தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போடப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தீபாவளி சமயத்தில் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இதன் முடிவில் பள்ளிகள் திறக்க அதிகப்படியான பெற்றோர்கள் & மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பள்ளிகள் திறப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தற்போது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வருகிறது.
இந்த நிலையில் பள்ளிகள் திறக்க இரண்டாம் கட்ட பெற்றோர்கள் கருத்து கேட்பு இன்று ஜனவரி 6 முதல் வருகிற 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இன்று நடைபெற்ற கருத்து கேட்பின் படி தமிழகத்தில் 10,11, மற்றும் 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் வருகிற ஜனவரி 18-ஆம் தேதி திறக்கப்படும் எனவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை முதல்வர் விரைவில் வெளியிடுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
TN Schools likely to reopen after Pongal