தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க போடப்பட்ட ஊரடங்கால் கிட்டத்தட்ட 7 மாதங்களாக இந்தியா முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் அக்டோபர் 1-ம் தேதி முதல் மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்குச் செல்லலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில்… அக்டோபர் 1ஆம் தேதி முதல் 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள பள்ளிக்கு வரலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் பள்ளிகள் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் போது 50 சதவிகித ஆசிரியர்களை அனுமதிக்கலாம் என்றும் ஏற்கனவே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைய சூழ்நிலையில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகளை மட்டுமே திறக்கலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்:
இரண்டு பிரிவுகளாக வகுப்புகளை பிரித்து நடத்தலாம் என்று வகுப்புகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ளது.
அதன்படி ஒரு பிரிவு மாணவர்களுக்கு திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் இரண்டாவது பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு வர வைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் பள்ளிகளில் மாணவர்கள் 6 அடி இடைவெளி விட்டு பள்ளிகளில் அமர வைக்க வேண்டும்.
மாணவர்கள் ஆசிரியர்கள் பள்ளிக்குள் வருவதற்கு முன்பு அவர்களுடைய உடல் வெப்பநிலையை சோதனை செய்ய வேண்டும்.
மாணவர்கள் வருகைப் பதிவேட்டிற்கான பயோ மெட்ரிக் பதிவு முறையை பயன்படுத்துதல் கூடாது.
பள்ளிகளுக்கு வரக்கூடிய ஆசிரியர்கள் மாணவர்கள் அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துவதற்கான கிருமிநாசினி சோப் போன்றவற்றை பள்ளிகளில் வைத்திருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
TN Schools set to reopen from Oct 1 for classes 10 to 12- check complete SOPs here