தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தும் கொரோனாவின் 2வது அலை தற்போது உருவெடுத்துள்ளது.
தற்போது தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 2000-ஐ தாண்டிவிட்டது.
கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி, கொரோனா பரவலை தடுக்க முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இப்போது, இதே மார்ச் மாதம், மீண்டும் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
இதனால் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆனால் அரசாங்கமோ அரசியல் கட்சியினரோ கொரோனா அச்சுறுத்தலை அலட்சியம் செய்து வருகின்றனர்.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் பிரசார நேரத்தை குறைக்கலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்க சொல்லலாம்.
தங்கள் கூட நிறைய நபர்களை கூட்டம் கூட்டமாக அழைத்து செல்லாமல் குறைவாக கூட்டலாம்.
மேலும் பணமும் குவார்ட்டரும் பிரியாணியும் கொடுக்கும் அரசியல் கட்சியினர் மக்களுக்கு மாஸ்க் கொடுக்கலாமே என்பதே அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்.
பொதுமக்களும் தங்கள் சமூக பொறுப்பை உணர வேண்டும்..
TN Politicians Election Campaign and Corona Virus Spread updates