இங்க மன்னராட்சியா நடக்குது? விஷாலை விமர்சித்த சிம்புவின் தாயார்.; என்னதான் நடந்துச்சு.?

இங்க மன்னராட்சியா நடக்குது? விஷாலை விமர்சித்த சிம்புவின் தாயார்.; என்னதான் நடந்துச்சு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கி வரும் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதனிடையில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி எல்லாத்துக்கும் சிம்பு தான் காரணம் என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

சிம்புவுக்கு ரெட் கார்ட் போட்டாச்சு… அவர் பட சூட்டிங்க்கு FEFSI தன் ஊழியர்களை அனுப்பக்கூடாது” என தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை போட்டது..

பின்னர் ஐசரி கணேஷ் சமாதானம் பேசுவிடவே பெப்ஸி தலைவர் ஆர்.கே.செல்வமணி தன் சங்க ஊழியர்களை (உறுப்பினர்கள்) அனுப்பினார். இதனால் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

இந்த பிரச்சினை குறித்து சிம்பு எதுவும் பேசாத நிலையில் தன் மகன் சிம்புவுக்காக மெளனம் கலைத்தார் உஷா டி. ராஜேந்தர்.

விஷாலை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அதாவது,…

“அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தின் தோல்வி அடைந்தது ஒன்று. அப்படத்தில் சிம்புவின் சம்பளமாக 3.5 கோடி ரூபாய் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனிடன் பேசியுள்ளார்.

படத்தை குறித்த நேரத்திலும் முடித்து கொடுத்தும் சம்பளத்தை கொடுக்காமலும் படத்தை வெளியிடாமலும் இருந்துள்ளார் தயாரிப்பாளர்.

படம் ரிலீஸ் அன்னைக்கு ராத்திரி அந்தத் தயாரிப்பாளர், ‘இந்த பணத்தை சிலம்பரசன் விட்டுக் கொடுத்தா மட்டுமே படத்தை ரிலீஸ் பண்ண முடியும்’னு சொன்னார்.

இதுபத்தி எல்லாரும் சிலம்பரசன்கிட்ட ‘என்ன பண்னலாம்பா’னு கேட்டோம். சிம்பு அந்தப் பணத்தை விட்டுக் கொடுக்கலாம்னு சொல்லிட்டார். படத்தை ரிலீஸும் பண்ண வெச்சார்.

இதனால் நடிகர் சங்கத்தில் சிம்பு புகாரளித்திருந்தார். பின் கொடுத்த சம்பளத்திற்கு ஜிஎஸ்டியும் கட்டல டிடிஎஸ்சும் கட்டல என்று கூறியுள்ளார் சிம்பு தாயார்.

மேலும், தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த விஷால் சிம்பு ஒரு படத்தினை மைக்கேல் ராயப்பனுக்கு சம்பளம் இல்லாமல் பண்ணித்தர வேண்டும் அல்லது வேறொருவரின் படத்தில் நடிக்கும் போது 2 கோடி 40 லட்ச ரூபாய் அவருக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தை போட்டுள்ளார்.

விஷால் என்ன சுப்ரீம் கோர்ட் ஜர்ஜா, இதற்கு அப்பீலே கிடையாதா என்று் ஆதங்கமாக பேசியிருந்தார்.

விஷால் தயாரிப்பாளர் ட்ரஸ்சில் இருந்து 7 கோடி ரூபாயை பல விதத்துல விரயம் பண்ணீவிட்டார். அதற்கு கணக்கு காட்டாம இருந்த விஷாலுக்கு ரெட் கார்ட் இல்ல சிம்புவிற்கு ரெட் கார்ட்டா?

இதனால என்ன நடக்கணும்னு எதிர்பார்க்கறீங்கன்னு எனக்கு புரியல.

யார் படத்துக்கும் ‘ரெட்’ கார்டு போடுறதும் தப்புதான். அது விஷாலா இருக்கட்டும் அல்லது யாரா வேணா இருக்கட்டும். ‘ரெட்’ என்பது தவறான விஷயம்”

என்று ஆதங்கமாக பேசியுள்ளார் உஷா.

Usha Rajendar condemns Vishal’s act

‘அண்ணாத்த’ அப்டேட்..: ரஜினியுடன் இணைந்த விஜய்-கார்த்தி பட வில்லன்..; ரசிகர்கள் டென்ஷன்

‘அண்ணாத்த’ அப்டேட்..: ரஜினியுடன் இணைந்த விஜய்-கார்த்தி பட வில்லன்..; ரசிகர்கள் டென்ஷன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி, பாலா என நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சிவா இந்த படத்தை இயக்க இமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தில் இயக்குனர் சிவாவின் தம்பியும் நடிகருமான பாலாவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இவர் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது என கூறியிருந்தார் பாலா.

வீரம் படத்தில் அஜித்தின் தம்பிகளில் ஒருவராக நடித்தார் பாலா என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவர் ‘அண்ணாத்த’ படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2021 தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ படம் ரிலீஸ் என்பதால் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று படம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது.

மீனா உள்ளிட்டவர்களின் டப்பிங் பணிகள் முடிவடைந்துவிட்டதாக தகவல்களும் படங்களும் ரிலீசாகின.

இதனிடையில் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்ய வேண்டும் என ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் கார்த்திக்கின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மற்றும் விஜய்யின் ‘வேலாயுதம்’ படங்களில் வில்லனாக நடித்த இந்தி நடிகர் அபிமன்யூ சிங் படத்தில் இணைந்துள்ளார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

படம் முடிஞ்சுட்டு சொன்னாங்க இப்போ கேரக்டர் அப்டேட் பண்ணீங்களேன்னு ரஜினி ரசிகர்கள் டென்ஷனில் உள்ளனர்.

Rajini and Karthi film villain joins Annaatthe shoot

‘யூகி’ படத்தில் மீண்டும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி.; நட்டி & நரேனுடன் கூட்டணி

‘யூகி’ படத்தில் மீண்டும் ‘பரியேறும் பெருமாள்’ ஜோடி.; நட்டி & நரேனுடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதிர், நரேன் மற்றும் நட்டி நடிக்கும் ‘யூகி’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர், 2021 ஆகஸ்ட் 13 அன்று, தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கும் ‘யூகி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

Forensic மற்றும் Kala போன்ற வெற்றிப்படங்களை தந்த Juvis Productions நிறுவனம் UAN Film House மற்றும் AAAR Productions நிறுவனங்களுடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறது.

‘யூகி’ படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஏற்கெனவே ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதிர் & ஆனந்தி இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் ‘யூகி’ படத்தினை இயக்குகிறார்.

தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார்.

இதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்து, ஜாக் ஹாரிஸ் இயக்கிய மலையாளப் படத்தில் ‘ஜகமே தந்திரம்’ நட்சத்திரம் ஜோஜு ஜார்ஜ், நரேன் மற்றும் ஷர்புதீன் நடித்திருந்தனர்.

பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டது.

Yuki starring Kathir Narain and Natty has been unveiled by the makers on the 13th of August 2021

‘காற்றிலே…’ பாடலுக்கு கை கொடுத்த பாடகர் உன்னிகிருஷ்ணன் & நடிகை சொர்ணமால்யா

‘காற்றிலே…’ பாடலுக்கு கை கொடுத்த பாடகர் உன்னிகிருஷ்ணன் & நடிகை சொர்ணமால்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெளிநாடுகளைப் போல இங்கேயும் சுதந்திரப் பாடல்கள், ஆல்பங்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

ஹாலிவுட் திரையுலகில் திரை நுழைவிற்கான ஒரு முன்னோட்டமாக குறும்படங்களும் ஆல்பங்களும் இருப்பது போல் இங்கேயும் அந்தப் போக்கு தொடங்கியுள்ளது.

அந்த வகையில் தனது திறமைக்கு ஒரு முன்னோட்டமாக பிரகலாத் ராகவேந்திரன் இசையமைத்துள்ள தனிப் பாடல்தான் ‘காற்றிலே’.

ஒரு பாடகராக இவர் பல இசையமைப்பாளர்களிடம் பாடியிருக்கிறார்.
இப்போது
பாடகரிலிருந்து இசையமைப்பாளராக
மாறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் குறும்படங்கள், வெப் சீரிஸ், விளம்பரங்கள் போன்றவற்றிற்கு இசையமைத்துவருகிறார்.

அவரது ‘காற்றிலே’ தனிப்பாடலை முகுந்தன் ராமன் எழுதியிருக்கிறார். பிரதீப் குமார் பாடி இருக்கிறார்.

இப்பாடல் ரீதிகௌளை ராகத்தை ஆதாரமாகக் கொண்டு இனிய காதல் கீதமாக உருவாகியுள்ளது.

இது மியூசிக் மேஜிக் நிறுவன ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன் இவரது இசையில் உன்னிகிருஷ்ணன் ‘கலர் கனவே’ என்ற பாடல் பாடிவெளியாகி இருக்கிறது .

உன்னி கிருஷ்ணன் தன் மகள் உத்ராவுடன் அப்பா மகள் பாசத்தைப் பற்றிய பாடலான ‘என் மகளே’ என்கிற பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்தடுத்து பாடல்கள் வெளிவர உள்ளன.

இந்தக் ‘காற்றிலே’
பாடல் 13ஆம் தேதி உலக மக்கள் செவிகளுக்கு விருந்தாக வெளியாகி உள்ளது.

‘காற்றிலே’தனிப்பாடலின் லிரி கல் வீடியோவைப் பாடகர் உன்னிகிருஷ்ணனும் நடிகை சொர்ணமால்யாவும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலைக் கேட்டு ரசித்துப் பாராட்டி இசையமைப்பாளர் பிரகலாத் ராகவேந்திரனை வாழ்த்தியுள்ளனர்.

காற்றிலே தனிப்பாடல் இப்போது காற்று மண்டலத்தில் கலந்து அலையடிக்க ஆரம்பித்துள்ளது.

Unni Krishnan and Sornamalya joins for independent song

கைது செய்வது கனவில்தான் நடக்கும்.; சவால் விட்ட மீரா மிதுனை கைது செய்த சைபர் க்ரைம் போலீஸ்

கைது செய்வது கனவில்தான் நடக்கும்.; சவால் விட்ட மீரா மிதுனை கைது செய்த சைபர் க்ரைம் போலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி தன்னை எப்போதும் சமூக வலைத் தளங்களில் பேச வைப்பவர் நடிகை மீரா மிதுன்.

சமீபத்தில் தலித் இன மக்களைப்பற்றி இழிவாக பேசியிருந்தார்.

எனவே மீரா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

எனவே இதுதொடர்பாக மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது.

இதனையடுத்து ஒரு வீடியோ வெளியிட்டார் மீரா.

அதில்..

‛‛நான் ஒட்டுமொத்த பட்டியல் இன மக்களை பற்றி தவறாக பேசவில்லை. என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றி மட்டும்தான் பேசினேன்.

என்னை கைது செய்ய வேண்டும் என சிலர் சொல்கிறார்கள். தாராளமாக கைது செய்யுங்கள்.

ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகலையா..? என்னை கைது செய்ய ஒரு சூழல் எனக்கு வராது. என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில் தான் நடக்கும். தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்” என போலீசுக்கு சவால் விடும் வகையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் கேரளாவில் நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Actress Meera Mithun arrested in Kerala by Chennai cyber crime police.

#MeeraMitun

கொல்கத்தாவில் வளரும் ‘கோப்ரா’..; விரைவில் வரும் விக்ரம்.!

கொல்கத்தாவில் வளரும் ‘கோப்ரா’..; விரைவில் வரும் விக்ரம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் நடிப்பில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’.

இந்த படத்தை ‘டிமாண்டி காலனி’ & ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

விக்ரமிற்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார்.

இதில் விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. மேலும் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதன் படப்பிடிப்பு சென்னை, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் ’கோப்ரா’ பட இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் தொடங்குகின்றனர்.

இதற்காக, அஜய் ஞானமுத்து உள்ளிட்ட படக்குழுவினர் அங்கு சென்று உள்ளனர்.

விரைவில் விக்ரமும் கொல்கத்தா சென்று அங்கு படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

Chiyaan Vikram’s cobra shoot updates

More Articles
Follows