தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2020 மார்ச் மாதம் 17ந் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன.
கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு கடந்தாண்டு நவம்பர் 10 முதல் தமிழக அரசு தளர்வுகளை அறிவித்து திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது.
50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயங்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதியளிக்கப்பட்டது.
எனவே இரண்டு இருக்கைகளுக்கு நடுவில் உள்ள இருக்கையில் ரிப்பன் கட்டியும் இருக்கையில் தடுப்பு வைத்தும் தடுத்து வைத்தும் தியேட்டர்கள் இயங்கி வந்தன.
இதனால் சிறிய படங்கள் மட்டுமே தியேட்டர்களில் ரிலீசாகின.
இந்த நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என விஜய், சிம்பு உள்ளிட்ட திரையுலகினர் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்
இவர்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
சினிமா தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுடன் படங்கைளை பார்க்க தமிழக அரசு அனுமதி அளித்து இருந்தது.
திரையரங்கு என்பது மூடிய அரங்கு என்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் மத்திய அரசும் தமிழக அரசின் உத்தரவை கண்டித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது 100% அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு.
ஆனால் சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி அளித்துள்ளது.
பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் & சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் தியேட்டர்களில் ரிலீசாகிறது.
TN government announced only 50% occupancy till next announcement