தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிகை பாவனா.
தமிழில் தீபாவளி, அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் மர்ம நபர்களால் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
இச்செய்தி கேரளா மற்றும் தமிழக நடிகைகளையும் ரசிகர்களையும் ஆழ்த்தியுள்ளது.
அதன் விவரம் வருமாறு…
பாவனா சென்ற காரை திடீரென மர்ம கும்பல் வழி மறித்தது.
பின்னர் காரில் ஏறிக் கொண்டு டிரைவரையும் நடிகையும் மிரட்டியுள்ளனர்.
அதன்பின்னர் பாவனாவுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தனர்.
இதனிடையில் பாவனைவை விதவிதமாக போட்டோ எடுத்துள்னர்.
சிறிது நேரம் சென்றதும், காரை நிறுத்தி கீழே இறங்கியது அந்த கும்பல். அதன்பின்னர் வேறு ஒரு காரில் அவர்கள் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
அதன்பின்னர் காவல்துறைக்கு பாவனா தகவல் கொடுத்துள்ளார்.
இதில் டிரைவருக்கு தொடர்பு உள்ளதா என்ற அடிப்படையில் அவரை கைது செய்து தீவிர விசாரணையில் போலீஸ் இறங்கியுள்ளது.
Actress Bhavana Kidnapped and Molested