மீண்டும் ’வாலு’ நடிகருடன் இணைய ’ஸ்கெட்ச்’ போடும் டைரக்டர்

மீண்டும் ’வாலு’ நடிகருடன் இணைய ’ஸ்கெட்ச்’ போடும் டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Chandar to join hands with STR aka Simbu againசிம்பு நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகவுள்ள படம் மஹா.

இந்த படத்தில் தன் முன்னாள் காதலி ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார் சிம்பு.

இதனையடுத்து வெங்கட் பிரபுவின் மாநாடு, மிஷ்கின் இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகிய படங்கள் சிம்பு கைவசம் உள்ளது.

இந்த நிலையில் விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் வாலு படத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்திருந்தனர். விஜய் சந்தர் தான் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

வாலு படத்திற்கு பின் ஸ்கெட்ச், சங்கத் தமிழன் போன்ற படங்களை விஜய்சந்தர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Chandar to join hands with STR aka Simbu again

கொரோனா சரியான பின்னரும் விஜயா ஆஸ்பிட்டலில் சிக்கிய விஜய் பட இயக்குனர்; உதவிய சிவகார்த்திகேயன்-நயன்தாரா பட தயாரிப்பாளர்

கொரோனா சரியான பின்னரும் விஜயா ஆஸ்பிட்டலில் சிக்கிய விஜய் பட இயக்குனர்; உதவிய சிவகார்த்திகேயன்-நயன்தாரா பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producer KJR Rajesh helps Director Majith to discharge from Hospitalஇளைய தளபதி விஜய், பிரியங்கா சோப்ரா, நாசர், ரேவதி, விவேக் நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜீத்.

மேலும் பைசா என்ற படத்தையும் இயக்கியுள்ளார் இவர்.

இவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பாசிட்டிவ் என்பதால் சென்னை வடபழனியிலுள்ள விஜயா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

சேரும் போதே மஜீத்தின் மனைவி கொரோனா டிரீட்மெண்ட்டுக்கு மொத்த செலவு எவ்வளவு ஆகும்? என கேட்டுள்ளார்.

அதற்கு விஜயா மேனேஜ்மெண்ட் ஆள் சொன்னது 2,80,000/- ரூபாய் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

உடனே தங்கள் கையிருப்பைக் மஜித் மனைவி செக் செய்து, சரி ஓகே.. சிகிச்சையை ஆரம்பியுங்கள் என தெரிவித்துள்ளார்.

சில தினங்களில் கொரோனா பாதிப்பில் குணமாக பணத்தை செட்டில் செய்யக் தொகையை கேட்டபோது ஒருநாள் காத்திருக்கச் சொல்லி (கணக்குப் பார்ப்பதற்காக) அவர்கள் சொன்ன தொகை 3,40,000/- ரூபாய்.

இதனையடுத்து மஜீத்தின் மனைவி நிறைய கேள்விகள் கேட்க கேட்க தொகை 4 லட்ச ரூபாய் ஆனது.

மஜீதும் வேறு வழியில்லாமல் சில நிர்வாகிகளிடம் விபரம் சொல்ல, அம்மா கிரியேசன்ஸ் டி. சிவா அவர்கள் 80,000/- ரூபாய் ஏற்பாடு செய்து நேரடியாக விஜயா ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பி விட்டாராம்.

ஆனாலும் டிஸ்சார்ஸ் செய்யாமல் பிரச்சனை தொடர… இறுதியாக அவர்கள் கேட்கும் தொகை 4,65,000/- ரூபாய் என ஆனது.

இதனையடுத்து தயாரிப்பாளர் ஜேஜேஆர். ராஜேஷ் உதவிக்கு வந்துள்ளார்.

மீதமுள்ள மொத்த தொகையை செட்டில் செய்ய பின்னர் மஜீத் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.

நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயனின் நடித்த ஹீரோ மற்றும் டாக்டர் படங்களை ஜேஜேஆர். ராஜேஷ் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Producer KJR Rajesh helps Director Majith to discharge from Hospital

தற்கொலைக்கு எதிராக பேசிய நடிகரே தற்கொலை.; இப்போ புரியுதா? ரீல் வேற… ரியல் வேற

தற்கொலைக்கு எதிராக பேசிய நடிகரே தற்கொலை.; இப்போ புரியுதா? ரீல் வேற… ரியல் வேற

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sushant Singh Rajput suicide reveals Reel and Real heroes டிவியில் தொடங்கி சினிமாவில் தன் பயணத்தை தொடர்ந்தவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.

கடந்த 2013-ம் ஆண்டில் Kai Po Che பட மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

கிரிக்கெட்டர் தோனியின் வாழ்க்கை வரலாறு படமான Dhoni the untold story படத்தில் தோனியாகவே வாழ்ந்து காட்டினார்.

இதன் மூலம் இந்தியா முழுக்க அறியப்பட்ட நபராக மாறினார்.

7 ஆண்டுகளில் 10 படங்கள். 34 வயதிற்குள் பிரபலமான நடிகராக உயர்ந்தார்.

சுஷாந்த் சிங்கும் நடிகை ரியா சக்ரபோர்த்தியும் காதலித்து வந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இவர்கள் நவம்பரில் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் காலம் அவரின் முடிவை மாற்றிவிட்டது.

இவர் கடைசியாக நடித்த சிச்சோரே தற்கொலைக்கு எதிரான கருத்தை வலியுறுத்தியது.

சினிமாவில் வீர வசனம் பேசிய இவர் நிஜ வாழ்க்கையில் கோழையாக மாறி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

ஒரு பக்கம் ரசிகர்கள் மீளா துயரத்தில் இருந்தாலும் அவரை விரும்பியவர்களுக்கே இது பேரதிர்ச்சியாக உள்ளது.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்துக் கொள்ள முடிகிறது.

சினிமாவில் நாம் காண்பவர்கள் ரீல் ஹீரோக்களே… அவர்கள் ரியல் ஹீரோக்கள் அல்ல… அவர்கள் சொல்வதை முழுமையாக நம்பி விட வேண்டாம்.

யாரோ ஒருவர் எழுதிய வசனத்திற்கு அவர்கள் நடிக்கிறார்கள். அவ்வளவுதான்.. இனிமேலாவது உங்கள் அபிமான ஹீரோக்களை கண்மூடித்தனமாக நம்பி தங்கள் வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை முடிவை எடுக்கும் முன்.. நாம் சினிமாவில் இப்படி எல்லாம் பேசி நடித்தோமே… நம் ரசிகர்கள் என்ன நினைப்பார்கள்? என்று ஒரு கனம் யோசித்திருக்கலாம்…

கடந்த ஜூன் 3-ம் தேதி கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சுசாந்த் சிங்… தன் தாயின் மறைவுக்கு பிறகு வாழ்க்கையே மாறிவிட்டதாகவும் அந்த சோகத்தை நடிப்பின் மூலம் ஈடு செய்து வருவதாகவும் உருக்கத்துடன் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் ஆத்மா சாந்திடைய வேண்டுகிறோம்.

கூடுதல் தகவல்..

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050

Sushant Singh Rajput suicide reveals about Reel and Real heroes

45 லட்சம் கொடுத்தார்.. காலில் விழுந்தார் ரஜினி..; பெத்தராயுடு பெருமை பேசும் மோகன்பாபு

45 லட்சம் கொடுத்தார்.. காலில் விழுந்தார் ரஜினி..; பெத்தராயுடு பெருமை பேசும் மோகன்பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pedarayudu turns 25 Mohan babu reveals about Rajinis helpகே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இரு வேடங்களில் சரத்குமார் நடித்த படம் ‘நாட்டாமை’.

குஷ்பூ, மீனா, விஜயகுமார், கவுண்டமணி, செந்தில் நடித்த இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்தது.

இதன் வெற்றியை பார்த்த ரஜினி தெலுங்கில் ரீமேக் செய்ய நண்பர் மோகன் பாபுவிடம் கூறியுள்ளார்.

“தமிழ்ப்படம் நாட்டாமை பார்த்தியா.? சரத்குமார் நடிச்ச ஹிட் படம். அதை ரீமேக் பண்ணு.. நான் கெஸ்ட் ரோல்.. உனக்கு அப்பாவா ஆக்ட் பண்றேன்னு சொல்லிருக்கார்.

தெலுங்கில் ‘பெத்தராயுடு’ என்ற பெயரில் ரஜினி-மோகன்பாபு நடிப்பில் ரிலீசாகி இன்றோடு 25 ஆண்டுகள் கடந்து விட்டன.

ரவிராஜா பினி செட்டி என்பவர் இயக்கியுள்ளார்.

படம் உருவாகும் போதே பைனான்ஸ் பிரச்னை வந்துள்ளது. எனவே மோகன்பாபுக்கு ரூ 45 லட்சம் கொடுத்து படத்தை முடிக்க உதவியிருக்கிறார் ரஜினி.

பூஜை அன்றே ஓப்பனிங் ஷாட் நடைபெற்றுள்ளது. என்டிஆர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கதைப்படி அப்பாவான ரஜினிக்கு மோகன் பாபு மாலை போட்டுள்ளார்

ஆனால் எதிர்பாரா விதமாக அதே மாலையை மோகனுக்கு போட்டு அவர் பாதம் தொட்டு வணங்கியிருக்கிறார் ரஜினி.

அந்த போட்டோவை இன்னமும் பத்திரமா வைத்துள்ளார்.

இப்படியாக பெத்தராயுடு பெருமை பேசி நெகிழ்ந்துள்ளார் மோகன் பாபு..

நன்றி : தேவிமணி

Pedarayudu turns 25 Mohan babu reveals about Rajinis help

தமிழ்த்தாய் வாழ்த்து ஆல்பம்..: கமல் ஏஆர் ரஹ்மான் தீவிர முயற்சி

தமிழ்த்தாய் வாழ்த்து ஆல்பம்..: கமல் ஏஆர் ரஹ்மான் தீவிர முயற்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal ar rahmanதலைவன் இருக்கின்றான் என்ற நேரலை நிகழ்ச்சிக்காக (வீடியோவில்) கமல் மற்றும் ஏஆர் ரஹ்மான் பங்கேற்றனர்.

அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து ஆல்பம் உருவாக்கும் முயற்சியில் கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்துள்ளதை அறிவித்தனர்.

இதற்கான பாடலை எழுதி, ஆல்பத்தை கமல் இயக்க உள்ளார். ரஹ்மான் இசை அமைத்து பாடுகிறார்.

இதுகுறித்து கமல் கூறியதாவது: ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த யோசனையை ரஹ்மானிடம் சொல்லிவிட்டேன். அவரும் செய்யலாம் என்றார்.

படைப்பாளிளை வலிந்து வேலை வாங்க முடியாது. இது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றார்.

ரஹ்மான் கூறும்போது… அப்படி ஒரு ஆசை எனக்கும் இருக்கிறது. அதற்கு நிறைய உழைக்க வேண்டும். கமலும் ஊக்கப்படுத்தி வருகிறார். நேரம் வரும்போது எல்லாம் தானாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Kamal and AR Rahman rejoin for Thamizh Thai Vaazhuthu Album

ஊரடங்கிலும் RK செல்வமணிக்கு நாவடங்கவில்லை…; ‘காமராசு’ டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம்

ஊரடங்கிலும் RK செல்வமணிக்கு நாவடங்கவில்லை…; ‘காமராசு’ டைரக்டர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Anbazhagan slams FEFSI president RK Selvamaniமனிதநேய அரசை விமர்சனம் செய்யும் நன்றி மறந்த ஆர்.கே.செல்வமணி என ‘காமராசு’ பட இயக்குனர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காமராசு, அய்யாவழி, நதிகள் நனைவதில்லை ஆகிய படங்களின் இயக்குனர், தயாரிப்பாளர் இவர்.

திரைத்துறை சார்ந்த அரசு நிகழ்வுகளில், செல்வமணியை மாப்பிள்ளை அந்தஸ் சோடு முதல்வர் நேரில் கௌரவிக்கிறார் .. அவரோ நன்றி மறந்து விளம்பர வெறி பிடித்து, பாதி நாள் ஆந்திராவில் இருந்து கொண்டு அந்தர் பல்டி அட்டைக் கத்தி அவதூறு பேட்டி கொடுக்கிறார்.

எல்லா துறைகளுக்கும் அரசு கவனிக்கிறது, திரைத்துறைக்கு அரசு எதுவும் செய்யவில்லை என்கிறார் பிணி வார்த்தைகள் கொண்ட மணி.

அச்சாணி இல்லாத தேர், முச்சாணியும் ஓடாது.

அரிதார துறைக்கு சங்கங்கள் அமைய நிதி வழங்கியவர் அவதார தலைவர் புரட்சித் தலைவர் .

மானியங்கள் கிடைக்க கருணை மனசோடு உதவியவர் புரட்சித் தலைவி.

கொரனா – பிணிக் காலத்திலும், 21,0679 திரைத் துறை நல வாரிய உறுப்பினர்களின் பசிப்பிணி போக்க 2 கோடி 26 – லட்சம் உதவியிருக்கிறார் அச்சாணி முதல்வர்.

149 – படங்களுக்கு தலா – 7 லட்சமாக நலிந்த தயாரிப்ளர்களுக்கு, மழை மேக மனசோடு முதல்வர் உதவியதை வரலாறு குறித்து வைத்திருப்பதை, தகராறு பிடித்த மணி மறந்ததேனோ..

முயல் குழிபறிக்க.. பறவை விதைபோடும்.

பையனூரில், தங்கத் தாரகை பெயரில் அரங்கம் அமைய 5 கோடியை ஒதுக்கீடு செய்து, இரண்டு கட்டங்களாக ஒன்றரை கோடியை உமது கரத்தில் தந்த, கலைத்துறையை தாய்ப் பறவையின் சிறகுகளாய் பாதுகாக்கும், ,எளியவர்களையும் புன்னகையோடு வரவேற்கும் – முதல்வரின் மனிதநேய அரசை விமர்சன வீச்சரிவாளால் தாக்கலாமா..?

இந்த ஊரடங்கு உலகம் தழுவியது.. எங்கும் படப்பிடிப்பு துவங்கவில்லை.

கம்பெனிகளுக்கு 50% பேர் வேலை செய்யலாம்.. கலைத்துறைக்கு மட்டும் 60-பேராயென்று, 200 – பேருக்கு அடிபோட்டு – பிடியில்லாமல் கொரனா சோகத்திலும் காமெடியாக கேட்கிறார்.

கடந்த 10 வருடங்களாக சிறு முதலீட்டு படங்களின் படப்பிடிப்புகளில் 60 முதல் 75 பணியாளர்கள் மட்டுமே பணிபுரிவதை மணி மறந்தது ஏனோ…

ஆம், புதுமுக நடிகர் நடித்தாலே, வேடிக்கை பார்க்க திருவிழா கூட்டம் சுயம்பாக வரும்.

யுனிட்டிலே, 200-பேர் யென்று, செல்வமணி வாதத்திற்கு – ஒப்புக்கு – சப்பாக வைத்துக் கொண்டாலும், படப்பிடிப்பு தளத்தில் இடைவெளியில்லாமல் நசுங்கி, கொரனாவே செத்துவிடும்.

செல்வ மணிக்கு ஆந்திர அரசியலின் தந்திரங்கள் புரியுமளவுக்கு, 10-வருடங்களாக தமிழ் சினிமாவின் எதார்த்தம்
புரியவில்லை.

10 வருடங்களாக சொத்தையும்-தாலியையும் விற்று 2-கோடிக்கு படமெடுக்கும் தயாரிப்பாளார்கள் யாரும், 75 – பேருக்கு மேல் டெக்னீசியன்களை வேலைக்கு அமர்த்துவதில்லை.

50-கோடிகளை தனக்கு மட்டுமே சம்பளமாக பெற்று, 150-கோடிகளுக்கு புரடெக்ஷன் செலவுகளை இழுத்து விடும், தயாரிப்பாளர்கள் தெருக்கோடிக்கு செல்வதை ஓசைப்படாமல் ரசிக்கும், பிரபல ஹீரோக்களுக்காக 200 – பேர் பயன்பட கொரனா பதட்ட காலத்திலும் – முட்டுக் கொடுத்து மூச்சு வாங்கப் பேசுகிறார் செல்வத்தை நேசிக்கும், செல்வமணி.

வியர்வை பட்ட இடத்தில், கரண்டி பட்டால் சோற்றிலும் கொரனா விசாயின்றி பயணிக்காதா…

கொரனா சங்கிலியை தனிமையால் அறுத்து – உயிர் வாழ்தலே இக்கண தேவை.

உயிர் பிழைத்தால் .. கலைஞர்கள் சுயேட்சைகளாக – உழைத்து பிழைப்பார்கள்.

தமிழகத்திற்கான அர்ப்பணிப்புகளில் – கரைப் படியாமல் விழித்திருந்து உழைக்கும் அரசை சீண்டாமல், வாங்கிய நிதிகளுக்கான கணக்கை தபால்கார்டு மாதிரி திரையில்லாமல் சங்க -உறுப்பினர்களுக்கு காட்டுவதே செல்வமணி வகையறாக்களுக்கு வெள்ளை அறிக்கை அழகு.

Director Anbazhagan slams FEFSI president RK Selvamani

More Articles
Follows