்து இதோ உங்கள் முன் வந்து விட்டோம். இந்தப் படத்திற்காக அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது” என்றார்.

நடிகை ஸ்வேதா டோரத்தி பேசும் போது,

” அண்மையில் வெளியான லாந்தர் படத்துக்குப் பிறகு விரைவிலேயே பார்க் படத்தின் மூலம் படத்தின் மூலம் உங்கள் முன் நிற்கிறேன் . மகிழ்ச்சி.பார்க் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் திரையரங்கு சென்று படம் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறோம்” என்றார்.

சிறு பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்பழகன் பேசும்போது,

” சாதாரணமாகப் படத்தில் பணியாற்றியவர்கள்தான் அந்தப் படத்தை நன்றாக இருக்கிறது என்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு சென்சார் ஸ்கிரிப்ட் எழுதியவர் கூட படம் நன்றாக இருக்கிறது என்றார். அதனால் படத்தின் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறது.

சினிமாவில் இப்போது படம் எடுக்க 500 கோடி , 400 கோடி, 200 கோடி என்று கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை எடுக்கிறார்கள். எல்லாமா ஓடி விடுகின்றன?அவர்கள் 10 கோடிக்குள் எடுத்தால் 50 படங்கள் எடுக்கலாம். அப்படிப் படம் எடுத்து பலருக்கும் வாய்ப்பு அளிக்கலாம். 50 நடிகர்களை உருவாக்கலாம்; 50 இயக்குநர்களை உருவாக்கலாம்.
ஏன் அதைச் செய்வதில்லை?” என்றார்.

கதாநாயகன் தமன் குமார் பேசும் போது…

” இந்தப் படத்தின் மூலம் இந்த படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகி விடுவார்.படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நடிகராகி விடுவார். அந்த அளவிற்கு அவர்கள் இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குநர் முருகன் நன்றாக நடிப்பார் .அவருக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடித்தது நல்ல அனுபவம் .ஒரு நொடி படத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. ஆனால் படப்பிடிப்பின் போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். நான் நடித்தேன்.

இரண்டு பாத்திரங்களையும் என்னால் மறக்க முடியாது.படத்தில் பணியாற்றிய அனைவரும் ஏதோ தங்கள் சொந்தப்படம் போல் நினைத்து உழைத்தார்கள்.
உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தப் படம் ஜெயிக்கும்” என்றார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,

“இந்த பார்க் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் எடுத்துள்ளார்கள். என்னைவிட வயதானவர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும் போது..,எனக்கு மட்டும் அமைச்சர் முதல் மந்திரி என்று வேடம் கொடுக்கிறார்கள் .எனக்கும் இப்போது கதாநாயகன் ஆசை வந்துவிட்டது.

தமன் போன்றவர்கள், கதாநாயகர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் போது எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.நான் இயக்கிய போதே நடிக்க வாய்ப்பு வந்தது. என் உதவி இயக்குநர்கள் பொறாமையால் தடுத்து விட்டார்கள்.

எத்தனைக் கோடியில் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அது அவரவர் விருப்பம் .ஆனால் அதைவிட அதில் நல்ல கதை இருக்க வேண்டும், திரைக்கதை இருக்க வேண்டும். எது இருக்க வேண்டுமோ அது இருக்க வேண்டும். நான் கிழக்கு வாசல் ஒன்றரை கோடியில் எடுத்தேன், சின்ன கவுண்டர் இரண்டரைக் கோடியில் எடுத்தேன், எஜமான் நான்கு கோடியில் எடுத்தேன் .அதனால் கோடி என்பது பிரச்சினை இல்லை.. அதில் என்ன கதை இருக்கிறது என்பதுதான் முக்கியம்.

சினிமாவில் வருவதற்கு கஷ்டப்படுகிறார்கள். கஷ்டம் அனுபவத்தைத் தரும். அந்த அனுபவம் தான் நமது வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . எனக்கும் பாடல் எழுத வாய்ப்பு வருகிறது. எல்லாம் ஐட்டம் பாடல்களாக இருக்கின்றன.

இன்று வருவதெல்லாம் உயிர் இல்லாத பாடல்களாக உள்ளன. நல்ல மெட்டு கொடுத்தால் தான் நல்ல வரிகள் எழுத முடியும், இது எனது அனுபவம் “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இப்போது இயக்குநர்கள் எல்லாமே நடிகர்கள் ஆகிவிட்டார்கள்.இங்கே வந்திருக்கும் ஆர்.வி. உதயகுமார், சிங்கம் புலி, சரவண சுப்பையா எல்லாரும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .

இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.

இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள்.

பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா லட்டு போல அப்படி இருக்கிறார்.

சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.

இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்” என்றார்

இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, தனது முன் கதையை எல்லாம் சினிமாவில் சிரமப்பட்ட கதையை எல்லாம் சொன்னார்.தொடர்ந்து அவர் பேசும்போது,

“நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும்.எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.

இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான்.

இந்தக் கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் .அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

தமன் நன்றாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார். அவருக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு நாள் தனக்காக அவர் காலத்தைச் செலவிட்டு உள்ளார். இனி அதற்குப் பலன் உண்டு.சினிமா அவரைக் கைவிடாது.

ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும் தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்.

எனக்குப் பாட்டு பாடப் பிடிக்கும் ஆனால் டப்பிங் நடக்கும் போது நான் இடைவேளையில் பாடினால் விடவே மாட்டார்கள்.”என்று பேசியவர் ,சங்கீத ஜாதி முல்லை பாடலைப் பாடி அந்த விழாவுக்கு கலகலப்பூட்டினார்.

விழாவில் இயக்குநர் சரவண சுப்பையா, படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய், ஆடியோ வாங்கி இருக்கும் ட்ராக் மியூசிக் ஆரோக்கியராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வடிவேல், இசையமைப்பாளர் அமரா, ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன், இரண்டாவது கதாநாயகி நீமாரே, இரண்டாவது கதாநாயகன் சுரேந்தர், வில்லன்னாக நடித்திருக்கும் விஜித் சரவணன், நடிகர் பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், நடிகை ஜெயந்திமாலா, பாடலாசிரியர் கு.கார்த்திக், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Perarasu and Rv Udhayakumar speech at Park audio launch

———–

1200 VFX ஷாட்ஸ்.. ‘சதுர்’ ட்ரைலருக்காக தங்கலானை தள்ளி வைத்த தனஞ்செயன்

1200 VFX ஷாட்ஸ்.. ‘சதுர்’ ட்ரைலருக்காக தங்கலானை தள்ளி வைத்த தனஞ்செயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1200 VFX ஷாட்ஸ்.. ‘சதுர்’ ட்ரைலருக்காக தங்கலானை தள்ளி வைத்த தனஞ்செயன்

“சதுர்” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு

1200 VFX ஷாட்ஸ்களுடன் உருவாகியிருக்கும் படம் சதுர் – இயக்குநர் அகஸ்டின் பிரபு !!

டிரெய்லர் பார்த்து பிரமித்து விட்டேன் – சதுர் பட விழாவில் தயாரிப்பாளர் தனஞ்செயன் !!

Rocks Nature Entertainment சார்பில், தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் தயாரிப்பில், இயக்குனர் அகஸ்டின் பிரபு இயக்கத்தில், அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் “சதுர்”.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, தற்போது திரைவெளியீட்டு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்

இயக்குனர் அகஸ்டின் பேசியதாவது…

இந்தப்படத்தில் 1200 VFX ஷாட்ஸ் இருக்கிறது. சாதாரணமாக சின்னப்படத்தில் இவ்வளவு சிஜி இருக்காது. தயாரிப்பாளரிடம் இரண்டு கதை சொன்னேன், இந்தக்கதை இந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்றபோது, தியேட்டருக்கு வருபவர்கள், ஒரு புதுமையான அனுபவம் தர வேண்டும் என்றேன்.

பைலட் எடுத்து காட்டிய போது என்னை முழுதாக நம்ப ஆரம்பித்துவிட்டார். படம் முழுக்க நிறைய பிரம்மாண்டம் இருக்கிறது. கடலுக்குள் நடக்கும் காட்சி இருக்கிறது, கார் சேஸ், ப்ளைட் பைட், ஹிஸ்டாரிகல் காட்சிகள் என நிறைய இருக்கிறது. பாகுபலி அளவெல்லாம் முடியாது ஆனால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம்.

கேமராமேன் சரியாக இருந்தால் தான் சிஜி சரியாக வரும், சந்துரு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். என் எதிர்பார்ப்புகளை புரிந்து இசையமைத்த ஆதர்ஷ்க்கு நன்றி. இப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளருக்கு நன்றி. இன்னொரு முக்கிய காரணமாக இருந்த அமருக்கு நன்றி. படத்தில் எனக்காக கடும் உழைப்பை தந்த, சூர்யா தாமோதரன் என எல்லோருக்கும் நன்றி. எடிட்டர் கார்த்தி நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செய்துள்ளார். ஜூவா ரவி சார் நடிக்கும் போது இது கரக்டாக வருமா என்று கேட்டார், டிரெய்லர் பார்த்த பிறகு, இப்போது நம்புகிறார். தனஞ்செயன் சார் வந்து எங்களை வாழ்த்தியதற்கு நன்றி. ரசிகர்கள் மீதான் நம்பிக்கையில் புதிய அனுபவம் தர வேண்டுமென, இப்படத்தை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…

நான் இந்த விழாவிற்கு வர முடியாத அளவுக்கு ‘தங்கலான்’ பட வேலை இருந்தது. அமர் டிரெய்லர் பாருங்கள் முடிந்தால் வாருங்கள் என்றார். பார்த்துவிட்டு வியந்துவிட்டேன். சின்ன பட்ஜெட்டில் இத்தனை விசயங்கள் கோர்த்து, மிக அழகாக எடுத்துள்ளார்கள். இந்தப்படம் கண்டிப்பாக கவனிக்கும் படியான படைப்பாக இருக்கும்.

அகஸ்டின் பிரபுவின் புது முயற்சி பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். மக்களிடம் இந்தப்படத்தை அறிமுகம் செய்துவிட்டு தியேட்டருக்கு கொண்டு வந்தால் இன்னும் பெரிய வெற்றியைப் பெறும். சின்ன பட்ஜெட் படங்களுக்கு மக்கள் வருவது குறைந்துள்ளது. அதனால் அவர்களுக்கு இந்தப்படத்தை தியேட்டரில் பார்க்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி விட்டு, படத்தை கொண்டு வாருங்கள். இப்படம் நல்ல படைப்பாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் ஜீவா ரவி பேசியதாவது..

ஒரு நல்ல கண்டண்ட் உள்ள படம் இந்த சதுர். படப்பிடிப்பில் ஒரு டப்பாவில் நிற்க சொன்னார் இயக்குனர், படத்தில் பார்த்தால் அது கடலுக்குள் லிப்டில் செல்கிறது. டிரெய்லரே மிரட்டலாக இருக்கிறது. புது குழுவினர் மிக அற்புதமாக படத்தை உருவாக்கியுள்ளனர். பல சின்ன படங்களுக்கு வியாபார ரீதியில் மிகப்பெரிய உதவியாக இருக்கும் தனஞ்செயன் சாருக்கு நன்றி.

அகஸ்டின் இந்தப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய இயக்குனராக உருவெடுப்பார். கோயம்புத்தூரிலிருந்து லோகேஷுக்கு பிறகு இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார். இந்தப்படம் உங்களை வியக்க வைக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் அமர் பேசியதாவது…

பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. சதுர் படத்தில் நடிகனாக அறிமுகமாவது மிகப்பெரிய பெருமை. ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன், படத்தில் என் பெயர் தமிழ், அதுவும் எனக்கு பெருமை. அகஸ்டின் சொன்ன படி படத்தை ஆரம்பித்தார். டிரெய்லர் படத்தின் கலைஞர்களின் திறமையை சொல்லும். நிறைய திறமையாளர்கள் இப்படத்தில் தங்கள்
முழு உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும் நன்றி.

நடிகர் அஜித் பேசியதாவது..

பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. டிரெய்லர் உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். படத்திற்கு உங்கள் முழுமையான ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் தாமோதரன் பேசியதாவது…

சதுர் படத்தில் வாய்ப்பு வழங்கிய இயக்குனர் அகஸ்டின் மற்றும் குழுவினருக்கு நன்றி. டிரெய்லர் இப்போது தான் பார்த்தேன். இயக்குனர் காட்டவே இல்லை. உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறேன். படத்திற்கு உங்கள் முழுமையான ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் சூர்யா பேசியதாவது…

இந்தப்படத்தில் ஒரு மெயின் ரோல் செய்துள்ளேன். இயக்குனர் டிரெய்லரை யாருக்குமே காட்டவில்லை, இங்கு தான் அனைவரும் பார்த்தோம். திருப்தியாக உள்ளது. எங்களுடன் இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், எல்லோருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராம் T சந்தர் பேசியதாவது…
இந்தப்படம் என் வாழ்க்கையில்
மிக முக்கியமான படம். இயக்குனர் அகஸ்டின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. நிறைய சிஜி ஷாட் பிளான் பண்ணி எடுத்துள்ளோம். இயக்குனர் அகஸ்டின் உயிரைக்கொடுத்து உழைத்துள்ளார். நிறையக் கஷ்டப்பட்டு தான் இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இந்த வாய்ப்பை வழங்கிய அகஸ்டினுக்கு நன்றி, எல்லோருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஆதர்ஷ் பேசியதாவது…
இது என் முதல் படம். இந்தப்படத்தில் வேலை பார்த்தது மிகப்பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன். அகஸ்டின் அண்ணா தான் நிறைய ஊக்கம் தந்தார். அவரிடம் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். புதுமையாக பல விசயங்கள் முயற்சித்துள்ளோம், பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் ராம் மணிகண்டன் பேசியதாவது…

தயாரிப்பாளராக இது என் முதல் மேடை, என் பெற்றோர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அகஸ்டின் விஷன் மிகப்பிரமாண்டமாக இருக்கும். டிரெய்லரை விட படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். படத்தில் உழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

எடிட்டர் கார்த்திக் பேசியதாவது…
இந்த வாய்ப்பை வழங்கிய அகஸ்டினுக்கு நன்றி. எடிட்டிங்கில் எனக்கு மிகப்பெரிய உதவியாக அகஸ்டின் இருந்தார். அவர் நிறைய சொல்லித்தந்தார். தியேட்டரில் பார்க்கும் போது இப்படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர்கள் : அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ், தாமோதரன், ஜீவா ரவி, நக்கலைட்ஸ் செல்லா, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், பாய்ஸ் ராஜன், ராஜன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர்*

எழுத்து இயக்கம் : அகஸ்டின் பிரபு
தயாரிப்பு: ராம் மணிகண்டன்
பேனர்: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் நிர்வாகத் தயாரிப்பாளர் : D சக்திவேல் ஒளிப்பதிவு: ராம் T சந்தர்
VFX மேற்பார்வையாளர்: அகஸ்டின் பிரபு.
எடிட்டர்: கார்த்திக் செல்வம்
இசையமைப்பாளர்: ஆதர்ஷ்.
மக்கள் தொடர்பு : A ராஜா

சதுர் டிரெய்லர் லிங்க் – https://youtu.be/dLgaw3K9iyM?si=QMrEto3ZuSv4smwP

Dhananjayan appreciated Sathur movie trailer

வரலட்சுமியின் முதல் காதல் நானல்ல..; மகளுடன் சரத்குமார் பெயர் எப்பவும் இருக்கும்.. – நிக்கோலய்

வரலட்சுமியின் முதல் காதல் நானல்ல..; மகளுடன் சரத்குமார் பெயர் எப்பவும் இருக்கும்.. – நிக்கோலய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலட்சுமியின் முதல் காதல் நானல்ல..; மனைவி பெயருடன் மாமனார் பெயர் இருக்கும்.. – நிக்கோலய்

*நடிகை வரலட்சுமி- நிக்கோலய் சச்தேவ் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை கேலரிஸ்ட் நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10, 2024 அன்று தாய்லாந்தின் கிராபியில் உள்ள அழகிய கடற்கரை ரிசார்ட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடித்ததும் இன்று வரலட்சுமி- நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

நிக்கோலய் பேசியதாவது,…

“எல்லோரும் வந்ததற்கு நன்றி. தமிழ் இப்போதுதான் கற்றுக் கொண்டு வருகிறேன். பொண்டாட்டி என்ற வார்த்தை மட்டும்தான் இப்போதைக்கு தமிழில் தெரியும். மும்பை இனிமேல் என் வீடு கிடையாது. சென்னைதான் என் வீடு.

என்னை நான் அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன். என் பெயர் நிக்கோலய் சச்தேவ். நான் வரலட்சுமி என்ற அழகான பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறேன். திருமணத்திற்குப் பிறகு வரலட்சுமி அவரது பெயரை வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என நிச்சயம் மாற்ற மாட்டார். அவரது பெயர் வரலட்சுமி சரத்குமார் என்று இருப்பதையே நானும் விரும்புகிறேன்.

ஆனால், நான் அவரது பெயரை எடுத்துக் கொள்கிறேன். நிக்கோலய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்பதுதான் இனி என் பெயர். சரத்குமார் மற்றும் வரலட்சுமியின் பெருமை இனி எனக்கும் சொந்தம்.

வரலட்சுமி என்னைத் திருமணம் செய்திருந்தாலும் நான் அவருடைய முதல் காதல் இல்லை. அவருடைய முதல் காதல் எப்போதும் சினிமாவில் நடிப்பதுதான். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பார். உங்கள் அன்பும், ஆதரவும் நிச்சயம் அவருக்கு வேண்டும்” என்றார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்…

“நீங்கள் எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. நிக்கோலய் சொன்னதுபோல என்னுடைய காதல் அவர்.

ஆனால், என்னுடைய உயிர் சினிமாதான். அதனால், திருமணத்திற்குப் பிறகும் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன். வந்து வாழ்த்திய எல்லோருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சரத்குமார்…

“வரலட்சுமிதான் நிக்கோலயை எங்களுக்கு அறிமுகப்படுத்தினர். நிக்கோலயுடன் எங்கள் குடும்பத்திற்கு கண்டதும் காதல் வந்துவிட்டது. ரொம்ப எனர்ஜிட்டிக்கான மனிதர் அவர். அவர் கொடுத்திருக்கும் சந்தோஷம் நிச்சயம் வாழ்நாள் முழுவதும் தொடரும். இறைவனால், இவர்கள் இருவரும் சந்தித்துள்ளனர். உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்”.

Varalakshmis first love cinema says Nicholas Sachdev

கலவை விமர்சனங்களை காலி செய்யும் கமல்.; விநாடிகளை குறைத்து விறுவிறுப்பை ஏற்றிய லைக்கா & ஷங்கர்

கலவை விமர்சனங்களை காலி செய்யும் கமல்.; விநாடிகளை குறைத்து விறுவிறுப்பை ஏற்றிய லைக்கா & ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலவை விமர்சனங்களை காலி செய்யும் கமல்.; விநாடிகளை குறைத்து விறுவிறுப்பை ஏற்றிய லைக்கா & ஷங்கர்

ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியன் 2 என்ற அறிவிப்பு வெளியான போதே இதன் மீதான பரபரப்பு இந்திய ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது.

இந்தியன் 2 படமாகும் வேளையில் பல பிரச்சனைகளால் படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது.. இதனால் இந்தியன் 2 வெளிவராது என்ற பல தகவல்கள் வந்த நிலையில் அதனை அடித்து நொறுக்கும் வகையில் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆக இரண்டு பாகத்தையும் ஒரே நேரத்தில் படமாக்கி அறிவிப்பை வெளியிட்டார் இயக்குனர் ஷங்கர்.

ஷங்கரின் முயற்சிக்கு உறுதுணையாக கமல் மற்றும் லைக்கா இருவரும் கைகோர்த்து நிற்க அதன்படி கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி இந்தியன் 2 படம் ரிலீஸ் ஆனது.

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்த இந்தப் படமானது திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது.

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய அனிருத்தின் இசையில் படம் உருவாகி வெளியானது.

பிரபல நட்சத்திரங்கள் பிரம்மாண்டம மேக்கிங் செட் அமைப்பு என அனைத்தும் கவரும் வகையில் இருந்தாலும் இந்த படத்தின் நீளம் கலவையான விமர்சனங்களை கொண்டு வந்தது.

தற்போது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர் 12 நிமிடங்களை குறைத்து இந்தப் படத்தை திரையிட்டு வருகின்றனர்.

அதன்படி புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இது கமல் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மீண்டும் ஒரு வரவேற்பை கொடுத்துள்ளது..

Indian 2 movie scenes trimmed upto 12 mins

அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகும் கார்த்தி – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகும் கார்த்தி – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அர்ஜுன் தாசுக்கு ஜோடியாகும் கார்த்தி – சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்

*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’*

*அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்*

தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌

(கார்த்தி நடித்த விருமன் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் ஆகிய படங்களில் அதிதி நாயகியாக நடித்திருந்தார்.)

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரவாரமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Arjundass and Aditi pair in new project

More Articles
Follows