சூப்பர் ஸ்டாருடன் விஜய்சேதுபதி இணையும் படம் ரூ.150 கோடிக்கு விற்பனை

சூப்பர் ஸ்டாருடன் விஜய்சேதுபதி இணையும் படம் ரூ.150 கோடிக்கு விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Sye Raa Narasimha Reddy trade updatesசுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படத்திற்கு ‘சயீரா நரசிம்மரெட்டி’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தில் நாயகனாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.

இவருடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மற்றொரு முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார்.

சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தின் ஆந்திரா, தெலுங்கானா வெளியீட்டு உரிமை ரூ.150 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளையும் பெரிய தொகைக்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரூ.150 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தை சிரஞ்சீவி மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு ‘சயீரா நரசிம்மரெட்டி’ வெளியாகும் என கூறப்படுகிறது.

Vijay Sethupathis Sye Raa Narasimha Reddy trade updates

Vijay Sethupathis Sye Raa Narasimha Reddy trade updates

ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி

ஜிவி.பிரகாஷுக்கு ஜோடியாகும் எங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Enga Veetu Mappillai fame Aparnathi romance with GV Prakashஅங்காடித்தெரு, வெயில், அரவான், காவியத்தலைவன் படங்களை இயக்கிய வசந்தபாலன், அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு சென்னை ஓல்டு மகாபலிபுரம் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு அரங்கமைப்பில் பூஜையுடன் நாளை காலை ஆரம்பமாகிறது.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ‘பள்ளிப்பருவத்திலே’ நாயகன் நந்தன் ராம், ‘பசங்க’ நாயகன் பாண்டி, ஆர்யாவுடன் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான அபர்ணதி கதாநாயகியாக நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கிறார். இவர்களுடன் ஜெனிஃபர், மணிமேகலை, பாகுபலி வில்லன் பிரபாகர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இசை -ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு-கணேஷ் சந்திரா, சண்டை-அன்பு அறிவு, வசனம்- G.ராமகிருஷ்ணன், பாக்கியம் சங்கர், எடிட்டிங்-ரேமண்ட், பாடல்கள்-கபிலன், கருணாகரன். கதை,திரைக்கதை, இயக்கம்-வசந்தபாலன்,

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் பி.டி.செல்வகுமார். தயாரிப்பு- கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன்.

இவர் விஷால் நடித்த இரும்பு திரை, மிஷ்கினின் சவரக்கத்தி படங்களை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Enga Veetu Mappillai fame Aparnathi romance with GV Prakash

தங்கை தாராவுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் அக்கா இனியா

தங்கை தாராவுக்கு தமிழ் கற்றுக் கொடுக்கும் அக்கா இனியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

iniya and tharaவாகை சூடவா, அம்மாவின் கைபேசி, மவுன குரு, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள், உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை இனியா.

அவர் நடித்துள்ள பொட்டு படம் வெளிவர இருக்கிறது.

இந்த நிலையில் இனியாவின் தங்கை தாராவும் நடிக்க வந்திருக்கிறார்.

விரைவில் வெளியாகவுள்ள கிளம்பிட்டாங்கய்யா… கிளம்பிட்டாங்கய்யா… என்ற படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழை முறையாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமாவில் சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். என்று அக்கா இனியா அறிவுரை கூறியிருக்கிறார்.

அவரைப்போல நானும் சினிமாவில் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்கிறார் தாரா.

கமல்ஹாசன் பாணியில் டிவி நிகழ்ச்சி வரும் விஷால்..?

கமல்ஹாசன் பாணியில் டிவி நிகழ்ச்சி வரும் விஷால்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan and vishalபிரபல நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியை டிவியில் தொகுத்து வழங்கினார்.

தற்போது இதன் 2ஆம் பாகத்தை தொகுத்து வழங்கவிருக்கிறார்.

தற்போது இவரது பாணியில் நடிகர் விஷாலும் வரவுள்ளதாக தெரிகிறது.

தெலுங்கில் முன்னணி டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி மேது சைத்தம்.

இதனை நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கி வருகிறார்.

வாழ்க்கையில் போராடி ஜெயித்த மக்களின் கதை நேர்காணலாக ஒளிபரப்பாகும்,

இதில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள்.

அவர்கள் தங்களது வழக்கமான வேலையை தவிர்த்து சாதரண மக்கள் செய்யும் வேலையை ஒரு நாள் செய்ய வேண்டும்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு நாள் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தார் பாகுபலி வில்லன் ராணா.

தற்போது இந்த நிகழ்ச்சியை தமிழின் முன்னணி சேனல் தயாரித்து, வழங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இந்த பேச்சுவார்த்தை ஆரம்பகட்ட நிலையில்தான் உள்ளதால் இன்னும் முடிவாகவில்லை என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்-62வது படம்.. இன்னொரு தலைவா..? அடுத்த மெர்சல்..?

விஜய்-62வது படம்.. இன்னொரு தலைவா..? அடுத்த மெர்சல்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 62 movie stillsஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் தளபதி 62.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படம் ஒரு அரசியல் படமாக உருவாகி வருவதால், அரசியல் காட்சிகள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது.

பழ. கருப்பையா மற்றும் ராதாரவி இருவரும் அரசியல்வாதிகளாக நடிக்கிறார்கள்.

எனவே அவர்களின் பேனர்கள், கட் அவுட்கள் அடங்கிய அரசியல் கட்சிகள் இணைப்பு மாநாடு ஒன்று நடக்கும் விதத்தில் அந்த பேனர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே விஜய் படங்களில் அதிகம் அரசியல் பேசப்பட்டு வருகிறது.

இதனால்தான் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தலைவா படத்திற்கு பெரும் பிரச்சினைகள் வந்தது. இப்படம் தோல்வியை சந்தித்தது.

ஆனால் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களுக்கு எதிர்ப்பு வந்தது. ஆனால் அது எதிர்மறையாகி படத்திற்கு பெரும் விளம்பரம் கிடைக்க, வெற்றி பெற்றது.

இதன் அடைப்படையில் பார்த்தால் விஜய் 62 படம் இன்னொரு தலைவா..? அடுத்த மெர்சலா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழக அரசுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.. கமல் ஆவேசம்

தமிழக அரசுக்கு மக்கள் தண்டனை கொடுப்பார்கள்.. கமல் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanதூத்துக்குடி, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தொடர்ந்து கண்டனங்களை பதிவு செய்து வருகிறார் கமல்ஹாசன்.

பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்..

தூத்துக்குடியில் பதற்றம் ஓயவில்லை. மக்களை மிரட்டுவது அரசுக்கு அழகல்ல.

இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஆட்சியில் இருப்பவர்கள் பதவி விலக வேண்டும். அதுவே அவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனையாகவே இருக்கும்.

விரைவில் இதை விட பெரிய தண்டனையை மக்களுக்கு அவர்களுக்கு கொடுப்பார்கள்.” என்றார்.

இதனிடையே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை கமல் சந்தித்து பேசியுள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

144 தடை இருக்கும் போது 5 பேருக்கு மேல் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற நிலையில் கமல் 20 பேருடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More Articles
Follows