ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆப்பு வைக்க வரும் ‘விழித்தெழு’

ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆப்பு வைக்க வரும் ‘விழித்தெழு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விழித்தெழு’.

இப்படத்தை தமிழ்ச் செல்வன் இயக்கியிருக்கிறார்.

ஆன்லைன் சூதாட்ட மோசடி மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

இதில் நாயகனாக முருகா அசோக், நாயகியாக காயத்ரி ரெமோ நடித்துள்ளனர்.

மேலும் பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

விழித்தெழு படத்தின் இசையமைப்பாளராக நல்லதம்பியும், படத்தொகுப்பாளராக எஸ்.ஆர்.முத்துக்குமார் பணியாற்றியுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன் ‘விழித்தெழு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நக்கீரன் ஆசிரியர் மற்றும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரும் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.

இப்படம் அடுத்த மார்ச் மாதம்3ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Vizhithezhu based on online gambling and social awareness

விஜய் அம்மாவுக்கு கேக் ஊட்டி 11 Years of SKism கொண்டாடிய சிவகார்த்திகேயன்

விஜய் அம்மாவுக்கு கேக் ஊட்டி 11 Years of SKism கொண்டாடிய சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று காமெடியனாக வலம் வந்தவர் சிவகார்த்திகேயன்.

ஒரு கட்டத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக மாறி பிரபலம் அடைந்தார். இவரது காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவான நிலையில் ‘மெரினா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகனாக மாறினார் சிவகார்த்திகேயன்.

பின்னர் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அதன்பின்னர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எதிர்நீச்சல் காக்கி சட்டை மான் கராத்தே உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்து நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

ஒரு கட்டத்தில் பாடலாசிரியர் பாடகர் தயாரிப்பாளர் என பல பரிணாமங்களை எடுத்து தற்போது தமிழ் சினிமாவின் டாப் 10 நட்சத்திரங்களில் ஒருவராக மாறி நிற்கிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு வந்து 11 வருடங்களை நிறைவு செய்து நிலையில் இதனை கொண்டாடியுள்ளார்.

மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படப்பிடிப்புல் படக்குழுவினருடன் கொண்டாடி இருக்கிறார்.

இந்த கொண்டாட்டத்தில் நடிகை சரிதாவும் அருகில் நிற்க அவருக்கு கேக் ஒட்டி மகிழ்ந்தார் சிவகார்த்திகேயன்.

1980-களில் பல படங்களில் நாயகியாக நடித்தவர் சரிதா. இவரின் தைரியமான கேரக்டருக்காகவே பல படங்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

விஜய் சூர்யா இணைந்து நடித்த ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்தவர் சரிதா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sivakarthikeyan celebrated 11 Years of SKism with Vijay’s mother

வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது.; போலீசார் வழக்கு பதிவு

வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது.; போலீசார் வழக்கு பதிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம் இன்று பிப்ரவரி 4ஆம் தேதி காலமானார்.

அவர் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி பாடகியான வாணி ஜெயராம் கணவர் இறப்பிற்கு பின்னர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு 78 வயதாகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இவருடைய வீட்டு வேலைக்காக மலர்கொடி என்பவர் பணிபுரிந்து பணிபுரிந்து வந்துள்ளார்.

இன்று காலை வழக்கம் போல் வீட்டு வேலை செய்வதற்காக வந்த மலர்கொடி வீட்டின் கதவை பலமுறை தட்டியும் திறக்காததால், போன் செய்து பார்த்துள்ளார்.

பின்னர் நுங்கம்பாக்கத்தில் உள்ள வாணி ஜெயராமின் சகோதரருக்கு போன் செய்து இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

உடனே வாணி ஜெயராம் வீட்டிற்கு வந்த அவருடைய சகோதரர், அவரிடம் இருந்த மற்றொரு சாவியின் மூலம் வீட்டின் கதவை திறக்க வாணி ஜெயராம் தன்னுடைய அறையில் தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.

பின்னர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து ஆயிரம் விளக்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றியதோடு மட்டும் மின்றி, இந்திய தண்டனை சட்டம் 174 இன் படி இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேத பரிசோதனையில்… உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பிறகே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Suspect in Singer Vani Jayaram death Police filed Case

சூட்டிங் அப்டேட் : பாரீன் பறக்கும் ‘இந்தியன் 2’ டீம்..

சூட்டிங் அப்டேட் : பாரீன் பறக்கும் ‘இந்தியன் 2’ டீம்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவருகிறார்.

இப்படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கமல்ஹாசன் தற்போது காந்திகோட்டாவில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது மற்றும் படப்பிடிப்பு சென்னை, திருப்பதி மற்றும் காந்திகோட்டாவில் நடந்தது.

இந்நிலையில், கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் அடுத்த கட்ட படப்பிடிப்புகாக தென்னாப்பிரிக்கா செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்வதற்கான விசா நடைமுறைகள் முடிந்ததும் படப்பிடிப்பு தேதிகள் முடிவாகும் என கூறப்பட்டுள்ளது.

Indian 2 next shoot schedule in South Africa

நடிகர் அருண் விஜய்க்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

நடிகர் அருண் விஜய்க்கு ஐக்கிய அரபின் ‘கோல்டன் விசா’..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் இயக்குனர் விஜய்க்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘கோல்டன் விசா’ வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடிகர் அருண் விஜய்க்கு ‘கோல்டன்’ விசாவை வழங்கியுள்ளது.

கோல்டன் விசா என்பது ஒரு நீண்ட கால வசிப்பிடமாகும், இது வெளிநாட்டினர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தேசிய ஸ்பான்சர் தேவையின்றி வாழவும் வேலை செய்யவும் அனுமதிக்கிறது மற்றும் அவர்களின் வணிகத்தின் முழு உரிமையையும் வழங்குகிறது.

கோல்டன் விசாவைப் பெற்ற படங்களை தனது ட்விட்டர் பகிர்ந்து கொண்ட அருண் விஜய், “இந்த கௌரவத்திற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசுக்கு நன்றி” என கூறி இருந்தார்.

மேலும், பார்த்தீபன், நாசர், ரஹ்மான்,வெங்கட் பிரபு, கமல்ஹாசன், அமலா பால், த்ரிஷா, ராய் லட்சுமி, விக்ரம் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரும் கோல்டன் விசாவைப் பெற்றுள்ளனர்.

Actor Arun Vijay has got Golden Visa from United Arab Emirates

ரசிகருக்கு முதல் சுயமரியாதை திருமணம் செய்து வைத்த விஜய்சேதுபதி

ரசிகருக்கு முதல் சுயமரியாதை திருமணம் செய்து வைத்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் J . குமரன் சாதி மதம் கடந்து சுயமரியாதை செய்துள்ளார்.

இத்திருமணம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முன்னிலையில் இன்று பிப்ரவரி 3 காலை சென்னையில் நடைபெற்றது.

உலகில் சாதி மதம் கடந்து மனிதர்களை நேசிப்போம். அன்பை பரப்புவோம் இதை ரசிகர்களிடத்தில் பரப்பி, அன்புக்கு வடிவமாக அனைவராலும் விரும்பப்படும் விஜய் சேதுபதி ரசிகர்மன்றத்தின் பொதுச்செயலாளர் J குமரன், சாதி மதம் கடந்த, சடங்குகளற்ற முறையில் அன்பால் இணையும் விதமாக, சுயமரியாதை மணம் புரிந்துள்ளார்.

J குமரன் அவர்கள் விஜய் சேதுபதி ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அன்பால் இணையும் விதமாக தன் வாழ்வின் இணையை, சுயமரியாதை திருமண முறையில் திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுற்றம் சூழ, நண்பர்கள் கலந்துகொள்ள, விஜய் சேதுபதி முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மணமக்களை ஆசிர்வதித்து வாழ்த்தினார்.

Makkal Selvan @VijaySethuOffl graced the occasion of his fans club General Secretary @kumaran_VSP self respect wedding and blessed the newlywed To make it more special and memorable wedding was held at his shooting spot

@vsp_productions @MakkalSelvanFC
@pro_barani @thiruupdates

Vijay Sethupathi attends fan marriage with family

More Articles
Follows