தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
தற்போது அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 19ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிப்பு.
எதற்கு அனுமதி.? எதற்கு தடை.?
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தடை நீட்டிப்பு.. திரையரங்குகளை திறக்க தடை நீட்டிப்பு
புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைக்கு தடை.
புதுச்சேரி மாநில (காரைக்கால் உட்பட) பேருந்து சேவை தொடங்கப்படுகிறது
திருமண நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
இறுதி சடங்குகளில் 20 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர அனைத்து பகுதிகளிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட
செயல்பாடுகளுக்கு தொடர்ந்து அனுமதி.
மத்திய உள்துறை அமைச்சக்கத்தால் அனுமதிக்கப்பட்ட வழிதடங்களை தவிர சர்வசேத விமான போக்குவரத்து, திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம் அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியில் பூங்காங்கள் ஆகியவற்றுக்கான தடை தொடரும்.
மேலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்பு தொடர்பான எழுத்து தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த அனுமதி
உணவகங்கள், தேநீர் கடைகள், அடுமனைகள், நடைபாதை கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை வழக்கமான நிபந்தனைகளுக்குட்பட்டு 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கைசுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
குளிர்சாதனவசதி பயன்படுத்தப்படும் இடங்களில் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறக்கப்பட்டு போதுமான காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூகஇடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரேநேரத்தில் அதிகப்படியான நபர்களைஅனுமதிக்கக்கூடாது.
கடைகளின் நுழைவுவாயிலில்பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் நடவடிக்கைகளுக்கு முழுஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
TN Govt extended Covid lockdown till 19th July 2021