தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமானது க்யூப், யு.எஃப்.ஓ உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருவதால் மார்ச் 1ம் தேதி முதல் எந்தவொரு புதுப்படங்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழக திரையரங்க உரிமையாளர்கள் அரசுக்கு எதிராக மார்ச் 16ம் தேதி முதல் வேலை நிறுத்ததில் ஈடுபடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் சென்னை ரோகினி திரையரங்கில் நடைபெற்றது.
180க்கும் மேற்பட்ட திரையரங்கு உரிமையாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதில்…
1. 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.
2. பெரிய திரையரங்குகளில் இருக்கைகளைக் குறைக்க அனுமதி தரவேண்டும்.
3. 3 வருடங்களுக்கு ஒருமுறை லைசென்ஸை புதுப்பிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் வைப்பது என முடிவு செய்யப்பட்டது.
தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்ட அடிப்படையில், ஒருவார காலத்திற்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும்.
அப்படி ஆணை பிறப்பிக்கவில்லை என்றால், மார்ச் 16ஆம் தேதி முதல் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை திரையரங்களை மூடுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது மேலும் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.