தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை நாடெங்கிலும் அதிகரித்து வருகிறது.
இஸ்ரேல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அவரவர் நாட்டு மக்களை இந்தியா செல்ல அனுமதி மறுத்துள்ளது.
இந்த நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது 3ஆவது கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என மத்திய அரசு உத்தரவு அளித்துள்ளது.
நம் இந்திய திருநாட்டில் வாக்களிக்க தகுதியான வயது 18 என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
இந்த உத்தரவுக்கு முன்பே 25 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி நிச்சயம் போட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Vaccine for all above 18 starting May 1