தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொதுவாக தமிழகத்தை பின்பற்றியே புதுச்சேரி மாநிலத்தில் அரசு நடவடிக்கைகள் சில இருக்கும்.
தமிழ்நாடு பாடநூல் திட்டத்தை பின்பற்றியே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகள் செயல்படுகிறது. பொதுத்தேர்வு முறைகளும் அப்படியே உள்ளன.
இங்கும் தமிழே வழக்கு மொழியாக உள்ளதால் தமிழ் படங்கள் ரிலீசும் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ரிலீசாகி வருகின்றன.
இதனிடையில் தான் புதுச்சேரி & காரைக்காலில் சினிமா தியேட்டர்கள் ஆகஸ்ட் 1 முதல் திறக்க அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 15 வரை வரை தியேட்டர்கள் திறக்க அனுமதியில்லை.
இதனால் கல்வி நிலையங்கள் திறப்பது மாறுபடுமோ.? என்ற சந்தேகம் புதுச்சேரி காரைக்கால் மக்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது…
“கொரோனா மூன்றாவது அலை எப்போது உறுதியாகும் என தெரியவில்லை.
இன்று மூன்று குழந்தைகள் கொரோனா தொற்று பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட அறிவுறுத்தப்படுள்ளது.
கல்லூரிகள் மாணவர்கள் தடுப்பூசி போடப்பட்ட பின்பு கல்லூரிகள் திறக்க முடிவு.
கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15க்கு பிறகு ஆளுநர் மற்றும் முதலமைச்சரை ஆலோசித்து முடிவு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.” என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
When will schools reopen in Pondicherry ?