தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக ஓரிரு படங்களில் நடித்தவர் பவுலின் ஜெஸிகா எனும் தீபா.
அண்மையில் ரீலீசான ‘வாய்தா’ என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்தும் இருந்தார்.
இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தீபா கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில், ‛‛தான் ஒருவரை உயிருக்கு காதலித்ததாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த காதல் கைகூடவில்லை என்பதால் இந்த உலகை விட்டு பிரிந்து செல்வதாகவும், தனது தற்கொலை முடிவிற்கு யாரும் காரணமில்லை” எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Vaitha Tamil movie heroine commits suicide