தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தாணு தயாரப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘கர்ணன்’ படம் கடந்த ஏப்ரல் 9ல் ரிலீசானது.
கொரோனா காலம் என்பதால் படத்திற்கு பெரிய ஓபனிங் இருக்காது என சிலர் நினைத்த நிலையில் ‘கர்ணன்’ வசூல் வேட்டையாடி வருகிறான்.
ஏப்ரல் 9 ரிலீஸ் முதல் நாளில் தமிழகம் முழுவதும் ரூ 10.20 கோடிகளை வசூலித்துள்ளது. தனுஷ் படம் ஒன்று முதல் நாளில் 10 கோடியை கடப்பது இதுவே முதல்முறை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் உதயநதி படத்தை பார்த்துவிட்டு கூறியுள்ளதாவது….
‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது.
நண்பர் @dhanushkraja,அண்ணன் @theVcreations, இயக்குநர்@mari_selvaraj மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
1995 அதிமுக (ஜெயலலிதா) ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் (திமுக கருணாதிதி) கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது.
இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.
இவ்வாறு உதயதிநி் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Udhayanidhi condemns Dhanush Karnan movie mistake