திருப்பதிக்கு நடந்தே சென்று நடிகர்கள் விஷால்-ரமணா தரிசனம்

திருப்பதிக்கு நடந்தே சென்று நடிகர்கள் விஷால்-ரமணா தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி உள்ளிட்டோர் நடித்துள்ள எனிமி திரைப்படம் நாளை நவம்பர் 4 தீபாவளியை முன்னிட்டு ரிலீசாகிறது.

இந்த நிலையில் நேற்று இரவில் கீழ்திருப்பதியிலிருந்து மேல்திருப்பதிக்கு மலையில் நடந்தே சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர் நடிகர்கள் விஷால் ரமணா.

அதன்படி இன்று அதிகாலை திருப்பதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.

கொரோனா பிரச்னையால் கடந்தாண்டு வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையாம். எனவே தற்போது தனது வேண்டுதலையும், நேர்த்திகடனையும் செலுத்தியிருக்கிறார் விஷால்.

விஷால் தரிசனம் செய்துள்ளபோது நடிகையும், ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா செல்வமணியும் திருப்பதி வந்துள்ளார்.

இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது.

Vishal visits Tirupati ahead of his film Enemy’s release tomorrow on Diwali

JUST IN நான் நடிக்காத படத்தில் எனக்கே போஸ்டரா.? ரஞ்சித்திடம் கௌதம் மேனன் கேள்வி

JUST IN நான் நடிக்காத படத்தில் எனக்கே போஸ்டரா.? ரஞ்சித்திடம் கௌதம் மேனன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா இணைந்து நடித்த படம் காக்க காக்க. இந்த படத்தில் அன்புச்செல்வன் என்ற பெயரில் போலீஸ் கேரக்டரில் நடித்து இருந்தார்.

இந்த கேரக்டர் இன்று வரை ரசிகர்களால் மறக்கப்படாத கேரக்டராக இருக்கிறது. இதே வார்த்தையே நம் ஜெய்பீம் விமர்சனத்திலும் பார்த்தோம்.

இந்த நிலையில் அன்புசெல்வன் என்ற பெயரில் ஒரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தை வினோத் குமார் இயக்கவுள்ளதாகவும் அதில் கௌதம் மேனன் மிரட்டல் போலீசாக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. தயாரிப்பு நிறுவனம் : செவன்டிஎம்எம் ஸ்டூடியோஸ்

இந்த போஸ்டரை இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டு அதில் கௌதம் மேனனை வாழ்த்தினார்.

இந்த போஸ்டரை பார்த்த கௌதம்.. இந்த செய்தி எனக்கே ஷாக் கொடுக்கிறது. இந்த படத்தில் நான் நடிக்கவேயில்லை. இந்த வினோத் குமார் என்ற இயக்குனரை நான் பார்க்கவேயில்லை.” என அதிர்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Gautham Menon’s shocking reaction to his new film poster

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்..?

மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு ஜோடியாகிறாரா கமல்ஹாசன் மகள்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது தனது 2வது இன்னிங்சில் பட்டைய கிளப்பி வருகிறார். அதிரடியாக படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

கொரட்டலா சிவா இயக்கும் ‘ஆச்சாரியா’ படத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். இதற்கு தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ எனப் டைட்டில் வைத்துள்ளனர்.

இதன்பின்னர் அஜித் நடித்த ‘வேதாளம்’ பட தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் சிரஞ்சீவி.

இந்த படத்திற்கு ‘போலா ஷங்கர்’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு பாபி இயக்கத்தில் மைத்ரி நிறுவனம் தயாரிக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறார்.

இதற்கு தற்காலிகமாக சிரஞ்சீவி 154 என பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க கமல் மகள் ஸ்ருதிஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம் படக்குழு.

எனவே விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம்.

Kamal daughter to romance Chiranjeevi in her next film

இப்படி நினைக்கவே இல்லை.. ; புனித் வீட்டில் சிவகார்த்திகேயன் உருக்கம்

இப்படி நினைக்கவே இல்லை.. ; புனித் வீட்டில் சிவகார்த்திகேயன் உருக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29 அன்று காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்திய சினிமாவுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நேற்று நவம்பர் 1 பெங்களூர் சென்று புனித் அடக்கம் செய்யப்பட்ட சமாதியில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

“ஒரு நாள் ஒரு மேடையில் ரஜினி சார் மாதிரி மிமிக்ரி செய்தேன். அப்போது புனித் என்னைப் பாராட்டினார்.

சில நேரங்களில் போனில் பேசுவோம். அப்போது ஒரு நாள் “உங்களை ரொம்பப் பிடிக்கும். பெங்களூருக்கு வரும்போது வீட்டிற்கு வரவேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

எனவே அவரை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், இப்படியொரு தருணம் நடக்கும் என நினைக்கவே இல்லை.

நிஜ வாழ்க்கையில் புனித் சார் மாதிரி நிறைய நல்ல விஷயங்கள் செய்ய வேண்டும். அவருடைய நல்ல உள்ளத்திற்காகவே அவர் எப்போதுமே நினைவில் நிற்பார்.

ஒரு நாயகனாக எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம் புனித் சார்.” இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

Actor Sivakarthikeyan breaks down after paying homage to Puneeth Rajkumar in Yeshwanthpur

நயட்டு ரீமேக் : தமிழில் கௌதம்மேனன்.. ஹிந்தி-தெலுங்கு அப்டேட் இதோ…

நயட்டு ரீமேக் : தமிழில் கௌதம்மேனன்.. ஹிந்தி-தெலுங்கு அப்டேட் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள இயக்குனர் மார்டின் பிரகாட் இயக்கத்தில் உருவாகி கடந்த ஏப்ரல் மாதம் வெளியான மலையாள படம் நாயட்டு. (நயட்டு).

இதில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

ரஞ்சித், சசிதரன், மார்டின் பிரகாட் இருவரும் இணைந்து தயாரித்து இருந்தனர்.

ஒரு நள்ளிரவில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் கலந்து யதார்த்தமாக உருவான படம் இது.

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான இந்த படத்திற்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் மவுசு கூடியது.

தமிழ் ரீமேக்கை கெளதம் மேனன் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

அதன்படி தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இதில் ராவ் ரமேஷ், அஞ்சலி, பிரியதர்ஷி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

‘ஸ்ரீதேவி சோடா சென்டர்’ படங்களை இயக்குனர் கருணா குமார் இயக்குகிறார்.

இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார்.

Nayattu movie remake rights updates here

புனித் ராஜ்குமார் செய்த கல்விச்சேவையை ஏற்றுக் கொண்ட விஷால்

புனித் ராஜ்குமார் செய்த கல்விச்சேவையை ஏற்றுக் கொண்ட விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா, பிரகாஷ்ராஜ், மிருணாளினி உள்ளிட்ட நடித்துள்ள ‘எனிமி’ படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4-ம் தேதி ரிலீசாகிறது.

வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாகிறது.

‘எனிமி’ படத்தின் தெலுங்கு பட புரோமோசன் நிகழ்ச்சியில் விஷால் கலந்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கும் போது ‘எனிமி’ படக்குழுவினர் மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் விஷால் பேசும்போது…

“புனித் ராஜ்குமார் நல்ல நடிகர்… நல்ல நண்பரும் கூட.

ஒரு பணிவான சூப்பர் ஸ்டார். ஏராளமான சமூக பணிகளை புனிதி செய்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் புனித் ராஜ்குமாரிடமிருந்து 1800 மாணவர்களுக்கான இலவசக் கல்விக்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன்” இவ்வாறு விஷால் பேசினார்.

Actor Vishal to sponsor education of 1800 students funded by late actor Puneeth Rajkumar

More Articles
Follows