தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா பொது முடக்கத்திலும் தமிழக அரசு மே.7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்தது.
இதனையடுத்து மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுக்களை வாங்கிசென்றனர்.
இதில் கொரோனா தொற்றை தடுக்க சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தில் பொது முடக்கம் முடியும் மே 17-ம் தேதி வரையில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தனர்..
ஆனால், ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்வதற்கு உத்தரவிட்டனர்.
ஆனாலும் ஆன்லைனில் தற்போதைக்கு மதுபானம் விற்பது சாத்தியமில்லை எனவும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் வாதம் செய்தது.
ஆன்லைனின் மதுக்கள் விற்றால் சட்டம் ஒழுங்கு, மது கடத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படிதான் மாநிலத்தில் மதுக்கடை திறக்கப்பட்டது என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, உச்சநீதிமன்றம் நீதிபதிகள், மதுபானக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக்கில் சரக்கடிக்க புது வழிமுறைகளை வகுத்துள்ளது அரசு.
அதாவது… மதுவாங்க ஞாயிறு முதல் திங்கள் வரை வண்ண டோக்கன்கள் வழங்க டாஸ்மாக் ஏற்பாடு செய்துள்ளது.
சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், காக்கி, வைலட், பிங்க் ஆகிய 7 வண்ணங்களில் மது வாங்க டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட வண்ண டோக்கன் உள்ளவர்கள், குறிப்பிட்ட நாளில் டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கிக் கொள்ளலாம்.
மதுக்கடைகளில் நாளொன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
Attachments area