அஜித் – விஜய்சேதுபதி வரிசையில் தனுஷ்..!? காத்திருக்கும் ரசிகர்கள்.!

அஜித் – விஜய்சேதுபதி வரிசையில் தனுஷ்..!? காத்திருக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் – விஜய்சேதுபதி வரிசையில் தனுஷ்..!? காத்திருக்கும் ரசிகர்கள்.!

ஒரு திரைப்பட நடிகர் – நடிகை எத்தனை திரைப்படங்களில் நடித்தாலும் அவர்களின் படங்களில் முக்கியமாக 25 – 50 – 100 ஆகிய படங்களை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள்.

அதுவும் அந்த சம்பந்தப்பட்ட நடிகரின் 100வது படம் என்றால் எதிர்பார்ப்பு நிச்சயம் பெரிய அளவில் இருக்கும்.. ரஜினிகாந்த் நடித்த ராகவேந்திரா படம் அவருக்கு நூறாவது படம்.. ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை

அது போல கமல் நடித்த ராஜபார்வை அவரது நூறாவது படம்.. அதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை.. ஆனால் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் அவரது நூறாவது படமாக அமைந்தது. மேலும் விஜயகாந்துக்கு கேப்டன் என்ற பெயரையும் பெற்று தந்தது..

சத்யராஜ் நூறாவது படம் வில்லாதி வில்லன் பெரும் தோல்வியை சந்தித்தது அதுபோல பிரபு நடித்த ராஜகுமாரன் படமும் (நூறாவது படம்) பெரும் தோல்வியை சந்தித்தது..

இப்படியான சூழ்நிலையில் இன்றைய இளம் தலைமுறை நடிகர்களில் விஜய் & அஜித் ஆகியோரின் 50வது படங்களை குறித்து ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்ப்புடன் பார்த்துக் காத்து கொண்டிருக்கின்றனர்.

விஜய்யின் 50வது படமான சுறா படம் பெரிய வெற்றியை பெறவில்லை.. ஆனால் அஜித் நடித்த மங்காத்தா அவரது 50வது படம் பெரிய வெற்றியை பெற்றது.

அதுபோல விஜய் சேதுபதியின் சமீபத்திய படமான மகாராஜா படமும் அவருக்கு 50 வது படம் பெரும் வெற்றியை பெற்றது.

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் உருவாகி அவரது இயக்கத்தில் உருவான ‘ராயன்’ படம் ஜூலை 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Will Raayan hit like Mangatha and Maharaja

—-

ஒரு படம் எடுக்க ஒரு நாள் கூட ஆகல.; ‘மங்காத்தா – சூது கவ்வும்’ பாணியில் உருவான ‘பிதா’

ஒரு படம் எடுக்க ஒரு நாள் கூட ஆகல.; ‘மங்காத்தா – சூது கவ்வும்’ பாணியில் உருவான ‘பிதா’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு படம் எடுக்க ஒரு நாள் கூட ஆகல.; ‘மங்காத்தா – சூது கவ்வும்’ பாணியில் உருவான ‘பிதா’

23 மணி 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம் “பிதா

ஒரு திரைப்படத்தை நான்கு வருடங்கள் எடுத்தோம்.. 20 மாதங்கள் எடுத்தோம்.. ஐந்து மாதங்கள் எடுத்தோம்.. மூன்று மாதங்கள் எடுத்தோம் என பலரும் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கூட நிறைவு பெறாத நிலையில் 23 மணி நேரம் 23 நிமிடங்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.சுகன். அந்த படத்தின் பெயர் தான் ‘பிதா’.

(இதற்கு முன்பே 23 மணி நேரத்தில் கலைஞர் நகர் என்ற ஒரு படத்தையும் இவர் சுகனே எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.)

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை.

ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன்.

ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் எஸ்.சுகன்.

ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.

எஸ்.சுகன் விறுவிறுப்பாக மங்காத்தா, சூது கவ்வும் பாணியில் இயக்கியுள்ளார். வசனம் பாபா கென்னடி, ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ், எடிட்டர் ஸ்ரீவர்சன், கலை கே.பி.நந்து, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்,

தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ், ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ ஜெனீஷ், பிதா படத்தை ஜூலை 26’ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்..

Pitha movie shoot completed within 23 hours 23 mins

உலக நாயகனின் ‘இந்தியன் 2’ படத்திற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ரிவ்யூ

உலக நாயகனின் ‘இந்தியன் 2’ படத்திற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ரிவ்யூ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக நாயகனின் ‘இந்தியன் 2’ படத்திற்கு சூப்பர் ஸ்டார் கொடுத்த ரிவ்யூ

ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் ‘வேட்டையன்’ படத்தை முடித்து விட்டு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கம் ‘கூலி’ படத்தில் பிஸியாக நடித்து வருகிற ரஜினிகாந்த்.

இது ஒரு புறம் இருந்தாலும் மற்ற பொது நிகழ்ச்சிகளிலும் ரஜினிகாந்த் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடந்த அம்பானி மகன் திருமணத்தில் பங்கேற்று ரஜினிகாந்த் ஆட்டம் போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் கேரளாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார் ரஜினிகாந்த்.

சென்னை விமான நிலையத்தில் அவரை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்று செல்பி எடுத்தனர்.

பின்னர் நிருபர்களுக்கு ரஜினி பேட்டியளித்தார்.

அப்போது அவரிடம் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், “இந்தியன் 2 திரைப்படம் நன்றாக இருந்தது. நல்லா இருந்துச்சு” என்று கூறினார்.

மேலும் ‘கூலி’ படம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. ‘வேட்டையன்’ திரைப்பட பணிகள் நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது” எனவும் தெரிவித்தார் ரஜினிகாந்த்.

Rajinikanths review for KamalHaasans Indian 2

ஜூலையில் ‘இந்தியன் தாத்தா’ வந்தாரு.. ஆகஸ்டில் (ஹிந்தியை எதிர்க்க) ‘ரகு தாத்தா’ வர்றாரு

ஜூலையில் ‘இந்தியன் தாத்தா’ வந்தாரு.. ஆகஸ்டில் (ஹிந்தியை எதிர்க்க) ‘ரகு தாத்தா’ வர்றாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜூலையில் இந்தியன் தாத்தா வந்தாரு.. ஹிந்தியை எதிர்க்க ஆகஸ்ட் 15-ல் ‘ரகு தாத்தா’ வர்றாரு

*கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் இசை வெளியீடு

இந்திய திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான பாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரகு தாத்தா’ எனும் படத்தின் இசை வெளியிடப்பட்டது.‌

:தி ஃபேமிலி மேன்’, ‘ ஃபார்ஸி’ ஆகிய வெற்றி பெற்ற இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் ‘ரகு தாத்தா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி, தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

யாமினி யக்ஞமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காமெடி டிராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதன் போது நடிகை கீர்த்தி சுரேஷ், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இயக்குநர் சுமன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குநர் சுமன் குமார் பேசுகையில்…

”ரகு தாத்தா என்ற படத்தை இயக்குவேன் என்று எதிர்பார்க்கவில்லை.‌ என்னுடைய நண்பர்கள் கிங்ஸ்லி மற்றும் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி அவர்களுடன் நடைபெற்ற விவாதத்தின் போது..‌ ‘உறவினர் ஒருவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவாறே அவருடைய பதவி உயர்வுக்காக இந்தி தேர்வு ஒன்றினை எழுதினார்’ என்ற தகவலை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு என்னை கவர்ந்தது. மேலும் இப்படத்திற்கான கருவாகவும் உருவானது. ஆனால் இது திரைப்படமாக உருவானதற்கு என்னுடைய எழுத்துப் பணியில் உதவியாளர்களாக இருக்கும் ஆனந்த், மனோஜ்… ஆகியோர்களின் கடின உழைப்புதான் காரணம் இவர்களுடன் ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர்- இசையமைப்பாளர் – ஆடை வடிவமைப்பாளர் -ஒலி வடிவமைப்பாளர்- ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால்தான் சாத்தியமானது.‌

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், எம். எஸ். பாஸ்கர், ரவீந்திர விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அற்புதமான கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் கற்பனைத் திறன் மிகு இயக்குநரான விஜய் சுப்பிரமணியம்- தயாரிப்பாளரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.‌ அப்போது தயாரிப்பாளரிடம், ‘ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்கிறான்.

அந்தப் பெண் ஆணின் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால்.. அவனுக்கு இந்தி தெரிய வேண்டும் என நிபந்தனை விதிக்கிறாள்’ என மிக சுருக்கமாக ஒரு கதையை சொன்னேன். அது அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அந்த கதையை இயக்கவில்லை.‌ ஆனால் வேறொரு கதையை எழுதி, இயக்கியிருக்கிறேன்.‌

இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவரும் நானும் ஒரு வகையில் ‘லூசு’.

இந்த இரண்டு லூசும் சேர்ந்து பணியாற்றினால் என்ன மாதிரியான படைப்பு வரும் என்று கேள்வி எழும். அதற்கு விடை அளிக்கும் வகையில் இந்த படத்தின் பாடல்கள் இருக்கும். அனைத்து பாடல்களும் நன்றாகவே இருக்கிறது.

இந்த திரைப்படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை தான் நகைச்சுவையாக பேசுகிறது.” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில்…

” இயக்குநர் சுமன் குமார் கொரோனா தொற்று காலகட்டத்தில் அவருடைய ‘தி ஃபேமிலி மேன்’ இணைய தொடருக்கு என்னுடைய இசையில் வெளியான பாடல்களை பயன்படுத்துவது தொடர்பாக பேசத் தொடங்கினார்.

அந்த சந்திப்பு கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் வரை சென்றது. அவர் சொன்னது சரிதான். இரண்டு லூசுகள் சந்தித்தால் எப்படி இருக்கும்..? இயக்குநர் சுமன் பயங்கரமான லூசு. அவருடைய பேச்சு ஜாலியாக இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை முதன் முதலில் பின்னணி இசை இல்லாமல் பார்க்கும் போது.. ஒரு கே. பாக்யராஜ் படத்தை பார்த்தது போல் இருந்தது. ஒரு தீவிரமான அரசியலை அவர் நகைச்சுவையாகவும், மென்மையாகவும் காட்சிப்படுத்தி இருப்பார்.

அதே தருணத்தில் தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த ஜானர் என்றால்… அது டிராமா தான்.‌

மணிரத்னம்- கே. பாலசந்தர் – என பெரிய இயக்குநர்கள் அனைவரும் கதையை மையமாக வைத்து, தங்களது எண்ணத்தை திரைக்கதையாக்கி இருப்பார்கள். அந்த வகையில் இந்த படத்தின் ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திணிப்புகளில் பலவகையான திணிப்பு இருக்கிறது.‌ குறிப்பாக பெண்களுக்கு ஏராளமான திணிப்புகள் இருக்கிறது.

யார் மீதும் எதனையும் திணிக்க கூடாது என்பது தான் என்னுடைய தனிப்பட்ட கருத்து.‌ அடிப்படையாக நான் நேசிக்கும் விசயம் இப்படத்தில் இருப்பதால் இசையமைக்க கொண்டேன்.

உண்மையை சொல்லப்போனால்… இயக்குநர் சுமனுடன் பாடல்களை உருவாக்குவது எனக்கு எளிதாக இருந்தது. அவருக்கு இசை மீது நிறைய காதல் இருக்கிறது.

அவர் கிட்டார் எனும் இசைக்கருவியை வாசிக்கும் கலைஞரும் கூட. அவருக்கு இசை பற்றிய தெளிவான புரிதல் இருந்ததாலும் … படத்தின் கதை பீரியட் கால கட்டத்தை சேர்ந்தது என்பதாலும்.. புது வகையான ஒலிகளை பயன்படுத்தும் சுதந்திரத்தை கொடுத்தார்.

ஒரு கருத்தை சொன்னால் அது சீரியஸ் என்று அர்த்தம் அல்ல.‌ ஒரு கருத்தை மென்மையாகவும், நகைச்சுவையாகவும் சொல்ல முடியும்.‌ ஒரு கருத்தை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் செல்வது என்பது அழகானது. அதே தருணத்தில் கிண்டலும், நையாண்டியும் நம் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் இவை அனைத்தும் இருக்கிறது.

இந்தப் படத்தில் ராக் மியூசிக் இருக்கிறது. கானா மியூசிக் இருக்கிறது.‌ இந்த கால ரசிகர்களுக்கு பிரீயட்டிக்கான படத்தை தருவதால்.. அந்த காலகட்டத்தில் பயன்படுத்தாத புதிய புதிய இசைக்கருவிகளை பயன்படுத்தலாம். அதற்கான சுதந்திரம் எனக்கு இந்த படத்தில் கிடைத்தது. இதற்காக நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதை அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்தத் திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் நுட்பமான அரசியல் படம் வெளியான பிறகு அது தொடர்பான விவாதத்தை எழுப்பும் என்பது என்னுடைய நம்பிக்கை.

இந்த திரைப்படம் பத்து.. பதினைந்து.. ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், நல்லதொரு படைப்பை வழங்கி இருக்கிறோம் என்ற திருப்தியை ஏற்படுத்தும்.

ஐந்து பாடல்கள் இருக்கிறது. நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன்.‌ இயக்குநர் சுமன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். வசனகர்த்தா மனோஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.‌ நான் ஒரு பாடலை பாடியிருக்கிறேன்.‌ வித்தியாசமான குரலை பயன்படுத்தி இருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் கிட்டார் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றிருக்கிறது. இதற்காக என்னுடைய நண்பர் விக்ரம்- கிட்டார் வாசித்திருக்கிறார்.

ஊடகத்திற்கு எப்போதுமே ஒரு சக்தி உண்டு. நல்ல படைப்புகளை அடையாளம் கண்டு அதனை பாராட்டி வெற்றி பெறச் செய்வது. ரகு தாத்தா படத்திலும் அனைத்து அம்சங்களும் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், ” சந்தோஷமான தருணம் இது. ரகு தாத்தா ஆடியோ லாஞ்ச் இல்ல .. ரகு தாத்தா இசை வெளியீட்டு விழா.‌

இயக்குநர் சுமன் – அறிமுகமான நண்பர் விஜய்யுடன் வருகை தந்து, சந்தித்து கதையை சொன்னார். அவர் கதையை சொல்லிவிட்டு சிரித்து விடுவார்.‌ அதன் பிறகு என்னை பார்ப்பார்.

அதற்குப் பிறகுதான் நாங்கள் சிரிப்போம். அவர் என்னை பார்க்கும் போது..’காமெடி சொன்னால் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்களே..’ என தயக்கத்துடனே எங்களைப் பார்ப்பார். அதன் பிறகு தான் நாங்கள் சிரிப்போம்.‌ அதன் பிறகு தான் அவரிடம் கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நடிக்கிறேன் என சம்மதம் சொன்னேன். அவரிடம் உங்களுடைய அணுகுமுறை நன்றாக இருக்கிறது.

இதற்கு முன்னால் இப்படி ஒரு திரைக்கதையை நான் கேட்டதில்லை. அதனால் ‘ரகு தாத்தா’வில் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

அதே சமயம் எனக்குள் இந்த திரைப்படத்தை எப்படி ரசிகர்களை திரையரங்கத்திற்குள் இழுத்து வர முடியும்? என்ற தயக்கம் இருந்தது. அதனை இயக்குநரும், விஜயும் நம்பிக்கை அளித்து தயக்கத்தை உடைத்தனர். அவர்கள் கொடுத்த துணிச்சலுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுமன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் நான் நடித்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதிலும் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நான் நடித்திருக்கிறேன் எனும்போது இன்னும் பெருமிதம் கூடுகிறது.‌ இதற்காக தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் மற்றும் கார்த்திக் கௌடா ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நீண்ட நாள்களாக எப்போது வெளியாகும் என ஆவலுடன் காத்திருக்கும் ஆல்பம் ‘ரகு தாத்தா’. அனைவரும் இப்படத்தின் பாடல்களை கேட்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஷான் குறிப்பிட்டது போல் இந்த படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு ஜானரில் இருக்கும்.

இது போன்றதொரு ஆல்பத்தை வழங்கியதற்காக இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அருகே வா..’ என்ற பாடல் என்னுடைய ஃபேவரைட்.

ஒளிப்பதிவாளர் யாமினியுடன் ஏற்கனவே ‘சாணி காயிதம்’ எனும் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அது வேறு ஜானர். இந்தப் படத்தில் வண்ணமயமாக அழகாக காட்சி படுத்தியிருக்கிறார். அவருடைய பணி நேர்த்தியாக இருந்தது.‌ அதிலும் பெண் ஒளிப்பதிவாளருடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.

இந்த திரைப்படத்தில் தாத்தா கேரக்டரில் நடித்த எம். எஸ். பாஸ்கர்- படபிடிப்பு தளத்தில் என்னை ‘பொம்மை பொம்மை..’ என்று தான் அழைப்பார்.‌ படத்தில் வசனம் பேசும்போது அவருடைய டைமிங் சென்ஸ் அபாரமாக இருக்கும்.

படத்தில் தாத்தா- பேத்தி இடையான கெமிஸ்ட்ரியும் இருக்கிறது. அதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும். அவருடன் இணைந்து பணியாற்றியதும் மறக்க முடியாதது. மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரகு தாத்தா – ஒரு முழுமையான காமெடி டிராமா. இந்தப் படம் இந்தி திணிப்பை பற்றி பேசவில்லை. பெண்கள் மீதான திணிப்பை பற்றி தான் பேசுகிறது.‌ எந்த மாதிரியான திணிப்பு என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தில் சிறிய அளவில் கருத்து சொல்ல முயற்சித்திருக்கிறோம்.

ஆனால் அது பிரச்சாரமாக இருக்காது. இது படத்தை பார்க்கும் போது ரசிகர்களுக்கு புரியும்.

பொதுவாகவே திணிப்பை பற்றி பேசியிருக்கிறோம். அதில் கதையை தொடர்பு படுத்தும் வகையில் இந்தியை ஒரு உதாரணமாக சொல்லி இருக்கிறோம்.

இந்த படம் எந்த ஒரு அரசியலையோ எதிர்மறையான விசயங்களையோ சொல்லவில்லை. இது ஒரு நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு படம். படத்தை பார்க்க திரையரங்கத்திற்கு வருகை தருபவர்கள் படத்தை பார்த்து ஜாலியாக சிரித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பலாம். ” என்றார்…

Keerthys Raghu Thatha against Hindi language

கூட்டுக் குடும்ப சந்தோஷம் எங்கும் கிடைக்காது..; ‘வீராயி மக்கள்’ இயக்குனர் பேச்சு

கூட்டுக் குடும்ப சந்தோஷம் எங்கும் கிடைக்காது..; ‘வீராயி மக்கள்’ இயக்குனர் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கூட்டுக் குடும்ப சந்தோஷம் எங்கும் கிடைக்காது..; ‘வீராயி மக்கள்’ இயக்குனர் பேச்சு

*வீராயி மக்கள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’.

விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

நடிகை தீபா பேசியதாவது…

இந்தப் படத்தில் நான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னை தீபா என்று பார்க்காமல் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு பெண்ணாக இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். இந்தப் படம் ஒரு மன நிறைவான படமாக எனக்கு அமைந்தது, ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார்கள். கிராமத்தில் பேசும் வசனங்களை தத்ரூபமாக அப்படியே எழுதி எடுத்துள்ளார் இயக்குநர். இந்த படத்தில் என்னுடன் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் என்னுடன் ஒரு சொந்த உறவை போலவே பழகினார்கள். எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி.

இயக்குநர் கோகுல் பேசியதாவது…

இயக்குநர் நாகராஜை நீண்ட நாட்களாக எனக்குத் தெரியும், பல ஆண்டுகள் போராட்டத்துக்கு பிறகு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இது போன்ற மண் சார்ந்த படங்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். நாகரிகம் என்பது கிராமத்தில் தோன்றியது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை, வெகுளியான மக்களை நாம் அங்குதான் பார்க்க முடியும், இப்படி ஒரு கதையை படமாக்க நினைத்த என் நண்பனுக்கு வாழ்த்துக்கள். படம் நிச்சயமாக வெற்றி பெறும் நன்றி.

இயக்குநர் ராம் சங்கையா பேசியதாவது…

படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள், இந்தப் படத்தின் பெயரைப் பார்த்ததும் இது நம் மக்களின் கதை நம் மண்ணின் கதை என்ற உணர்வு வந்து விட்டது, தமிழ் சினிமாவின் அடையாளத்தை காண்பிப்பது இது போன்ற படங்கள் தான், இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

இந்தப் படம் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான படமாக இருக்கும் என நம்புகிறேன். இப்படி ஒரு படத்தை தேர்வு செய்ததற்கு தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.

நடிகர் வேல ராமமூர்த்தி பேசியதாவது…

இந்த மேடையில் எனக்கு மிகவும் பிடித்த எனக்கு நெருக்கமான இயக்குநர்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குள்ள அத்தனை நபருடனும் எனக்கு ஒரு நல்ல நட்பு உள்ளது, இவர்கள் எல்லோருமே என்னைப் போல மண்ணை நேசிக்கும் மனிதர்கள், இந்தப் படத்தில் நான் மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

உண்மையில் சொல்ல போனால் நான் நடிக்க வில்லை, எனக்கு அந்த கதாபாத்திரம் இயல்பாகவே பொருந்தி விட்டது. இந்தப் படத்தில் நடிக்கும்போது என் வீட்டில் இருப்பது போல ஒரு உணர்வு இருந்தது. என் அம்மாவைப் போல இந்த வீராயி என் கண் முன்னே தோன்றினார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதற்கு முக்கிய காரணம் இயக்குநர் நாகராஜ். இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே இப்படி ஒரு படத்தை உருவாக்க முடியும், ஒவ்வொரு காட்சியையும் ரசித்து உருவாக்கியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள், நிச்சயம் இந்தப் படத்திற்கு பிறகு அவருக்கு நீண்ட நல்ல எதிர்காலம் இருக்கிறது.

மேலும் தயாரிப்பாளர் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் பெரிய வெற்றியை ஈட்டுவார், இது போன்ற படங்களை மேலும் தயாரிக்கும் முயற்சியில் அவர் ஈடுபடுவார் என நம்புகிறேன். படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள் நன்றி.

ஒளிப்பதிவாளர் சீனிவாசன் பேசியதாவது..

இயக்குநர் நாகராஜ் அவர்களுக்கு நன்றி. எனக்கு இந்த வாய்ப்பை அவர்தான் கொடுத்தார். தயாரிப்பாளர் மிகவும் உதவிகரமாக இருந்தார், படப்பிடிப்பின் அனைத்து சூழலிலும் எங்களுக்கு பெரும் உந்து சக்தியாக இருந்தார். படத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களுக்கும் நன்றி. உங்களுடன் பணி புரிந்தது ஒரு புதிய அனுபவத்தை கொடுத்தது. படம் அனைவருக்கும் பிடிக்கும், அனைவருக்கும் வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் சுரேஷ் நந்தா பேசியதாவது…

இதுதான் எனக்கு முதல் மேடை, கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது. எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் நாகராஜிற்கு நன்றி. தயாரிப்பாளர் மற்றும் கதைநாயகன் என்பது பெரிய பொறுப்புதான் அதை சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன். எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி, இந்த படம் அனைவரையும் திருப்தி படுத்தும் என்று நம்புகிறேன். படத்தில் பணி புரிந்த அத்தனை நடிகர்களும் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

தமிழ் சினிமாவில் இது போன்ற சினிமா மிக மிக அவசியம். இது போன்ற படங்களை பார்ப்பது அரிதாகி விட்டது. இப்போது வரும் படங்கள் அதிகமாக உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அனைத்தும் வியாபாரம் ஆகி விட்டது, இந்தச் சூழலில் இப்படி ஒரு படத்தை தேர்வு செய்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பெரிய படங்கள் தான் மக்களுக்கு பிடிக்கும் என்பது இல்லை, அதை பல முறை மக்கள் பொய்யாக்கி விட்டனர். மக்கள் நல்ல படத்திற்கு கண்டிப்பாக ஆதரவு கொடுப்பார்கள். மக்களுக்கு தேவையான படம் இது, மக்களும் இதை புரிந்து கொண்டு, இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும். இந்தப் படத்தை நாம் அனைவரும் கொண்டாட வேண்டும். இதன் வெற்றி விழாவில் சந்திப்போம் நன்றி.

நடிகர் ரவி மரியா பேசியதாவது…

இந்தப் படத்தில் ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும், பல இயக்குநர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளோம். குடும்பத்துடன் பார்க்கும் படங்களின் வரிசையில் இந்தப் படம் முதலில் இருக்கும்.

பல குடும்பங்களை இந்தப் படம் இணைக்க போகிறது என்பது உறுதி. இந்தப் படம் இயக்குநரின் ஒரு 25 வருட போராட்டம், பல வலிகளை சுமந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். கண்டிப்பாக அவரது உழைப்பு வீண் போகாது. இந்தப் படம் மக்கள் மனதைக் கண்டிப்பாக கவரும். படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் நாகராஜ் பேசியதாவது…

எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி, உங்கள் மத்தியில் எங்களது படைப்பை அறிமுகப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க நான் வாழ்ந்து பார்த்த அன்பு, கோவம், வாழ்க்கை, வாழ்வியல், இந்தப் படம் எனக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு முதல் படம் முடித்த பிறகு 7 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் என் நண்பர்கள் தான் என்னை நகர்த்தி சென்றனர். அவர்களில் சிலர் இங்கு வந்துள்ளனர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் சுசீந்திரன் சாருக்கும் நன்றி அவருடன் பணி புரிந்தது ஒரு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்தது.

இந்தப் படத்தை நான் எழுதி முடித்ததும், நான் முதன் முதலாக தேர்வு செய்தது வேல ராமமூர்த்தி அய்யா தான், அவர்தான் வேண்டுமென்று நினைத்தேன், அவரும் ஒப்புக் கொண்டார்.

இந்தப்படத்தில் அவரது நடிப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கும், கண்டிப்பாக உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும். ஒவ்வொரு கதாபாத்திரமும் மண் மனம் மாறாத கதாபாத்திரமாக இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

அதே போல அனைத்தும் அமைந்தது விட்டது. இந்தச் சூழலில் நான் மாரிமுத்து சாரை நினைத்துப் பார்க்கிறேன், அவரது முயற்சி இந்த படத்திற்கு பெரிய உதவியாக இருந்தது. இந்தப் படம் ஒரு கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் நடக்கும் சந்தோசத்தை போல, வேறு எந்த வீட்டிலும் இருக்காது.

எத்தனை முரண்கள் இருந்தாலும் ஒருவர் ஒருவரை அரவணைத்து கொள்வது ஒரு அழகு. இப்படி பட்ட அழகான காட்சிகள் பல இந்தப் படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும். இந்தப் படம் நிச்சயமாக உங்கள் ஆள் மனதை தொடும் என்று நம்புகிறேன். என்னுடன் பணி புரிந்த அனைவருக்கும் நன்றி.

இப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, தீபா ஷங்கர், சுரேஷ் நந்தா, நந்தனா, ரமா, செந்தி குமாரி, பாண்டி அக்கா, ஜெரால்ட் மில்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கியுள்ளார். எம். சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்திருக்கிறார்..

Joint family happiness story line of Veerayi Makkal

முதன்முறையாக OVO Arena Wembley-ல் வெளியாகும் ‘கடைசி உலகப்போர்’ போஸ்டர்

முதன்முறையாக OVO Arena Wembley-ல் வெளியாகும் ‘கடைசி உலகப்போர்’ போஸ்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முதன்முறையாக OVO Arena Wembley-ல் வெளியாகும் ‘கடைசி உலகப்போர்’ போஸ்டர்

லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley இல், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் *கடைசி உலகப்போர்* ஃபர்ஸ்ட் லுக் !!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் லண்டன் இசைக்கச்சேரியில் வெளியிடப்பட்ட *கடைசி உலகப்போர்* க்ளிம்ப்ஸே வீடியோ !!

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வீடியோ, லண்டனில் புகழ்மிகு OVO Arena Wembley இல், ஹிப் ஹாப் தமிழா இசைக் கச்சேரியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.

OVO Arena Wembley இல், ஒரு தமிழ்ப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸே வெளியாவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ராப் பாடகராக அறிமுகாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

மீசைய முறுக்கு, சிவக்குமாரின் சபதம் படங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார்ஹிப் ஹாப் ஆதி.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் முகத்துக்குப் பின் பீரங்கி, விமானம், சிதிலமடைந்த போர்க்களம் என படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக, அமைந்துள்ளது.

முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் போரின் பின்னணியில், மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசும் படைப்பாக இப்படம் இருக்குமெனத் தெரிகிறது. மிக வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா ஷரா RA,FJ,குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: ஹிப் ஹாப் ஆதி
தயாரிப்பாளர்: ஹிப் ஹாப் ஆதி
ஒளிப்பதிவு : அர்ஜுன்ராஜா
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் ஆதி
எடிட்டர்: பிரதீப் E ராகவ்
கலை இயக்குநர் : R.K நாகு
சண்டை பயிற்சி : மகேஷ் மேத்யூ
பாடலாசிரியர் : ஹிப்ஹாப் தமிழா, விக்னேஷ் ஸ்ரீகாந்த், FOTTY SEVEN, சிவவாக்கியார்
ஒலி வடிவமைப்பாளர் : ராகவ் ரமேஷ், ஹரி பிரசாத் M A
VFX : 85FX
ஆடை வடிவமைப்பாளர் : கீர்த்தி வாசன்
தயாரிப்பு மேற்பார்வை : C. ஹரி வெங்கட்
நிர்வாக மேலாளர் : T.N. கோகுல்நாத், S. பார்த்திபன்
நிர்வாக தயாரிப்பாளர் : வாசுதேவன்

Glimpse of Kadaisi Ulaga Por goes viral

More Articles
Follows