தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் காரணமாக நிறைய பேர் தினம் உயிரிழக்கின்றனர்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தவர்களும் இறக்கும் செய்தியை நாம் அறிந்து வருகிறோம்.
இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த இறந்தவர்களின் உடலை புதைக்க இடம் தர முன்வந்துள்ளார்.
தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் நேரத்தில் நமக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்தவர்களுக்கு இப்படி நடப்பது குறித்தும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனாவால் இறந்தவரை அடக்கம் செய்வதால் பாதிப்பு ஏற்படாது என்பதை மக்களுக்கு அரசு புரிய வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.
விஜயகாந்தின் இந்த செயல் தமிழக மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vijayakanth gave his land to bury corona died patients