தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வினோத்தின் வித்தியாசமான சிந்தனை.; அஜித் ரசிகர்கள் அப்செட்
சினிமாவில் ரஜினி அறிமுகமான தினத்தில் ‘தலைவர் 169’ டைட்டில் அப்டேட்.; சிவகார்த்திகேயனுக்கு இதான் கேரக்டர்.!
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷ் மற்றும் 3 ஹீரோயின்ஸ் கேரக்டர் அப்டேட்ஸ்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதனால் தனுஷ் உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால் இதற்கு பின் வெளியான வெளியான ‘ஜகமே தந்திரம்’ மற்றும் ‘மாறன்’ உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை தழுவியது.
எனவே ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக பணியாற்றி வருகிறார் தனுஷ்.
தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் கேரக்டர் குறித்து அறிவிப்பை கடந்த இரண்டு நாட்களாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது..
முதல் கட்டமாக அனுஷா என்ற கேரக்டரில் ராஷிகண்ணா நடித்து வருவதாக வீடியோ வெளியிட்டன்னர். இவர் தனுஷின் பள்ளி தோழியாக நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து கிராமத்து தென்றல் ரஞ்சனி என்ற கேரக்டரில் பிரியா பவானி சங்கர் நடித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.
சீனியர் திருச்சிற்றம்பலம் கேரக்டரில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கேரக்டரில் பிரகாஷ்ராஜ், தனுஷின் தோழி ஷோபனா என்ற கேரக்டரில் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருவதாகவும் ஒவ்வொரு வீடியோவாக அறிவித்தனர்.
இதனை அடுத்து தனுஷின் கேரக்டர் எப்போது வெளிவரும் என தனுஷ் ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று சற்று முன் ’திருச்சிற்றம்பலம்’ கேரக்டரில் தான் தனுஷ் நடித்து வருகிறார் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படம் ஜூலை முதல் வாரத்தில் ரிலீசாகலாம் எனத் தெரிகிறது
Dhanush and 3 Heroines Character Updates on ‘Tiruchirambalam’
திருப்பதியில் விதிகளை மீறிய புதுமண தம்பதி நயன்தாரா – விக்னேஷ்சிவன்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி சென்னையில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க நயன்தாரா கழுத்தில் தாலி கட்டினார் விக்னேஷ் சிவன்.
இதனையடுத்து இருவரும் ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். மற்றும் கோலிவுட் பிரபல நட்சத்திரங்களும் பங்குபெற்று தம்பதியினரை வாழ்த்தினர்.
இதனையடுத்து மறுநாள் அதாவது நேற்று ஜூன் 10ஆம் தேதி இருவரும் திருப்பதி சென்று திருமலையானை தரிசித்தனர்.
ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்துக் கொண்டனர். அப்போது அங்கே மணமக்களுக்கு போட்டோ ஷுட் நடத்தினர்.
கோயிலுக்கு வெளியே வந்து அவர்கள் திருப்பதி மலையில் காலணி அணிய தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோ சூட் நடத்தியுள்ளனர்.
தற்போது இது விவாதமாக மாறியுள்ளது. இது பற்றிய தகவல் அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நடைபெற்ற தவறுக்கு யார் காரணம் என விசாரணை நடத்த உள்ளனர்
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாம் தேவஸ்தான நிர்வாகம்.
Newly wed couple Nayanthara and Vignesh Sivan break the rules in Tirupati
சொன்னதை செய்தார் லாரன்ஸ்.; ‘ஜெய்பீம்’ பட நிஜ பார்வதி அம்மாளுக்கு உதவினார்
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த வருடம் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் உண்மைக் கதைநாயகனான ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாள் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதை ஊடகங்கள் மூலம் ராகவா லாரன்ஸ் அறிந்து கொண்டார்.
பார்வதி அம்மாவுக்கு அவரது செலவில் வீடு கட்டிக் கொடுப்பதாக உறுதியளித்ததை அனைவரும் அறிவீர்கள்.
சென்னை புறநகரான முகலிவாக்கத்தில் தன்னுடைய மகள் வீட்டில் வசித்துவந்த பார்வதி அம்மாவை நேரில் சந்தித்த ராகவா லாரன்ஸ் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கியதோடு, அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க விரும்புவதையும் அவரிடம் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகில் உள்ள, கீழ நத்தம் என்ற கிராமத்தில் பார்வதி அம்மாளின் மகளுக்கு நிலம் உள்ளது என்றும் அந்த இடத்தில் வீடு கட்டித்தரும்படி அவரிடம் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி கீழநத்தம் கிராமத்துக்கே சென்று வீடு கட்டுவதற்கான நிலத்தை பார்வையிட்டு வந்ததோடு, அங்கே வீடுகட்டும் பணியைத் தொடங்கும் முயற்சியில் ராகவா லாரன்ஸ் இறங்கிய நேரத்தில், பார்வதி அம்மாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டித்தர இருப்பதாக தகவல் வெளியானது.
பார்வதி அம்மாவின் வறுமை நிலையை அறிந்து அவருக்கு வீடு கட்டிக்கொடுக்க முன்வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் அப்போது தெரிவித்திருந்தார்.
அதேநேரம் அவர் வாக்குக்கொடுத்தபடி, பார்வதி அம்மாவுக்கு வீடுகட்டிக் கொடுப்பதற்கு ஒதுக்கிய தொகையை அவர்களுக்கு பணமாக வழங்குவது என்று முடிவு செய்து, அதன்படி, பார்வதி அம்மாவின் குடும்பத்தினரை தனது அலுவலகத்துக்கு அழைத்து, பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டித்தருவதற்காக ஒதுக்கிய தொகையை பார்வதி அம்மா, மற்றும் அவருடைய மூத்த மகன் மாரியப்பா, இளைய மகன் ரவி, மகள் சின்னப்பொண்ணு ஆகியோருக்கு பிரித்து வழங்கினார்.
பார்வதி அம்மாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நல்லது நடப்பதற்கு காரணமாக இருந்த ஜெய்பீம் படக்குழுவினருக்கும், ஜெய்பீம் படத்தை தயாரித்த சூர்யா, ஜோதிகா, இயக்குநர். த.செ. ஞானவேல் உள்ளிட்டோருக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்தார் லாரன்ஸ்.
Lawrence did as he was told .; ‘Jaibhim’ helped real Parvati Ammal
இளையராஜா இசையில் இணையும் வெங்கட் பிரபு & நாகசைதன்யா
தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சிம்பு நடிப்பில் உருவான ‘மாநாடு’ படத்தை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார்.
இந்த படம் உலக அளவில் ரூபாய் 117 கோடியை வசூலித்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘மன்மதலீலை’ என்ற படத்தை இயக்கியிருந்தார் வெங்கட்பிரபு.
இந்த படமும் ரசிகர் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது.
இந்த இரண்டு படங்கள் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது வெற்றிக்காக தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் இணைய உள்ளார் வெங்கட் பிரபு.
இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகுகிறது.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் 11 ஆவது திரைப்படம் இது. தெலுங்கில் அவர் இயக்கும் முதல் படம் இது. நாகசைதன்யா தமிழில் நடிக்கும் முதல் படமும் இதுவே.
தயாரிப்பாளர் ஶ்ரீனிவாச சித்துரி, Srinivasaa Silver Screens சார்பில் தயாரிக்கும் இந்த படத்தினை பவன் குமார் வழங்குகிறார். ஒளிப்பதிவை S.R. கதிர் கவனிக்கிறார்.
இன்னும் இரண்டு வாரங்களில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. தற்போது சாங் ரெக்கார்டிங் பணிகள் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில் இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இணைந்து இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இளையராஜாவின் ஸ்டுடியோவில் அவரோடு வெங்கட்பிரபு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பே இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து சீனு ராமசாமி இயக்கிய ‘மாமனிதன்’ படத்திற்கு இசையமைத்து உள்ளனர்.
இளையராஜாவின் தம்பி கங்கை அமரனின் மகன்தான் வெங்கட்பிரபு என்பது குறிப்பிடத்தக்கது.
Ilaiyaraja to score music for Venkat Prabhu – Naga Chaitanya film