தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
டிஜிட்டல் கட்டணம் என்று சொல்லப்படும் வி.பி.எஃப். கட்டணத்தை திரையரங்க உரிமையாளர்களே கட்ட வேண்டும் என்று சொல்லி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
ஆனால், ‘நாங்கள் அந்தக் கட்டணத்தைக் கண்டிப்பாகக் கட்ட மாட்டோம்’ என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து திரையரங்க உரிமையாளர்களுக்காக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்…
“நாம் ஒரு சிக்கலான சூழ்நிலையில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். இதை நாம் வெற்றிகரமாகக் கடக்க வேண்டும். அதற்கு நமது மன உறுதிதான் மிகவும் அவசியம்.
இரண்டு தினங்களுக்கு முன் நாம் தயாரிப்பாளர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை, மிகவும் வெற்றிகரமாகத் தோல்வியடைந்தது. நமது கோரிக்கைகளை அவர்கள் ஏற்பதாக இல்லை. அவர்கள் கோரிக்கையையும் நாம் ஏற்பதாக இல்லை.
இந்தப் பிரச்சினை எப்போது முடியுமென்று தெரியவில்லை. ஆனால், நம் முடிவில் இருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்குவதில்லை என்ற தெளிவான முடிவில் நமது சங்கமும் உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். வெற்றி நம் பக்கம்தான்.
கண்டிப்பாக வி.பி.எஃப். சார்ஜை நாம் கட்டமாட்டோம். அதில், நாம் உறுதியாக இருக்கின்றோம்.
இந்த உறுதியை நீங்களும் உங்கள் மனதில் ஏற்றுக்கொண்டு செயல்படும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார் பன்னீர் செல்வம்.
Who will pay the Digital VPF charges Tamil Cinema Strike continues