தனி விமானத்தில் தன் தங்கத்தை தாங்கி கொண்டு பறந்த விக்னேஷ் சிவன்

தனி விமானத்தில் தன் தங்கத்தை தாங்கி கொண்டு பறந்த விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் நடிகர் பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன்.

தற்போது ரவுடி பிக்சர்ஸ் பெயரில் தன் நீண்ண்ண்ண்ட நாள் காதலி நயன்தாராவுடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.

இவர் நயன்தாராவை ‘என் தங்கமே’ என்று செல்லமாக அழைப்பதுண்டு.

இந்த காதல் பறவைகள் அடிக்கடி பாரீன் பறப்பதுண்டு.

தற்போது கொரோனா காலம் என்பதால் தனி விமானத்தில் பறக்கின்றனர்.

இந்த நிலையில் தனி விமானத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு சினிமா சூட்டிங்குக்காக பறந்துள்ளனர்.

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘பாட்டு’ என்ற படத்தில் பத்து பாசிலுடன் நயன்தாரா நடிக்கிறார்.

இதற்காக தான் தனது காதலன் விக்னேஷையும் அழைத்து சென்றுள்ளார் நயன்.

தனி விமானத்தில் சென்ற இவர்கள் கொச்சியில் தரை இறங்கிய போது எடுத்த போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

தன் காதலி நயன் விமானப் படிகளில் இறங்கி வரும்போது தாங்கி பிடித்து அவர் இறங்க உதவி செய்யும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது.

Vicky and Nayanthara fly to Cochi for Pattu shoot

‘தொரட்டி’ பட நாயகன் ஷமன் மித்ரு மரணம்..; அவரை பற்றி ஒரு பார்வை

‘தொரட்டி’ பட நாயகன் ஷமன் மித்ரு மரணம்..; அவரை பற்றி ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை திரைப்பட கல்லூரியில் படித்து தங்க பதக்கம் வென்ற மாணவர் ஷமன் மித்ரு.

இவர் தமிழ், தெலுங்கு , கன்னட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்துள்ளார்.

பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தாலும் தன்னை முழுமையாக அடையாளப்படுத்தி கொள்ள ‘தொரட்டி’ படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றவர்.

2019ஆம் ஆண்டு வெளியான படம் தான் ‘தொரட்டி’.

மாரிமுத்து இயக்கிய இப்படத்தில் ஷமன் மித்ரு, சத்யகலா உள்ளிட்டோர் நடிக்க. வேத் சங்கர் இசையமைத்து இருந்தார்.

இந்த நிலையில் ஷமன்மித்ரு இன்று காலை 6 மணிக்கு இயற்கை எய்தினார்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் இன்று குரோம்பேட்டை நிலா மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார். இவருக்கு தற்போது வயது 42.

தனது அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கிய நேரத்தில் மரணமடைந்தது அவரது உறவினர்களையும் நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷமன் மித்ருவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் , மோக்‌ஷா என்று 5 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களின சொந்த ஊர் காரைக்குடி, சிங்கம்புணரி.

சென்னை முகவரி.
Santha’s, No 15, Sri Ram Nagar, 3rd Cross street, Peerkankaranai, New Perungalathur, Chennai – 600063.

Thorati Hero Producer Shaman Mithru passed away due to Covid.

தனுஷ் சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்த சிம்பு.; கமல் பாணியில் கலக்குவாரா.?

தனுஷ் சிவகார்த்திகேயனை ஓவர் டேக் செய்த சிம்பு.; கமல் பாணியில் கலக்குவாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சகலகலா வல்வவன் கமல்ஹாசன் அரசியலில் பிசியாகவுள்ளார். தன் இறுதி மூச்சு வரை அரசியலில் இருப்பேன் என அறிவித்திருக்கிறார்.

விரைவில் விக்ரம், இந்தியன் 2, பாபநாசம் 2 படங்களில் நடிக்கவுள்ளார் கமல்.

எனவே அவர் பிக்பாஸ் அடுத்த சீசனை நடத்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கமல் இல்லாவிட்டால் சிம்பு தொகுத்து வழங்குவார் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ‘சர்வைவர்’ என்ற பிரபலமான சர்வதேச ரியாலிட்டி நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை தொகுத்து வழங்கவுள்ளார் சிம்பு என தகவல்கள் வருகின்றன.

இந்த சர்வைவர்’ என்ற சர்வதேச ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க தனுஷ் அல்லது சிவகார்த்திகேயன் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில் சிம்புவுக்கே வாய்ப்பு போனதாக சொல்லப்படுகிறது.

(சின்னத் திரையில் பணிபுரிந்த போது சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம்.. பிரபலம்.. என்பதையும் நினைவில் கொள்க.)

தற்போது அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் ‘சர்வைவர்’ ரியாலிட்டி ஷோ குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் இது பிரபலமான தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் போட்டியாளர்கள் வெளி உலகத்துடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு தீவில் தங்க வைக்கப்படுவார்கள்.
அந்த நிகழ்ச்சி அங்குதான் படமாக்கப்படும்.

நிகழ்ச்சியின் விதிகளின்படி, போட்டியாளர்களுக்கு குறைந்தபட்ச வசதிகள் மட்டுமே தரப்படும்.

எனவே கூடுதல் பொருட்கள் மற்றும் இதர வசதிகளைப் பெற அவர்கள் பல்வேறு பணிகளை (task) செய்து அவற்றில் வெற்றி பெற வேண்டுமாம். இதுதான் சர்வைவர்.

கமல் போல சிம்பு கலக்குவாரா?

Will Simbu host Survivor International TV Reality show

சிம்பு படம் ஓடிடியில் ரிலீஸ்..; மஹா அதிர்ச்சியில் ரசிகர்கள்

சிம்பு படம் ஓடிடியில் ரிலீஸ்..; மஹா அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu mahaaவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ’மாநாடு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.

கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்ட உடன் படம் ரிலீசாகவுள்ளது.

ஆனால் சிம்புவின் மற்றொரு படமான ’மஹா’ படத்தை ஓடிடியில் வெளியிடவுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன.

ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’வின் இயக்குனர் ஜமீல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார்.

இப்படத்தின் எடிட்டிங் பணிகள் தனக்கு தெரியாமலேயே முடிந்துவிட்டதும் என்றும், தனக்கு சம்பள பாக்கி இருப்பதால் வழக்கு தொடுத்திருந்தார்.

இதனால் பட ரிலீசுக்கு கோர்ட் தடை விதித்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து தற்போது முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி ’மஹா’ படத்தை திரையிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் இயக்குனருக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை கொடுத்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ’மஹா’ படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்படுகிறது.

இதன் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

STR – Hansika’s Mahaa to release in OTT

புதுச்சேரி சபாநாயகராக பாஜக செல்வம் பதவியேற்றார்.; திமுகவில் இருந்தால் அப்படியேதான் இருந்துருக்கனும் என நாஜிமுக்கு பதிலடி கொடுத்தார்.!

புதுச்சேரி சபாநாயகராக பாஜக செல்வம் பதவியேற்றார்.; திமுகவில் இருந்தால் அப்படியேதான் இருந்துருக்கனும் என நாஜிமுக்கு பதிலடி கொடுத்தார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP Selvam2021 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.

இவர்களின் உட்கட்சி பிரச்சினையால் அமைச்சரவை இன்னும் அமையவில்லை.

தற்போது தான் பதவி பேரம் நாற்காலி பஞ்சாயத்து எல்லாம் முடிந்துள்ளது.

வெற்றி பெற்று 2 மாதங்களை நெருங்கும் வேளையில் மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்.எல்.ஏ. செல்வம் சபாநாயகர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

எதிர்கட்சிகளின் சார்பில் வேட்புமனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே சபாநாயகராக செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சபாநாயகர் தேர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க சட்டசபை இன்று காலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கூடியது.

தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆகியோர் செல்வத்தை அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.

தொடர்ந்து முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபாநாயகரை வாழ்த்தி பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது திமுக காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம் பேசும்போது…

“சபாநாயகர் செல்வம் திமுகவின் தொகுதி செயலாளராக இருந்ததை தற்காலிக சபாநாயகர் சொல்ல மறந்து விட்டார் என குறிப்பிட்டு பேசினார்.

அப்போது பேசிய செல்வம்..”திமுக-வில் இருந்தால் அப்படியே தான் இருந்து இருப்பேன். 36 ஆண்டுகளாய் திமுகவில் தொகுதி செயலாளராக மட்டுமே இருந்தேன்.

ஆனால் பாஜகவிற்கு வந்த பிறகு இந்த பெரிய பதவி கொடுத்து இந்த இயக்கம் பாஜக” எனக் கூறினார்.

BJP’s R Selvam elected Speaker of Puducherry Assembly

கௌதம் ஷிவத்மிகா வெண்பா இணையும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’..; நெகிழ்ந்து பாராட்டும் ஒளிப்பதிவாளர்

கௌதம் ஷிவத்மிகா வெண்பா இணையும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’..; நெகிழ்ந்து பாராட்டும் ஒளிப்பதிவாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bala Baraniநடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்க இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக திண்டுக்கல் மாநகரில் துவங்கி, தீவிரமாக நடந்து வருகிறது.

40 க்கும் மேற்பட்ட பிரபல நட்சத்திர கூட்டத்துடன், குடும்ப சித்திரமாக உருவாகி வரும் இப்படத்தை ‘மிக மிக அவசரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படங்களின் ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

குடும்ப படங்களை தனித்துவமான ஒளியமைப்புடன், வடிவமைப்பதில் புகழ்பெற்ற அவர் இப்படம் அனைவர் நெஞ்சங்களையும் ஈர்க்கும் படைப்பாக இருக்குமன்று பாராட்டியுள்ளார்.

படம் குறித்து ஒளிப்பதிவாளர் பொர்ரா பாலபரணி கூறியதாவது…

மிக மிக சந்தோஷமான தருணம் என்னெவெனில் நான் வளர்ந்த இடத்தில் நான் புழங்கிய தெருக்களில் படப்பிடிப்பு நடத்துவதுதான்.

திண்டுக்கல் எனது சொந்த ஊர் இப்போது “ஆனந்தம் விளையாடும் வீடு” படப்பிடிப்பு முழுதும் அங்கே தான் திட்டமிட்டு நடத்திவருகிறோம்.

நான் வளர்ந்த இடத்தில் எனக்கு தெரிந்த வாழ்க்கையை படமாக்குவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இதற்கு முன் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் சில பகுதிகள் மட்டும் இங்கு நடத்தினோம்.

ஆனால் இப்போது முழுப்படமும் இங்கே படப்பிடிப்பு நடத்துகிறோம்.

இயக்குநர் நந்தா பெரியசாமி பல வருடங்களாக எனது நெருங்கிய நண்பர். இந்தக்கதை குறித்து பல முறை என்னிடம் விவாதித்துள்ளார். மிக அழகான குடும்பக்கதை.

படமாக்கும்போதே கண்களில் கண்ணீர் தேங்கும், பல ஆழமான, நெகிழ்வான தருணங்கள் படத்தில் இருந்தது. கண்டிப்பாக குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் வெற்றிப்படமாக இப்படம் இருக்கும்.

40 க்கும் மேற்பட்ட நட்டத்திர நடிகர்களுடன் 50 நாட்களில் படத்தின் படப்பிடிப்பை முடிக்க, படக்குழுவுடன் இணைந்து திட்ட்டமிட்டோம்.

இந்த கடினமான சூழலில் படப்பிடிப்பு மிக சவாலானாதா இருந்தது. இதற்கு முன் பெரும் நட்சத்திர கூட்டத்துடன் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம் படங்கள் செய்த அனுபவம் உதவியாக இருந்தது.

மேலும் நான் ஒளிப்பதிவாளர் MS பிரபு அவர்களிடம் உதவியாளராக மகாநதி முதல் ரமணா வரை பெரிய படங்களில் இணைந்து பணியாற்றியிருந்தது மிக சிறந்த அனுபவ பாடங்களை கற்றுதந்திருந்தது.

இப்படத்தை தயாரிப்பாளரை மகிழ்விக்கும் வகையில், திட்டமிட்ட பொருட்செலவில், இயக்குநரின் விருப்பப்படி மிக அழகாக படமாக்கியிருக்கிறேன்.

இது வரையிலும் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் பணியாற்றியுள்ளேன். “ஆனந்தம் விளையாடும் வீடு” அதில் தனித்துவமான படமாக இருக்கும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி, இயக்கும் இப்படத்தினை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P.ரங்கநாதன் தயாரிக்கிறார். சித்து குமார் இசையமைக்க, பொர்ரா பால பரணி ஒளிப்பதிவு செய்கிறார்.

பாடல்களை சினேகன் எழுதுகிறார். ஷிவத்மிகா ராஜசேகர் நாயகி பாத்திரத்தில் நடிக்கிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என ஒரு பெரும் நடச்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளது.

Cinematographer Bala Barani about his current work in Anandham Vilayadum Veedu

More Articles
Follows