தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பழம்பெரும் இந்தி நடிகர் ஓம்புரி இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.
இத்தகவலை பிரபல தயாரிப்பாளரும், அவரது நண்பருமான அசோக் பண்டிட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நடிகர் நடிகைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்…
ஓம் புரி மறைவுக்கு நடிகர் சமூகத்துக்கும் திரை மற்றும் நாடக துறைக்கும் மாபெரும் இழப்பாகும்.
அவரது மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவிப்பதோடு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
என்று நடிகர் சங்கம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓம்புரி பற்றிய சில குறிப்புகள்…
1950-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18-ந்தேதி அரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்தார்.
புனே பிலிம் இன்ஸ்டிடி யூட்டில் படித்தார்.
இவருடன் இணைந்து படித்தவர்தான் நடிகர் நஸ்ருதீன்ஷா.
1982-ம் ஆண்டு சர்ரிச் சர்டு அட்டன்பரோ இயக்கிய காந்தி படத்தில் ‘நகாரி’ என்ற கதாபாத்திரத்தில் ஓம்புரி நடித்தார்.
1982, 84-ம் ஆண்டுகளில் இருமுறை மத்திய அரசின் சிறந்த நடிகர் விருது, 1990ல் பத்மஸ்ரீ விருது ஏராளமான பிலிம்பேர் விருதுகள் பெற்றவர்.
பல ஆங்கிலப் படங்களிலும், பஞ்சாபி, உருது, மராத்தி, மலையாளம், கன்னட மொழிப்படங்களிலும் ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
1982இல் ஓம்புரி நடித்த “அர்த் சத்யா” இந்திப் படத்தைத்தான் இயக்குனர் பாலுமகேந்திரா 1993-ல் “மறுபடியும்“ என்ற பெயரில் தமிழில் படம் எடுத்தார்.
ஓம்புரி 1993-ம் ஆண்டு நந்திதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு இஷான் என்ற ஒரு மகன் உள்ளார்.
2013ல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு ஓம்புரி தனியாக வசித்து வந்தார்.
Veteran actor Om Puri passes away