JUST IN ‘சின்ன கலைவாணர்’ விவேக் திடீர் மரணம்..; அவரின் வாழ்க்கை பாதை ஒரு பார்வை

JUST IN ‘சின்ன கலைவாணர்’ விவேக் திடீர் மரணம்..; அவரின் வாழ்க்கை பாதை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சின்ன கலைவாணர்’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று முன் தினம் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டார்.

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த

இந்நிலையில் இன்று குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு விவேக் மயங்கி விழுந்துள்ளார்.

தற்போது சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது…

கொரோனா தடுப்புபூசிக்கும் நடிகர் விவேக்கின் உடல்நிலை கோளாறுக்கும் சம்பந்தம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு வரும் போதே சுயநினைவு அற்ற நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார் விவேக்.

நடிகர் விவேக் அவர்களுக்கு கொரோனோ அறிகுறி இல்லை.

எக்மோ கருவி மூலம் அவரது உடல் தற்போது வரை சீராக உள்ளது. எக்மோ சப்போர்ட்டில் அவர் இருக்கிறார்.

100% ரத்த குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது அவரின் உடல் நிலை மோசமாக உள்ளது. 24மணி நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.”

இவ்வாறு மருத்துவர் ராஜு சிவசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று ஏப்ரல் 17ல் அதிகாலை 4.45 மணிக்கு விவேக் காலமானார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

விவேக் பற்றிய குறிப்புகள்…

*பத்மஸ்ரீ * விவேக்

1961 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி கோயில்பட்டிஅருகே உள்ள பெருங்கோட்டூர் சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் இவர். இவருடைய முழு பெயர் விவேகானந்தன்.

இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.

மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வர்த்தக இளங்கலைத் துறையில் பி.காம் பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

சிறிது காலம், தொலைப்பேசி ஆபரேட்டராக மதுரையில் வேலைப் பார்த்தார். அதன் பிறகு, சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி குரூப் நான்கு தேர்வில் வெற்றிப் பெற்று, சென்னைத் தலைமை செயலகத்தில் ஜூனியர் உதவியாளராகப் பணியில் சேர்ந்தார்.

ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க, அவருடைய இயக்கத்தில் உருவான ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானார்.

அந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நடித்த இவர் மீண்டும் கே.பாலசந்தர் இயக்கிய ‘புது புது அர்த்தங்கள்’ படத்தில் நடித்து பிரபலமானார்.

அந்தப் படத்தில், இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரைப் பிரபலப்படுத்தியது.

(ஆரம்பத்தில் படங்கள் இல்லாத போது மேல்மாடி காலி என்கிற சின்னத்திரை நாடகத்தில் நடித்திருக்கிறார்.)

அதன் பிறகு ‘ஒரு வீடு இரு வாசல்’, ‘புது மாப்பிள்ளை’, ‘கேளடி கண்மணி’, ‘இதய வாசல்’, ‘புத்தம் புது பயணம்’ எனப் பல படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள், சாமி போன்ற படங்களில் நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, ரசிகர்களை சிரிக்க வைத்ததோடு, சிந்திக்கவும் வைத்தார்.

லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு இவருடைய நகைச்சுவை காட்சிகள் இடம் பெற்றன.

தமிழில் ரஜினி, விஜய், அஜித் முதல் தனுஷ் உடன் வரை நடித்துவிட்டார்.

ஆனால் கமலுடன் இணையவில்லை. இந்தியன் 2 படத்தில் அந்த வாய்ப்பை இயக்குனர் ஷங்கர் வழங்கியிருந்தார். அந்த படத்தின் சூட்டிங் இதுவரை முடியவில்லை.

அனைத்து முன்னணி கதாநாயகர்களின்  படங்களிலும் நடித்துள்ள இவரை, பஞ்சு படத்தின் மூலம் கதாநாயகனாக நடிக்க வைக்க முயற்சி செய்தார் கவிஞர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை.

அதன் பிறகு சொல்லி அடிப்பேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் இன்னும் வெளியாக வில்லை.

அதன் பிறகு நடித்த ’நான்தான் பாலா’, ’பாலக்காட்டு மாதவன்’ போன்ற படங்கள் வெளியாகி இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை கலைஞனாக தன்னுடைய ஆளுமையை கோலோச்சி வரும் விவேக், சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு, ‘நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் (மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆலோசனைப்படி) சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்’ எனக்கூறி அவ்வப்போது இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

சினிமா ரசிகர்கள் இவரை ‘சின்னக் கலைவாணர்’ என்றும், ‘மக்களின் கலைஞன்’ என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.

திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு இவருக்கு ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கி கௌரவித்தது.

‘உன்னருகே நானிருந்தால்’, ‘ரன்’, ‘பார்த்திபன் கனவு’, ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக தமிழ் நாடு அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.

2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப் படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘ஃபிலிம்ஃபேர் விருது’ பெற்றார் இவர்.

இவரது மனைவி பெயர் அருள்செல்வி. இவருக்கு அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்கிற இரு மகள்களும், பிரசன்ன குமார் என்கிற ஒரு மகன் இருந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

Veteran Tamil Actor Vivek passes away

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்கள்..; ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்

புதுச்சேரியில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்கள்..; ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisaiபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடமாடும் கொரோனா தடுப்பூசி மையங்களின் தொடக்க விழா நடைப்பெற்றது.

இதில் கலந்துக் கொண்டார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

அப்போது கொரோனா நடமாடும் தடுப்பூசி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், கொரோனாவை கட்டுப் படுத்துவதில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்” எனவும் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுறுத்தினார்.

Mobile vaccination centre in pondy inaugurated by Governor

தலைவி-குயின் படங்களுக்கு தடை கேட்ட ஜெ. தீபா..; கோர்ட் அதிரடி தீர்ப்பு

தலைவி-குயின் படங்களுக்கு தடை கேட்ட ஜெ. தீபா..; கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thalaivi (1)மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பல இயக்குனர்கள் திரைப்படமாக உருவாக்கி வருகின்றனர்.

ரம்யா கிருஷ்ணன் நடிக்க ‘குயின்’ என்ற வெப் சீரிஸ் தொடரை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் எடுத்து அதை வெளியிட்டார்.

‘தி ஐயர்ன் லேடி’ என்ற பெயரிலும் ஒரு படம் உருவாகி வருகிறது.

தமிழில் ‘தலைவி’ என்ற பெயரில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

ஹிந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் விஷ்ணு வர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்கும் படங்களுக்கும், இணையதளத் தொடருக்கும் தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ‘தலைவி’, ‘ஜெயா’, ‘குயின்’ படங்களை வெளியிடத் தடை விதிக்க முடியாது.

மேலும், படம் முழுக்க முழுக்கக் கற்பனையானது என டைட்டில் கார்ட் திரையிட உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் ஜெ.தீபா.

இத்துடன்…“இந்த படங்களில் தங்களுடைய குடும்பத்தினர் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். படத்தை வெளியிடுவதற்கு முன்பாக தனக்குப் போட்டுக்காட்டி ஒப்புதல் பெற உத்தரவிட வேண்டும்” என தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

ஏ.எல்.விஜய் தரப்பில்… ‘தலைவி’ என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

தீபாவிடம் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலிதாவை நல்ல முறையில் சித்தரித்துள்ளோம். எதிர்காலச் சந்ததியினர் அவரைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் வகையில் எடுத்துள்ளோம்” என விளக்கம் அளித்துள்ளார்.

கௌதம் மேனன் தரப்பில்,…

“இந்த படத்தை சென்சார் போர்டு பார்த்து அவர்கள் சென்சார் செய்வார்கள்.

தடை கேட்க தீபாவுக்கு உரிமையும் கிடையாது” என தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறாக சம்பந்தப்பட்ட வாதங்கள் முடிவடைந்தது.

இந்த நிலையில், ‘தலைவி’, ‘குயின்’, ‘ஜெயா’ படங்களுக்கு தடை விதிக்க முடியாது.” என தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்..

High court dismisses ban on Thalaivi and Queen films

கொரோனா தடுப்பூசி போட்டதால் நடிகர் விவேக்கிற்கு ஹார்ட் அட்டாக்.? மருத்துவர்கள் விளக்கம்

கொரோனா தடுப்பூசி போட்டதால் நடிகர் விவேக்கிற்கு ஹார்ட் அட்டாக்.? மருத்துவர்கள் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vivek (2)சின்ன கலைவாணர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விவேக்.

இவர் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று கொரோனா தடுப்பூசி கொண்டார்.

இந்நிலையில் இன்று குடும்பத்தினருடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு விவேக் மயங்கி விழுந்துள்ளார்.

தற்போது சென்னையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறியதாவது…

கொரோனா தடுப்புபூசிக்கும் நடிகர் விவேக்கின் உடல்நிலை கோளாறுக்கும் சம்பந்தம் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனைக்கு வரும் போதே சுயநினைவு அற்ற நிலையில் தான் அனுமதிக்கப்பட்டார் விவேக்.

நடிகர் விவேக் அவர்களுக்கு கொரோனோ அறிகுறி இல்லை.

எக்மோ கருவி மூலம் அவரது உடல் தற்போது வரை சீராக உள்ளது. எக்மோ சப்போர்ட்டில் அவர் இருக்கிறார்.

100% ரத்த குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தீவிர மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் 5.8 லட்சம் நபர்கள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். எனவே இதற்கும் மாரடைப்புக்கும் சம்பந்தம் இல்லை.

தற்போது அவரின் உடல் நிலை மோசமாக உள்ளது. 24மணி நேரம் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.”

இவ்வாறு மருத்துவர் ராஜு சிவசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Hospital press release regarding comedy Actor Vivek

ரொமான்டிக் படத்தில் இணையும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் & புகழ்.; ஹீரோயின் யார்.?

ரொமான்டிக் படத்தில் இணையும் ‘குக் வித் கோமாளி’ அஸ்வின் & புகழ்.; ஹீரோயின் யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

cook with comali ashwin and pugazh (1)Trident Arts நிறுவனம் புதுமையான, மிகவும் வித்தியாசமான கதைகளம் கொண்ட படங்களை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கொண்ட படங்களை தொடர்ந்து தந்து வரும் நிறுவனம்.

Trident Arts தயாரிக்கும் படங்களுக்கு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பு உள்ளது.

அந்த வரிசையில் Trident Arts நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பாக “Production No 7” ஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் மற்றும் புகழ் முன்னணி பாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர்.

பிரபல நடிகை நாயகியாக நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

விளம்பர பட இயக்குனராக பணியாற்றிய ஹரிஹரன், இந்த படத்தினை எழுதி, இயக்குகிறார்.

இப்படம் ரொமான்டிக், காமெடி படமாக உருவாகுகிறது.

மே 2021 இறுதியில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு, முழுக்க, முழுக்க சென்னையில் படமாக்க படவுள்ளது.

படம் குறித்து Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R. ரவீந்திரன் கூறியதாவது….

Trident Arts நிறுவனத்தில் எப்பொழுதும் புது விதமான கதைகளை படமாக்க, ஆவலாக உள்ளோம்.

இயக்குனர் ஹரிஹரன், இந்த கதையை விவரிக்கும் போது காதல், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை அம்சங்கள் நிறைந்த ஒன்றாக இருப்பதை உணர முடிந்தது.

இப்பொழுது தமிழகத்த்தில் ஒவ்வொரு வீட்டிலுள்ளோர்க்கும் மிகப்பிடித்தவர்களாக மாறியுள்ள, அஸ்வின் மற்றும் புகழ் போன்ற சிறந்த கலைஞர்களை, ஒன்றாக இந்த படத்தில் கொண்டுவருவதில், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இப்படப்பிடிப்பை மே மாத இறுதியில் தொடங்கவுள்ளோம்.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரத்தை கூடிய விரைவில் அறிவிப்போம்.

Cook with comali fame Ashwin and Pugazh joins for a new film

விக்ரம் பிரபு உடன் 3 ஹீரோயின்ஸ் இணையும் ‘பகையே காத்திரு’

விக்ரம் பிரபு உடன் 3 ஹீரோயின்ஸ் இணையும் ‘பகையே காத்திரு’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pagaiye Kathiru (2)கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ‘பகையே காத்திரு’.

விக்ரம் பிரபு வித்தயாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம், இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் நிறைந்த சமூகப் படமாகவும் உருவாகுகிறது.

கதாநாயகியாக ஸ்மிருதி வெங்கட், இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் தமிழ் திரைப்படங்களில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் சிவா ஷாரா, பாலா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு செல்வக்குமார்.S ஒளிப்பதிவு செய்ய, ஷாம் C.S இசையமைக்கிறார்.

பிரமாண்டமான அரங்குகளை கலை இயக்குனர் M.சிவா யாதவ் அமைக்க, எடிட்டிங் ராஜா முஹமது, அதிரடியான சண்டைக்காட்சிகளை திலீப் சுப்ராயன் அமைக்க உள்ளார்.

A.ஜெய்சம்பத் நிர்வாக தயாரிப்பை ஏற்கிறார். லைன் புரொடியூசராக செல்வக்குமார்.S.

மேலும் பல தொழில்நுட்ப கலைஞர்கள் கொண்டு உருவாகி கொண்டிருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் A.மணிவேல் இயக்குகிறார்.

இவர் காக்கி என்னும் குறும்படத்தை இயக்கியவர். இப்படம் கொச்சின், ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

இப்படத்தை கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராசி முத்துசாமி தயாரிக்கிறார்.

இப்படத்தின் துவக்க விழா வெள்ளிக்கிழமை (16.04.2021) இன்று காட்டுப்பாக்கத்தில் உள்ள படப்பிடிப்பு பங்களாவில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே மாதம் இறுதி வரை தொடர்ந்து நடைபெறும்..

Vikram Prabhu to romance 3 heroines in Pagaiye Kathiru

More Articles
Follows