தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘விழித்தெழு’.
இப்படத்தை தமிழ்ச் செல்வன் இயக்கியிருக்கிறார்.
ஆன்லைன் சூதாட்ட மோசடி மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
இதில் நாயகனாக முருகா அசோக், நாயகியாக காயத்ரி ரெமோ நடித்துள்ளனர்.
மேலும் பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
விழித்தெழு படத்தின் இசையமைப்பாளராக நல்லதம்பியும், படத்தொகுப்பாளராக எஸ்.ஆர்.முத்துக்குமார் பணியாற்றியுள்ளனர்.
சில வாரங்களுக்கு முன் ‘விழித்தெழு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நக்கீரன் ஆசிரியர் மற்றும் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகிய இருவரும் வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்து இருந்தனர்.
இப்படம் அடுத்த மார்ச் மாதம்3ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Vizhithezhu based on online gambling and social awareness