தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஐசரி கணேஷ் தயாரிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் பழைய தலைப்பை நீக்கிவிட்டு புதிய தலைப்பான ‘வெந்து தணிந்தது காடு’ என தலைப்பிட்டு சில தினங்களுக்கு முன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
எவருமே எதிர்பாராத வகையில் சிம்பு ஸ்லிம்மாகி பாலா பட நாயகன் போல இருந்தார்.
இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் நாவல் ஒன்றை தழுவி உருவாகிறதாம்.
இதன் படப்படிப்பும் திருச்செந்தூரில் தொடங்கி விட்டது.
இந்த நிலையில் இதே தலைப்பில் ஒரு படம் தயாராகி உள்ளது. இது இலங்கை தமிழர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எழுத்தாளர் கவிதா பாரதி தெரிவித்துள்ளதாவது…
“இயக்குனர் கவுதம் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோருக்கு ஒரு வேண்டுகோள். மதிசுதா என்பவர் ஈழத்து திரைக்கலைஞன். இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட தம்பி, வேறு எந்தத் தொழிலையும் பாராமல் திரைத்துறைக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட இளைஞன். உலகளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
எனினும் ஈழத்திரையுலகம் வணிக ரீதியாக வருமானம் தருமளவுக்கு விரிந்து பெருகவில்லை. ஒருபுறம் தனது சொந்த வாழ்க்கைக்கும், மறுபுறம் படத்தயாரிப்புச் செலவுகளுக்கும் சிரமமான சூழலிலேயே தம்பி மதிசுதா செயல்படுகிறான் இந்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் சிறு அளவில் நிதிதிரட்டிப் படமெடுத்து அதனை வெளியிடப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அந்த படத்தின் பெயர், வெந்து தணிந்தது காடு. இந்நிலையில் இதே தலைப்பில் தங்கள் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனால் ஓடிடி தளத்தில் படத்தை விற்பதில் சிக்கல் நேர்ந்துள்ளது. மதிசுதாவின் படம் குறித்த தகவல் உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம்.
யானையின் காலில் சிக்கி புலிக்குட்டிகள் உயிரிழந்துவிடக்கூடாது.
இவ்வாறு கவிதா பாரதி தெரிவித்துள்ளார்.
vendhu thaninthathu kaadu team is in trouble