சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ வசூல் குறித்து வெளிவந்த தகவல்

சிரஞ்சீவியின் ‘வால்டேர் வீரய்யா’ வசூல் குறித்து வெளிவந்த தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“மெகாஸ்டார் சிரஞ்சீவியின் அதிரடி நடிப்பில் வெளியான வால்டேர் வீரய்யா 200 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் Mythri Movie Makers சமீபத்தில் ட்வீட் செய்து, சிரஞ்சீவியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த மொத்த வசூலில் பாதிக்கும் மேலானது முதல் மூன்று நாட்களில் இருந்து வந்தது. சங்கராந்தி மற்றும் படத்தின் கதை இதை சாத்தியமாக்கியது . பாபி கொல்லி இயக்கிய இப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் ரூ.108 கோடி வசூலித்தது.

இந்நிலையில், சிருவின் அடுத்த படமான ‘போலா ஷங்கர்’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது.

‘Waltair Veerayya’ grosses Rs 200 Cr successfully!

எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்ட விஷால்.; இதான் விஷயமா?

எம்ஜிஆர் உருவத்தை நெஞ்சில் பச்சை குத்திக் கொண்ட விஷால்.; இதான் விஷயமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் இதயக்கனி என பல பெயர்களால் அழைக்கப்படுபவர் எம் ஜி ராமச்சந்திரன்.

நடிகராக இருந்தபோதே தமிழக மக்களை தன் வசம் கவர்ந்த எம்ஜிஆர் பின்னர் மக்களின் ஆதரவுடன் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார்.

அவர் இருந்த வரையில் அவரே ஆட்சி பொறுப்பில் இருந்தார். அவர் மறைந்து தற்போது 35 ஆண்டுகள் ஆன நிலையிலும் தற்போது வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

மக்கள் திலகம் எம்ஜிஆரை கடவுளாக நினைத்து வணங்கும் தமிழக மக்களை இன்றளவும் கிராமங்களில் பார்க்கலாம்.

ஏழை மக்கள் பலர் எம்ஜிஆரின் உருவத்தை தங்கள் கைகளிலும் தங்கள் இதயங்களிலும் பச்சை குத்திக் கொள்வர்.

இந்த நிலையில் எம்ஜிஆரின் உருவத்தை தன் நெஞ்சில் பச்சை குத்தி கொண்டு உள்ளார் நடிகர் விஷால்.

இந்த படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தற்போது ஆதி ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

எனவே இது அந்த படத்திற்கான விஷாலின் கெட்டப் என எதிர்பார்க்கலாம்.

*புரட்சி தலைவர் எம். ஜி.ஆர் படத்தை தன் நெஞ்சில் பச்சைகுத்தி இருக்கும் நடிகர் விஷால்* #Vishal @VishalKOfficial @HariKr_official @VffVishal @johnsoncinepro @ajay_64403 @UrsVamsiShekar #MGR

Actor Vishal gets a tattoo of Legendary Leader MGR on his chest

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஷங்கர் & அதிதி குடும்பம்

திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஷங்கர் & அதிதி குடும்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது இயக்குனர் ஷங்கர் தான்.

ரஜினி கமல் விஜய் விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் பணிபுரிந்துள்ளார்.

இவரது படங்களில் கமர்சியல் கலந்து சமூக கருத்துக்கள் இருப்பதால் எப்போதும் ஷங்கரின் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

தற்போது இவரது 2வது மகள் அதிதி ஷங்கரும் நடிகையாகிவிட்டார்.

கார்த்தியுடன் ‘விருமன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அப்பா & மகள் தங்கள் குடும்பத்துடன் இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதிக்கு சென்ற ஷங்கருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட்டது.

ஏழுமலையான் தரிசனம் முடிந்து வெளியே வந்த ஷங்கர் & அதிதியுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Shankar and Aditi family visiting Tirupati temple

BREAKING பிரபல இயக்குநர் எழுத்தாளர் நடிகர் ஈ.ராமதாஸ் காலமானார்

BREAKING பிரபல இயக்குநர் எழுத்தாளர் நடிகர் ஈ.ராமதாஸ் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் – எழுத்தாளர் மற்றும் நடிகர் ஈ.ராம்தாஸ்.. என பன்முகத் திறமை கொண்டவர் இவர்..

ஈ ராமதாஸ் நான்கு படங்களை இயக்கியுள்ளார். ஆயிரம் பூக்கள் மலரட்டும், ராஜா ராஜாதான், ராவணன், வாழ்க ஜனநாயகம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

கமலின் “வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்” (2004) படத்தில் வார்டு பாயாக நடித்ததைத் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார்.

மேலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். நிறைய படங்களில் அப்பாவி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘காக்கி சட்டை’ படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார்.

அதைத் தொடர்ந்து “விசாரணை”(2016), “தர்மதுரை” (2016), “விக்ரம் வேதா” (2017) ஆகிய படங்களில் நடித்தார்.

தனது முதல் திரைக்கதை பணியாக பி. எஸ். நிவாஸ் இயக்க சுமன், சுமலதா ஆகியோர் நடித்த “எனக்காக காத்திரு”(1981) படத்திற்காக எழுதினார். நிவாசுடன் பணிபுரிந்த பிறகு, இராமதாஸ் ஆறு படங்களில் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். பின்னர் மதர்லேண்ட் பிக்சர்சின் கோவைத்தம்பியிடம் பணிபுரிந்தார்.

பெரும்பாலும் எழுத்தாளராக மற்ற திரைப்பட இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்தார், “மக்கள் ஆட்சி” (1995), “சங்கம் “, “கண்ட நாள் முதல்” (2005) உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.

இந்த நிலையில் சில மணி நேரங்களுக்கு முன் MGM மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் ராமதாஸ். இந்த தகவலை அவரது மகன் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவரது இறுதிச் சடங்கு ஜனவர் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை கேகே நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இவரின் மனைவி பெயர் திலகவதி. இவர்களின் மகன் இராம பாண்டியனுக்கு கடந்த 2019 பிப்ரவரியில் திருமணம் நடந்தது.

Actor Director E Ramadoss passed away

ரஜினி பட வில்லன் நடிகரின் மகளை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

ரஜினி பட வில்லன் நடிகரின் மகளை மணந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுல் மற்றும் நடிகை அதியா ஷெட்டி ஆகியோரின் திருமணம் இன்று ஜனவரி 23ல் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும்.

இவர்களது திருமணம் மகாராஷ்டிராவில் பிரபல பண்ணை வீடு ஒன்றில் நடைபெற்றுள்ளது.

ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. இவரது மகள் அதியாவும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த புதுமண தம்பதியருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கூடுதல் தகவல்…

தற்போது நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டி ஒருநாள் தொடரில் ராகுலுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. எனவே அந்த இடைவெளியில் தனது திருமணத்தை ராகுல் நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த திருமண நிகழ வில் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி ஜோடியின் உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

திருமண வரவேற்பு நிகழ்வு சில தினங்களுக்கு பின்னர் ஒரு நாள் விமரிசையாக நடத்தப்படும் என தகவல்.

Indian cricketer KL Rahul married the daughter of Rajinikanth’s villain actor

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாரூக்கான் படம்.; தமிழக ரசிகர்கள் கொண்டாட்டம்

4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாரூக்கான் படம்.; தமிழக ரசிகர்கள் கொண்டாட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பதான்’ படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக்கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன.

ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் பிரம்மாண்ட மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘பதான்’ .

இப்படத்தின் ட்ரைலர் மற்றும் அதனை தொடர்ந்து வெளியான பேஷரம் ரங் , ‘ஜூம் ஜோ பதான்’ ஆகிய இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட்டாக மாறி இணையத்தில் கலக்கத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்தியது.

4 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஷாரூக் கான் திரைப்படம் திரையரங்குகளுக்குத் திரும்பியதைக் கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டின் உட்லேண்ட்ஸ் தியேட்டருக்கு வெளியே ஷாரூக்கான் ரசிகர்கள் மாபெரும் கட்அவுட் ஒன்றை வைத்து கொண்டாடுகின்றனர் .

ஏற்கனவே இப்படம் டிக்கெட் முன்பதிவில் பிரம்மாஸ்திரத்தை முந்திவிட்டது. ரிலீஸுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், விடுமுறை அல்லாத ஒரு நாள் வசூல் சாதனையில் புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Celebrations begin in TN to mark SRKs return to cinemas after 4 years with Pathaan

பதான் ரிலீஸ் ஷாரூக்கான் ரசிகர்கள் குஷி Celebrations begin in Tamilnadu l Pathaan Release Sharukhkhan l filmistreet l ??? https://youtube.com/shorts/t4yDcOi-R-A?feature=share

More Articles
Follows