தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’.
இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் இணையத்தில் வெளியானது.
இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு காமெடி காட்சியும் இருக்கிறது.
இதனையடுத்து இந்த காட்சியை பார்த்த தமிழர்கள் காட்சியை நீக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
துல்கரும் மன்னிப்பு கேட்டு நீண்ண்ணட விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் ‘ஓகே கண்மணி’ படத்தில் துல்கருடன் நடித்த விஜே ரம்யா தனது ட்விட்டர் பதிவில், “துல்கருக்கு நம் மீது பெரிய மரியாதையும், தான் சென்னைவாசி என்ற பிணைப்பும் உள்ளது.
அவரைப் பல நாட்களாகத் தெரியும் என்பதால் என்னால் இதை சொல்ல முடியும்.
நாம் மென்மையானவர்கள். அப்படியே புரிந்துகொள்ள வேண்டியதில்லை. தயவுசெய்து தேவையில்லாத வெறுப்பை பரப்புவதை நிறுத்துங்கள்” என பதிவிட்டுள்ளார்.
VJ Ramya supports Dulquer in Dog name Prabakar issue