தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமலில் உள்ளது. இரவு 10 முதல் காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உள்ளது.
மேலும் கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டது.
வருகிற 23.01.2022 ஞாயிறு அன்றும் முழு ஊரடங்கு என தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இது அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமையும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு விஷால் தயாரித்து நடித்துள்ள வீரமே வாகை சூடும் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையால் வீரமே வாகை சூடும் படம் தள்ளிப்போகும் என தெரிய வந்துள்ளது.
அதுபோல் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீசாகும் என முன்பே அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இந்த படமும் தள்ளிப் போகும் எனத் தெரிய வந்துள்ளது.
எனவே இதற்கான அறிவிப்பை விரைவில் இரு தரப்பு தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.
Vishal and Suriya films postponed due to covid