விஜய்-மகேஷ் பாபு சேலஞ்ச் : கம்பேர் செய்ய வேண்டாம்..; – விவேக்

விஜய்-மகேஷ் பாபு சேலஞ்ச் : கம்பேர் செய்ய வேண்டாம்..; – விவேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay mahesh babuஓரிரு தினங்களுக்கு முன் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது வீட்டில் மரக்கன்றை நட்டார்.

அத்துடன் கிரீன் இந்தியா சேலஞ்சை அவர் நடிகர் விஜய், ஸ்ருதி ஆகியோருக்கு சவால் விடுத்தார்.

இந்த சேலஞ்சை ஏற்று கொண்ட விஜய் தனது வீட்டின் தோட்டத்தில் தானே மண்வெட்டி குழி தோண்டி செடி நட்டார். இந்த படங்கள் வைரலானது.

தற்போது நடிகை ஸ்ருதிஹாசனும் இந்த சவாலை ஏற்று மரக்கன்றை நட்டுள்ளார்.

அவர் ராணா, ஹிருத்திக், தமன்னா ஆகியோருக்கு சவால் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் விஜய் மகேஷ் பாபு குறித்து விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:…

விஜய் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவருக்குமே மில்லியன் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இயற்கைக்கு நல்லது செய்யும்போது ரசிகர்களும் அவர்களால் தூண்டப்பட்டு நல்லது செய்வார்கள்.

இதை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் தயவு செய்து ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட வேண்டாம்.

நமது நோக்கம் ஒரு பசுமையான பூமியை உருவாக்க வேண்டும் என்பதுதான்’ என விவேக் அதில் பதிவிட்டுள்ளார்.

‘QUIT PANNUDA’… சுதந்திர தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு ‘மாஸ்’டர் ஸ்பெஷல்

‘QUIT PANNUDA’… சுதந்திர தினத்தில் விஜய் ரசிகர்களுக்கு ‘மாஸ்’டர் ஸ்பெஷல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master quit pannuda songஇந்திய சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக இந்த விடுமுறை நாளில் ஏதாவது புதிய படங்கள் வெளியாகும்.

ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் எந்த படமும் கடந்த 5 மாதங்களாக வெளியாகவில்லை.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட் கொடுக்கவுள்ளது மாஸ்டர் படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் ‘Quit Pannuda என்றொரு பாடல் உள்ளது-

அந்த பாடலை சுதந்திர தினத்தில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

கைதி-2 வேலைகளில் ‘மாஸ்டர்’ டைரக்டர் பிஸி.; கமல்-ரஜினி படம் ட்ராப்.?

கைதி-2 வேலைகளில் ‘மாஸ்டர்’ டைரக்டர் பிஸி.; கமல்-ரஜினி படம் ட்ராப்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaithi 2மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ்.

இந்த படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே நடிகர் விஜய்க்கு கதை சொன்னார் லோகேஷ்.

அந்த கதை விஜய்க்கு பிடித்துபோகவே மாஸ்டர் படம் உருவானது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

கொரோனா பிரச்சினையால் பட வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கவுள்ள படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வந்தன.

ஆனால் கொரோனா பிரச்சினைக்கு பிறகு இந்தியன்2 பட சூட்டிங்கில் கமலும், அண்ணாத்த பட சூட்டிங்கில் ரஜினியும் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

எனவே அவர்களுக்காக காத்திருக்காமல் கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை குறைந்த நாட்களில் எடுக்கவிருக்கிறாராம் லோகேஷ்.

முதன்முறையாக சிம்பு & ஸ்ருதிஹாசன் ஜோடியை இணைக்கும் மிஷ்கின்.?

முதன்முறையாக சிம்பு & ஸ்ருதிஹாசன் ஜோடியை இணைக்கும் மிஷ்கின்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu shruti haasanஉதயநிதி நடித்த ‘சைக்கோ’ படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார் முஷ்கின.

லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், பட நாயகன் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனையால் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார்.

மீதிப்படத்தை விஷாலே தயாரித்து நடித்து இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் சிம்பு நடிக்கவுள்ள படத்தை மிஷ்கின் இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

கொரோனா நோயாளிகளை ஒதுக்க கூடாது.; ரோபோ சங்கர் புதிய முயற்சி

கொரோனா நோயாளிகளை ஒதுக்க கூடாது.; ரோபோ சங்கர் புதிய முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

robo shankarபட்டுக்கோட்டை பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அங்குள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களின் மன அழுத்தத்தை போக்க நடிகர் ரோபோ சங்கர் & திண்டுக்கல் செந்தில் ஆகியோர் தங்கள் பட்டுக்கோட்டைக்கு சென்றுள்ளனர்,

மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் கொரோனா நோயாளிகள் முன்பு மிமிக்ரி செய்து உள்ளனர்.

கொரோனா நோய் தொற்றாளர்களை தனிமைப்படுத்த வேண்டுமே தவிர அவர்களை ஒதுக்கி வைக்கக்கூடாது என ரோபோ சங்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.

’தெளலத்’ படத்தில் எனக்கே தெரியாமல் நானா.? யோகிபாபுக்கு ஷாக் கொடுத்த படக்குழு

’தெளலத்’ படத்தில் எனக்கே தெரியாமல் நானா.? யோகிபாபுக்கு ஷாக் கொடுத்த படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yogi babuசக்தி சிவன் என்பவர் இயக்கி நடித்துள்ள படம் ‘தௌலத்’.

இதில் ராஷ்மி கவுதம், ஜெயபாலன், அஜய் பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான இப்பட போஸ்டரில் நடிகர் யோகி பாபு மட்டுமே இருந்தார்.

இது நடிகர் யோகி பாபுவுக்கே அதிர்ச்சியாக உள்ளதாம்.

இதனையடுத்து யோகி பாபு தன் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “தௌலத் பட போஸ்டர் விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ’தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என பதிவிட்டுள்ளார் யோகிபாபு.

More Articles
Follows