தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
JUST IN ‘ஜெயிலர் 2’ வாய்ப்பில்லன்னு நெல்சன் சொன்னாரு.; ஏ சர்டிபிகேட் ஏன்? – வசந்த் ரவி
தரமணி & ராக்கி உள்ளிட்ட படங்களின் நடித்தவர் நடிகர் வசந்த் ரவி.. இவரது நான்காவது படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
நெல்சன் இயக்கிய ஜெய்லர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகிய பொன் ஒன்று கண்டேன் என்ற படம் OTT-யில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் இன்று வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் வசந்தி ரவி.
அப்போது அவர் பேசியதாவது..
என்னுடைய எல்லா படங்களுக்கும் பத்திரிகையாளர்கள் நீங்கள் மாபெரும் ஆதரவு தந்து வருகிறீர்கள் அதற்கு நன்றி.
பெரும்பாலும் என்னுடைய பல படங்களுக்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் கிடைக்கிறது. தரமணிக்கு ஏன் சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.
ராக்கி படத்தில் நிறைய வயலன்ஸ் இருந்தது.. ஆனால் அஸ்வின் படத்தில் நான் ஒரு தற்கொலை செய்து கொள்வதாக ஒரு காட்சி இருக்கும்.. அதனால் அதற்கு A சர்டிபிகேட் கிடைத்தது
எல்லாவிதமான சப்ஜெக்ட் கதைகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.. அதற்கான கதைகளும் அமைய வேண்டும்.. அதற்கான இயக்குனர்கள் அமைய வேண்டும்.
பெரும்பாலும் என்னை சாக்லேட் பாயாகவும் ஜாலியான கேரக்டராகவும் பார்க்க விரும்புகிறார்கள் ரசிகர்கள்.. அதுவும் விரைவில் நடக்கும் என நம்புகிறேன்.
ஜெயிலர் 2 நடக்குமா என்பதை பற்றி என்னால் சொல்ல முடியாது..அது பற்றிய செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.. ஆனால் அதன் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.. நெல்சன் அது பற்றி அறிவிப்பை தரவில்லை.
அதேசமயம் கேரளாவில் ஜெயிலர் படம் ஷூட்டிங் நடைபெற்ற போது நான் நெல்சன்யிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது… எனக்கு ஜெயிலர் பார்ட் 2 நடக்கும் என்று தோன்றுகிறது என்று நினைத்தேன்.. அவரிடம் சொன்னேன். அதற்கு அவர்.. ஜெயிலர் பார்ட் 2 நடக்கும் என தோன்றவில்லை.. வாய்ப்பில்லை என்றார்”
மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் நடிகர் வசந்த் ரவி..
Vasanth Ravi open talk about Jailer 2